Makkal Mugam
2.8K views
13 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 காங்கிரஸ் மூத்த உறுப்பினர் தி.மு.க .வில் இணைந்தார். தூத்துக்குடி, மே. 21 - தூத்துக்குடியில் காங். முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ் முரளிதரன் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி மாநகர மாவட்ட முன்னாள் தலைவர் சி.எஸ் முரளிதரன் மற்றும் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் அக்கட்சியிலிருந்து விலகி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், மண்டல தலைவர் ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, விவசாய அணி தலைவர் பாலசுப்பிரமணியன் இளைஞர் காங். செயலாளர் ஜெயகிங்ஸ்டன், 27 வார்டு தலைவர்கள் உட்பட பலர் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை கருப்பு, சிவப்பு சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வரவேற்று உற்சாகப் படுத்தினார். நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.