திருநீற்றுச் சுவடு
797 views
17 days ago
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #💥ஓம் ந ம சி வா ய💥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 பூசித்தல் (சிவபூசை)* *தலைவனே* *வழிகாட்டி* சகல உயிரினங்கள் முதல் விநாயகர், முருகன், பிரம்மா, அம்பிகை, விஷ்ணு, மற்றும் தேவர்கள் என அனைவரும் சிவபெருமானை பூசித்து பலன் பெற்றுள்ளனர். ஆனால், சிவபெருமான் தன்னைத் தானே பூசித்த தலம் மதுரை. இங்கு #இம்மையில்_நன்மை_தருவார் என்னும் பெயரில் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள கருவறையில் சிவபெருமானும், பார்வதியும் வீற்றிருக்க, அவர்களின் முன்னிலையில் சிவலிங்கம் உள்ளது. மதுரையின் மன்னராக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வந்த சிவபெருமான், இத்தலத்தில் சிவபூசை செய்ததாக நம்பப்படுகிறது. ஆவணி மூலத்திருவிழா அன்று, சொக்கநாதரும், மீனாட்சியும் இக்கோவிலுக்கு எழுந்தருள்வர். அவர்கள் முன்னிலையில் இம்மையில் நன்மை தருவாருக்கு பூசை நடக்கும். அன்றிரவு சொக்க நாதருக்கு பட்டாபிசேகம் செய்யப்படும். இது போன்றே திருவையாறு, திருவிடைமருதூரிலும் சுவாமி சிவபூசை செய்த தல புராணங்கள் உண்டு. திருவையாறில் தன்னைத்தானே பூசித்தல் நிகழ்வு சித்திரை மாதத் திருவிழாவில் வெகுசிறப்பாக நடைபெறும். திருச்சிற்றம்பலம்