திமுக ஒப்பாரி வைப்பதை மக்கள் ரசிக்கவில்லை!
அதற்கு 'வெள்ளை அறிக்கை' விரைவில் பதில் சொல்லும்.
லஞ்சம் இல்லாத ஆட்சி, போதையில்லா தமிழகம் மற்றும் இளைஞர் முன்னேற்றம் ஆகியவையே விஜய் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிடப்பட் அரசின் தொலைநோக்குத் திட்டங்களின் அடித்தளம்.
தமிழக மின்வாரியத்தில் ஹார்டு டடிஸ்குகள் காணாமல் போனது, அதையொட்டி அடாவடித்தனமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுவது, அலுவலக சோதனைகளில் CCTV கேமராக்கள் பழுதடைந்து கிடப்பதாக வரும் செய்திகள், பல்வேறு துறைகளில் ஃபைல்கள் காணாமல் போனது, ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்த அரசினை செயல்பட விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் காய்கள் நகர்த்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது.
ஆட்சியின் மீது சேற்றை வாரிப் பூசி, தவெக ஆட்சி செய்யத் தகுதியில்லாத கட்சி என்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க ஊடக பலமுள்ள ஒரு சாரார் முயல்கிறார்கள். அவர்களுக்கு அரசு அதிகாரிகளின் மறைமுக ஆதரவு இருக்கலாம் என்று சிலரால் சொல்லப்பட்டாலும், IAS அதிகாரிகள் துரோகத்திற்குத் துணைபோகமாட்டார்கள் என நம்பலாம்.
ஆ. ராசா போன்றவர்கள் விஜய்யின் திறமையைப் பற்றி வைக்கிற கடுமையான மற்றும் கேவலமான விமர்சனங்கள் மக்களின் மனதில் வெறுப்பைத்தான் சம்பாதித்துக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.
பிறகு?
அமைச்சரவை விரிவாக்கம் மே மே 22, 2026 தேதி முடிந்து, இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு 15 நாட்கள்கூட ஆகவில்லை. முதல் மந்திரிசபைக் கூட்டமே இன்றுதான் (5 ஜூன் 2026) நடந்தது. அதற்குள் ஆட்சி சரியில்லை, விஜய் வேஸ்ட் என்ற ஒப்பாரி!
ஏற்கனவே கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டு சென்றுள்ளது திமுக அரசு. இந்த லட்சணத்தில் ஈவிரக்கமின்றி ஏகப்பட்ட புகார்களுடன் இவர்கள் ஒப்பாரி வைப்பதை மக்கள் ரசிக்கவில்லை. சட்டம்-ஒழுங்கு பற்றி முன்னாள் திமுக அமைச்சர்கள் இவ்வளவு அவசரம் அவசரமாக தேவையற்ற மற்றும் கடுமையான விமர்சனங்களை வைப்பதில் இருந்து அவர்களது நோக்கமும் ஆட்சியை இழந்ததன் எரிச்சலும் தெரிகிறது.
எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்விருக்கும் என்பார்கள். ஆனால், எல்லா தீர்வுகளிலும் பிரச்சினைகள் இருக்கும் என்பதும் உண்மை. ஆப்பிரிக்க நாடுகள் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து சுதந்திரம் பெற்றன. ஆனால் அந்த நாடுகளில் அவற்றால் உருவான பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. அன்று கொரியாவை இரண்டாகப் பிரிப்பது ஒரு தீர்வாகக் காணப்பட்டது. இன்று அதே வடகொரியா அமெரிக்காவிற்கும் தென்கொரியாவுக்கும் பிரச்சினையாக இருக்கிறது.
அதேபோல, திமுக ஆட்சியை அகற்றுவதே தமிழகத்தை குடும்ப ஆட்சியிலிருந்து காக்கும் தீர்வாக அமையும் என்று மக்கள் கருதியதால் தவெகவும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் பல்வேறு துறைகளிலும் திமுக போட்டு வைத்துவிட்டுப் போன "படுமுடிச்சுகளும்" பதித்து வைத்த "கண்ணிவெடிகளும்" கொஞ்ச நஞ்சம் இல்லை என்பதால்தான் விஜய் "வெள்ளை அறிக்கை" பற்றிப் பேசினார்.
திமுக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடிபட்ட புலிபோல ஆக்ரோஷத்துடன் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. பல இடங்களில் அரசுக்கு எதிராக மக்களையும் தூண்டி விடுகிற வேலைகளை செய்வதாகக் கூறப்படுகிறது.
அடுத்து விஜய்க்கு எதிராக அண்ணாமலை களத்திள்கு வருகிறார். அவருக்கெதிராக திமுக என்ன செய்யப்போகிறது?
திமுகவின் உண்மையான சொரூபம் மக்களுக்கு புரிந்து, அது முற்றிலும் ஓரம் கட்டப்படும்போதுதான் தமிழகத்திற்கு நிரந்தரமான தீர்வு கிட்டும். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டு கட்சி காணாமல் போன வரலாற்றை திமுக புரிந்துகொண்டு நடக்குமா?
#திமுக #DMK #தவெக #TVK #விஜய் #ஸ்டாலின் #தமிழகம் #குடும்பஆட்சி #செந்தில்பாலாஜி
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை