saravanan.
506 views
1 days ago
#paraattuhall kollvom. மனமும் பாராட்டுதலுக்காக ஏங்குகின்றது என்றால் அது முற்றிலும் உண்மையே சிலர் பணத்திற்காக வேலை செய்வார்கள் ஆனால் பாராட்டுக்காக உயிரையே விடுவார்கள் பாராட்டுதல் நல்ல நட்பை ஏற்படுத்தும் நட்பைத் தொடர வைக்கும் நட்பை மகிச்சியுற வைக்கும் நம்மையும் மகிழ்ச்சியுற்று இருக்க வைக்கும் பாராட்டுதலில் இரு வகை உண்டு 1. போற்றிப் பாராட்டுதல் 2. நன்றி பாராட்டுதல் இவ்விரெண்டு பாராட்டும் குணமும் நம்மிடம் இருந்தால் நட்பில் நன்மை மட்டும் நிலவும் பாராட்டுதலுக்கு ஏதோவொன்றை சாதித்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை ஒருவருடைய பெயரைக் கேட்டுக் கூட நல்ல அருமையான பெயர் என்று பாராட்டலாமே மிகவும் எளிய உடை அணிந்திருந்தால் கூட இது தான் மிகவும் பொறுத்தமாக இருக்கிறது என்று பாராட்டலாமே ஒவ்வொரு சூழலையும் தந்த இயற்கை அன்னைக்கு நன்றி பாராட்டலாமே இயற்கையோடு இணையச் செய்த நண்பர்களுக்கு நன்றி பாராட்டி நட்பைப் போற்றிக் காத்துக் கொள்ளலாமே சின்னச் சின்ன விஷயங்களில் தானே பெரிய பெரிய சந்தோஷம் இருக்கிறது. இதை உணர்ந்து தெளிந்தால் எந்நாளும் கொண்டாட்டமும் குதூகலமும் தானே நீடித்து நிலைக்கும் பாராட்ட அனைவராலும் முடியும் அதை யாரும் வேண்டாம் என்று கூற மாட்டார்கள் நட்பென்னும் புனிதத்துவத்தை பாராட்டியே போற்றிக் காப்போம் எல்லோரையும் பாராட்டுவோம், அன்பைப் பகிர்வோம் வாழ்கையை ஆனந்தமாகவே அனுபவிப்போம் வாழ்க வளமுடன்.