Vinoth Kumar
480 views
1 days ago
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் திருவண்ணாமலை மாவட்டம், பத்தியாவரம் சூசைநகரில் இயங்கி வரும் புனித வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபராக பணியாற்றி வந்த அருட்சகோதரர் பி. ஜெயராஜ் அவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள தலைமை இல்லத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து, புதிய அதிபராக அருட்சகோதரர் எம். தாமஸ் அவர்கள் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய அதிபராக பொறுப்பேற்ற அருட்சகோதரர் எம். தாமஸ் அவர்களை, பத்தியாவரம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC துறையின் மாநிலத் துணைத் தலைவருமான திரு. பத்தியாவரம் அ. அன்புதாஸ் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த சந்திப்பின் போது கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.