🌿 இன்றைய தேவ வார்த்தை 🌿
📖 வேத வசனம்
"நம்முடைய அடைக்கலமும் பலனும், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர் தேவனே."
— சங்கீதம் 46:1
🎙️ தேவனுடைய செய்தி
அன்பானவர்களே,
மனித வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள், துக்கங்கள், கடன்கள், நோய்கள், குடும்ப போராட்டங்கள், மனவேதனைகள் வரலாம்.
சில நேரங்களில் “எனக்கு வழியே இல்லை” என்று தோன்றலாம்.
ஆனால் நினைவில் கொள்ளுங்கள் —
மனிதன் கைவிட்டாலும் தேவன் ஒருபோதும் கைவிடமாட்டார்.
நம்முடைய எல்லா இக்கட்டுகளிலிருந்தும் நம்மை மீட்டு, கண்ணீரை துடைத்து, புதிய வழியை திறந்து, வாழ வைக்கிறவர் கர்த்தரே.
இன்று உங்கள் பிரச்சனைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தேவனுக்கு முன் அவை தூசியும், துகளுமே. நம் தேவனால் ஒரு நொடியில் பிரச்சனையை காணாமல் போக பண்ண முடியும்,
அவர் ஒரு வழியில்லாத இடத்திலும் வழியை உண்டாக்குவார்.
உடைந்த மனதை சுகப்படுத்துவார்.
தோல்வியை ஜெயமாக மாற்றுவார்.
இன்று விசுவாசத்துடன் சொல்லுங்கள்:
"என் உதவி மனிதரிடமிருந்து அல்ல, தேவனிடமிருந்தே வருகிறது."
கர்த்தர் உங்களை எல்லா இக்கட்டுகளிலிருந்தும் மீட்டு, சமாதானத்தோடும் ஆசீர்வாதத்தோடும் நடத்துவாராக. ஆமென்!
-- ✍️சகோ சுதாகர் காட்வின்
🔥ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்
#சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #நம்பிக்கையுடன் வாழ்த்து செய்தி