#நல்லதே பேசு நல்லதே நினை நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழா: மணமக்களை வாழ்த்திய முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த வை. பன்னீர்செல்வம் – மாலதி தம்பதியரின் மூத்த மகனும், மக்கள் வெளிச்சம் புகைப்படக் கலைஞருமான ப. விஜய் மற்றும் ம. சங்கவி ஆகியோரின் திருமணம் வரவேற்பு விழா 29.05.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் பாண்டிச்சேரி – விழுப்புரம் மெயின் சாலையில் அமைந்துள்ள வடமங்கலம் ஸ்ரீ கோடீஸ்வரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமூகப் போராளி நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, அவர்களின் இல்லற வாழ்க்கை இனிதே அமைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், முஸ்லிம் மக்கள் கழகத்தின் திண்டிவனம் நகர துணைத் தலைவர் இ. சர்தார் அஹமத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி நிகழ்வை சிறப்பித்தனர்.
மகிழ்ச்சியும், உறவினர்களின் வாழ்த்தொலிகளும் நிறைந்த இந்த திருமணம் வரவேற்பு விழா, அனைவரின் பாராட்டையும் பெற்றது.