💘💞Par Tha💞💘
626 views
10 hours ago
மோகனுக்கு பட்டி பாக்க தெரியாது. ஏணியில் ஏறி வேலை செய்ய தெரியாது. ஆனால் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுடைய மேஸ்திரி ஒரு குடிகாரன். குடித்து விட்டு வீட்டிலேயே படுத்திருப்பான். இன்ஜினியருக்கும், வீட்டுகாரனுக்கும் மோகன்தான் மேஸ்திரி மாதிரி. ஒருநாள் இன்ஜினியர், மேஸ்திரியை துரத்திவிட்டு மோகனை மேஸ்திரியாக்கி விட்டார். புதுசா மேஸ்திரியான மோகனோட பலவீனங்கள் என்னவென்று ஆட்களுக்கு தெரியும். அதனால் மேஸ்திரி பட்டி பாருங்க. ஏணியில ஏறுங்கன்னு அவனை ஓட்ட ஆரம்பித்தனர். இது வீட்டுகாரனுக்கு முன்னாலும், இன்ஜினியருக்கு முன்னாலும் நடந்தால் தனக்கு நல்லதில்லை என்று நினைத்தவன், ஒவ்வொரு ஆளாக வேலையை விட்டு நிறுத்தி விட்டு புதுபுது ஆட்களை உள்ளே கொண்டு வந்தான். புதிதாக வருபவர்கள் மேஸ்திரிக்கு எல்லா வேலையும் தெரியும் போலன்னு நினைச்சு, அவனிடம் பணிவாக நடந்து கொண்டனர். கீழேயிருந்து மேலே போகிறவன் முதலில் தன்னுடன் இருப்பவர்களைத்தான் கழட்டி விடுவான். அதுவே மனித சுபாவம். எடப்பாடியும் இதற்கு விதிவிலக்கில்லை.! #🤔தெரிந்து கொள்வோம்