திருநீற்றுச் சுவடு
570 views
5 days ago
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 ###motivationalquotes #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 விநாயகர் வழிபாடு... துன்பங்கள் நீங்கி.. சகல நலன்களையும் பெற.. விநாயகரை இப்படி வழிபடுங்கள்..!! ✨விநாயகர் முழுமுதற் கடவுள், யானை முகத்தோன், தடைகளை நீக்குபவன் எனப் பல திருநாமங்களால் போற்றப்படுபவர். எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்பும் விநாயகரை வழிபடுவது நமது மரபு. ✨குறிப்பாக, புதன் கிழமை விநாயகருக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் அவரை வழிபடுவது எண்ணற்ற நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை. புதன் கிழமையின் சிறப்பு: ✨வாரத்தின் ஏழு நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு உரியதாகக் கருதப்படுகிறது. ✨புதன் பகவான் அறிவு மற்றும் ஞானத்தின் கிரகம். விநாயகர் ஞானத்தின் நாயகன். எனவே, புதன் கிழமையில் புதன் பகவானையும், விநாயகரையும் வழிபடுவது அறிவாற்றலை வளர்க்கும். குறிப்பாக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. ✨மேலும், புதன் கிழமை சுபகாரியங்கள் தொடங்குவதற்கும், புதிய முயற்சிகள் மேற்கொள்வதற்கும் உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. விநாயகரின் அருளால் அனைத்து தடைகளும் நீங்கி, காரியங்கள் வெற்றியடையும் என்பது ஐதீகம். அரச இலை வழிபாடு: 🍃நம் வாழ்க்கையில் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டு கொண்டு இருந்தால் அதனை நீக்கக்கூடிய சக்தி கொண்டவர் விநாயகர் ஆவார். இவரை தொட்டு வணங்கி வழிபட்டால் எந்தவொரு காரியத்தை செய்தாலும் அதில் தோல்வி என்பதே இருக்காது. 🍃இத்தகைய விநாயகரின் அம்சமாக விளங்கும் அரச இலை ஒன்றை பறித்து வைத்து, அரச மரத்தடி விநாயகரை வழிபட்டால் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும் என்கிற ஐதீகம் உண்டு. அதே போல அரச இலையை வைத்து செய்யப்படும் இந்த பரிகாரமும் வேண்டிய வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றி தரும் அதீத சக்தி கொண்டுள்ளது. 🍃ஒரு அரச மர இலையை நன்கு சுத்தம் செய்து விநாயகருக்கு முன்பாக ஒரு தாம்பூல தட்டில் வைத்து கொள்ளுங்கள். தாம்பூல தட்டு மற்றும் விநாயகருடைய அரச மர இலைக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கொள்ளுங்கள். பின்னர் தாம்பூல தட்டு முழுவதும் வாசனை மிகுந்த உதிரி பூக்களால் அலங்கரித்து, இலையின் மீது அகல் விளக்கு ஒன்றை வைத்து, பொட்டிட்டு அலங்கரித்து, நல்லெண்ணெய் ஊற்றி பின்னர் மஞ்சள் நிற பஞ்சு திரியால் தீபம் ஏற்றி வையுங்கள். 🍃பின்பு இதற்கு தூப, தீப, ஆரத்தி காண்பிக்க வேண்டும். மஞ்சள் நிற பஞ்சு திரி இல்லை என்றால் வெள்ளை நிற திரியை மஞ்சளில் தோய்த்து நன்கு உலர வைத்து தீபம் ஏற்றலாம். இந்த மஞ்சள் நிற திரியை பயன்படுத்தி புதன்கிழமைகளில் விநாயகருக்கு தொடர்ந்து அரச இலையில் தீபம் ஏற்றி வந்தால், எத்தகைய பாவங்களும் நீங்கி காரிய தடைகள் அகன்று செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும். 🍃மேலே குறிப்பிட்ட இந்த செயல்கள் நம் பாவங்களையும், நம் முன்வினைகளையும் போக்க கூடிய மிக சக்தி வாய்ந்த பரிகாரம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். முடிந்தளவு இவற்றை செய்து வர வாழ்வில் நல்ல மாற்றங்களும், கடவுளின் ஆசியும் பெறலாம். விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: 🙏விநாயகரை வழிபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். கவலைகள் நீங்கி, நிம்மதியான வாழ்க்கை அமையும். 🙏வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்தநிலை மாறி லாபம் பெருகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். 🙏வீட்டில் செல்வம் பெருகும். 🙏எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். 🙏குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். 🙏