#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க நடந்து முடிந்த2026 சட்டமன்ற தேர்தலின் வெற்றி வாய்ப்பை தவற விட்டதை ஆலோசனை செய்ய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட திரு சி. பி. எம். எழிலரசன் ( EX MLA கழக கொள்கை பரப்பு செயலாளர்) மற்றும் மாநில மாணவர் அணி துணை செயலாளர் மன்னை சோழராஜன் ஆகியோர் ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் ஆய்வு கூட்டத்தினை நடத்தி மனுக்களை பெற்று கொண்டு தனித்தனியாக கருத்துக்களை கேட்டறிந்தனர் . இக்கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் சு. முத்துசாமி அவர்கள், தொகுதி பொருப்பாளர் தமிழ்ச்செல்வன், மாநில நெசவாளர் அணி செயலாளர் SLT. சச்சிதானந்தம் , வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர். இடம்: அன்பகம் உதயம் இளைஞர் அணி அலுவலகம், மொடக்குறிச்சி.