70,000 ஹாஃபிழ்களுக்கு பட்டமளிப்பு விழா!
சமீபத்தில் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பாராட்டு மற்றும் பட்டமளிப்பு விழாக்கள் மிக விமரிசையாக நடைபெற்றுள்ளன...
ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் (Kigali) நடைபெற்ற மாபெரும் விழாவில், சுமார் 70000 ஆண் மற்றும் பெண் குர்ஆன் ஹாஃபிழ்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. முஸ்லிம் வேர்ல்ட் லீக் (MWL) அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் முகமது அல்-இசா முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது...
நைஜீரியாவின் சகோடோ (Sakoto) நகரில் உள்ள இஸ்லாமியப் பள்ளியில் 259 மாணவர்கள் குர்ஆனை முழுமையாக மனனம் செய்ததைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 2026-ல் ஒரு விழா நடைபெற்றது...
நைஜீரியாவின் லாகோஸ் (Lagos) மற்றும் யோப் (Yobe) மாநிலங்களில் குர்ஆன் மனனம் செய்தவர்களுக்கான 'வலிமதுல் குர்ஆன்' (Walimatul Qur'an) பட்டமளிப்பு விழாக்கள் ஜனவரி 2026 மற்றும் ஜூலை 2025-ல் நடைபெற்றன...
எத்தியோப்பியாவின் சோமாலி பிராந்தியத்தில் உள்ள ராசோ (Raaso) நகரில் சுமார் 400 ஹாஃபிழ்களுக்கு பட்டமளிப்பு மற்றும் பாராட்டு விழா ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடப்பட்டது...
சோமாலியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குர்ஆன் மனனம் செய்கின்றனர். மார்ச் 2025-ல் நடைபெற்ற தேசிய அளவிலான குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சோமாலிய அதிபர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்...
செப்டம்பர் 2025-ல் காமரூனில் நடைபெற்ற தேசிய அளவிலான குர்ஆன் மனனப் போட்டியில் சுமார் 500 போட்டியாளர்கள் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்...
ஆப்பிரிக்க நாடுகளில் குறிப்பாக சோமாலியா, நைஜீரியா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் சிறுவயதிலேயே குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் கலாச்சாரம் மிகவும் வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது...
#இறை அடியான்☝️ #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்