Makkal Mugam
473 views
16 hours ago
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 கரூர் செய்தியாளர் மரியான் பாபு முன்னாள் முதல்வரின் பிறந்தநாள் விழா.. கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லமான அன்புக்கரத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவின் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. அதேபோல் கரூரில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் திமுக சார்பில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த மறைந்த கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்களை தூவி திமுக நிர்வாகிகள் "கலைஞர் புகழ் வாழ்க வாழ்க" என கோஷங்களை எழுப்பினர்.பின்பு கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.பொதுமக்களுக்கு கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகளை வழங்கினார்.இதில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.