saravanan.
606 views
1 days ago
#sinthanay kalam. களம். விடாமுயற்சியைப் பற்றி விவாதிக்கும் போது ஒரு கருத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.விடா முயற்சி செய்யும் போது அதற்கு முன்பே நமக்கு ஏற்பட்ட தோல்விகளின் மூலம் பாடம் கற்க வேண்டும் . ஒரு நண்பர் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப்பகுதியில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார் , அவருடைய வியாபாரம் சரியாக நடைபெறாமல் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தது , விடா முயற்சி செய்கிறேன் என்று நினைத்த நண்பர் அடுத்த நாள் முதல் அந்த மலையின் உச்சியில் ஐஸ் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது .பிறகு அங்கே மீன் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டமே ஏற்பட்டது . நண்பர்களே அந்த நண்பர் ஏற்பட்ட தோல்வியில் இருந்து சரியாகப் பாடம் கற்கவில்லை. அவர் செய்ய வேண்டியது என்னவென்றால், முதலில் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வந்து தன்னுடைய தொழிலை துவங்கி இருக்க வேண்டும் .இந்த நண்பரைப் போலவே வாழ்க்கையில் நம்மில் சிலர் ஏற்பட்ட தோல்வியில் சரியாகப் பாடம் கற்காமல் விடா முயற்சி செய்கிறேன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று விரக்தி அடைகிறோம் . உங்களுடன் படித்த ஒருவர் வெற்றி அடைகிறார் என்றால் உங்களாலும் வெற்றி அடைய முடியும்.உங்களுடன் பணிபுரியும் ஒருவர் முன்னேறுகிறார் என்றால் உங்களாலும் முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் துறையில் ஒருவர் பலகோடி ருபாய் சம்பாதிக்கிறார் என்றால் உங்களாலும் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான் அவர் தொழில் செய்யும் முறையைக் கற்க வேண்டும். அவரை விட சிறப்பாக செய்யும் முறையை ஆராய்ந்து விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி உங்களுக்கே . 😊😊😊