#nee neeyaaga iru athu pothum. வரட்டும் நீங்கள் போகாதீர்கள்.
நீங்கள் முன்னணிக்கு வர வேண்டுமென்றால், எதிராளி உங்களிடம் வந்து மாட்டும்படி செய்ய வேண்டுமே, தவிர நீங்கள் போய் எதிராளியிடம் மாட்டிக்*ன கொள்ளக்கூடாது.
சூழ்ச்சி வலை பின்னுவது என்பது இதுதான்.
எதிரியாக இருப்பவன், தன்னுடைய திட்டம், தன்னுடைய எதிர்காலம் இதை எல்லாம் விட்டுவிட்டு அல்லது மறந்து விட்டு உங்களை திட்டத்திற்கு இரையாக வேண்டும்.
அவனுக்கு ஆசை காட்ட வேண்டும். என்னென்ன லாபங்கள் அவனுக்கு உண்டு, என்று பொய்களைப் பரப்பி, அவனை மடக்கியபின், அழித்து ஒழிப்பது தான் பல அரசியல்வாதிகளின் சாதனையாக இருந்து வருகிறது.
நீங்கள் விரித்த வலையில்,
எதிராளி விழும் வரைக்கும் காத்திருப்பது.
குறுகிய காலத்தில் வெற்றி பெற வேண்டும் என்று, நினைக்காமல் நீண்டகாலம் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று உறுதி பூணுவது.
மற்றவர்களின் செயல்களுக்கு நீங்கள் ரியாக்ட் பண்ணாதீர்கள்.
உங்கள் செயல்களுக்கு மற்றவர்கள் ரியாக்ட் செய்யட்டும்.
இதற்கு இரண்டு தேவை.
ஒன்று எதைக் கண்டும் நீங்கள் கோபப்படாதீர்கள்.
மற்றது உங்கள் தந்திரத்தைப் பார்த்து மற்றவர்கள் கோபப்படட்டும்.
அப்போது தான் அவர்களாகவே, உங்கள் வலையில் விழுந்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள். 😊😊😊