அம்மை ஆச்சி நேசன்
598 views
6 hours ago
திருகோகர்ண நாயகி அம்மை ஆச்சியின் அமுது செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 79வது திருத்தலம் திருக்கோகரணம் அருள்மிகு கோகர்ணநாயகி உடனுறை மகாபலநாதர் மரம்: வில்வம் கோடி தீர்த்தம் பாடல் எண் 1 பண் சாதாரி என்றும அரியான அயலவர்க்கு இயல் இசை பொருள்களாகி எனது உள் நன்றும் ஒளியால் ஒளிசிறந்த பொன் முடிக்கடவுள் நண்ணும் இடமாம் ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீட அரவமார் குன்றுகள் நெருங்கி விரி தண்தலை மிடைந்து வளர் கோகரணமே பொழிப்புரை: சிவபெருமான் அடியார் அல்லாதவர்க்கு எப் பொழுதும் காண்டற்கு அரியவன். இயற்றமிழும், இசைத்தமிழும் ஆகி எனது உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவன். பொன்போன்று ஒளிரும் சடைமுடியுடைய அக்கடவுள் வீற்றிருந்தருளும் இடமாவது, ஒன்றிய மனமுடைய அடியவர்களுடன் தேவர்களும் கூடியிருந்து பரவுகின்ற குன்றுகளும், சோலைகளும் விளங்கும் திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும். #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய