#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
இடையகோட்டை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது
ஓட்டன் சத்திரம், ஜூன். 23
திண்டுக்கல்
மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி இடையகோட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இடையகோட்டை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்குதல் நிகழ்ச்சி இடையகோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த அன்னதானம் நிகழ்விற்கு ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய கழகத்தின் செயலாளர் தினேஷ் குமார் அவர்கள் தலைமை தாங்கி பிறந்தநாள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கு முன்னிலையாக கில்லி என்ற (ராஜா கோபால், மற்றும் கோபி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர.மேலும் தமிழக வெற்றி கழகத்தினுடைய நிர்வாகிகள் வல்லரசு, கனகராஜ், பொம்மு ராஜ், தினேஷ், நிதீஷ், மதன், கவியரசு, பாபு, கோபி, தமிழ் கதிரவன் போன்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இந்த மாபெரும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புத்ததுடன் பொதுமக்களுக்கு சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.