Jayakannan
1.6K views
2 days ago
ஐந்தில் கேது இருந்தும் குழந்தை பிறப்பது எப்படி.? பொதுவாக.. ஐந்தில் கேது இருந்தால்.? புத்திர பாக்கியம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதற்கு... பலவிதமான பகுப்பு ஆய்வுகள் தேவை. அதில் சில.. பொதுவாக ஐந்தாம் இடம் என்பது புத்திர ஸ்தானம் மட்டுமல்ல,பூர்வ புண்ணிய ஸ்தானமும் கூட. பூர்வ புண்ணிய அதிபதி பாதிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில். குழந்தை பிறப்பது மட்டுமல்ல நல்லொழுக்கம் உள்ள குழந்தையாகவும் பிறக்கும். சரி.. இதில் கவனிக்க வேண்டியது. ஐந்தாம் அதிபதிக்கு உரிய கிரகம் எது என்பதே... ஐந்தாம் பாவக அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்தால்... ஐந்தாம் பாவகமும் பாவக அதிபதியும் குருவின் தொடர்பை பெற்று. ஐந்தாம் அதிபதியின் தசையில் சந்தான பாக்கியம் உண்டாகும். ஒருவேளை... ஐந்தாம் பாவக அதிபதி இயற்கை பாவ கிரகமாக இருந்தால் லக்கினத்திற்கு மறைவு ஸ்தானமான 3,6,8,12 போன்ற வகையில் மறைந்து ஆட்சி உச்சம் நட்புவீடு போன்ற வகைகளில் அமர்ந்து. குருவின் தொடர்பு அல்லது லக்னத்திற்கு திரிகோணாதிபதியின் தொடர்பை பெற்று தசை நடத்தும் பட்சத்தில்.. புத்திர பாக்கியம் உண்டாகும். ஒருவேளை ஐந்தில் அமர்ந்த கேது திசையே நடக்கிறது என்றால்.? கேதுவிற்கு ஐந்தில் அதாவது லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்தில் குரு அமர்ந்து... குருவின் பார்வையைப் பெற்ற கேது தசையிலும் புத்திர சம்பத்து உண்டாகும். மேலும்... புத்திர காரகன் குரு பகவான் லக்னத்திற்கு 11 ஆம் அதிபதியுடன் இணைந்திருக்க... இரண்டிற்கும் மேற்பட்ட மழலைச் செல்வங்கள் வீட்டில் தவழ்வார்கள். #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628