ஜாதகம் இல்லாதவர்கள்.
ராசி நட்சத்திரம் கூட தெரியாதவர்கள்.
எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று கேட்கிறார்கள்..
பொதுவாக...
இறைவனை வணங்குவதற்கு
ஜாதகமோ ராசி நட்சத்திரமோ தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
ஜாதகம் இருப்பவருக்கு ஆயிரம் கவலை.
ஜாதகம் இல்லாதவருக்கு
ஜாதகம் இல்லையே என்கிற ஒரே கவலை.
அந்த வகையில்...
பொதுவாக...
இறைவனை வழிபடுவதற்கு தூய்மையான பக்தி மட்டும் இருந்தால் போதும்.
இருப்பினும் ...
அவரவர்களுக்கு ஏற்பட்ட ... ஏற்பட்டுக் கொண்டிருக்கிற ...
மன வேதனையினாலும் குழப்பத்தினாலும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருக்கக்கூடிய நிலையினாளும்.
இப்படிப்பட்ட கேள்விகள் எழுகின்றன.
அந்த நிலையில் இருக்கக்கூடிய அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில்.
பிரம்ம முகூர்த்தத்தில் படைத்த பிரம்மனை....
ஓம் பிரம்ம தேவனே போற்றி என பிரம்மனை போற்றி வணங்குதல்.
கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரிய பகவானை சூரிய உதயத்தில் வணங்குதல்.
மூன்றாம் பிறை சந்திரனை தரிசனம் செய்து வணங்குதல்.
பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல முடிந்தவர்கள் செல்லலாம்..
முடியாத பட்சத்தில் வீட்டு மொட்டை மாடியில் பௌர்ணமி சந்திரனுக்கு சர்க்கரைப் பொங்கல் படையல் வைத்து தாயாருடனும் மனைவியுடனும் சேர்ந்து வழிபடுவதால் பொன்னும் பொருளும் சேர்வதுடன் மன நிம்மதியும் கிடைக்கும்.
சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்று தியானம் மற்றும் வழிபாடு செய்தல்.
அனைத்திற்கும் மேலாக
சனிக்கிழமை வரக்கூடிய
சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ வழிபாடும்.
சனிக்கிழமை வரக்கூடிய
பெருமாளுக்கு உரிய ஏகாதசி வழிபாடும்.
செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் வரக்கூடிய சஷ்டி வழிபாடு.
போன்றவற்றை செய்து வந்தால்...
பிரார்த்தனைகள் நிறைவேறி
நன்மைகள் நடந்து
வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு விடையும் கிடைத்து...
வழியும் பிறக்கும்.
எது எப்படி இருந்தாலும்
எதைத்தொடர்ந்தாலும்..
அதற்கு முன்...
தினசரி விநாயகர் வழிபாடு
மிக மிக முக்கியம்.
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
#🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்