saravanan.
384 views
5 hours ago
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் சிறந்தவற்றை எதிர்நோக்கு. ஆனாலும் மன நிறைவு அளிக்காதவை வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இரு.*_ _மனித வாழ்க்கை என்பது பல திருப்பங்களைக் கொண்ட நதி. வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி சிலசமயம் இருட்டு,_ _சிலசமயம் முழு நிலவு._ _இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் இயற்கையின் நியதி._ _அமைதி மட்டுமல்ல,_ _புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை._ _வாழ்க்கை ஒரு சவால், வாழ்க்கை ஒரு போராட்டம். அதை மன வலிமையோடு எதிர்கொள்ள வேண்டும்._ _*ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் என்பதை உணர வேண்டும். எதுவும் சில காலம். எதுவும் நிரந்தரமல்ல. எல்லா நிலைகளும் மாறக் கூடியவையே. தோல்விக்குப் பின் வெற்றி.*_ _"வாழ்வின் நோக்கம் வாழ்வதற்கே" என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டுள்ளார்._ _எல்லாம் இழந்து விட்டாலும் இன்னும் எதிர்காலம் இருக்கிறது._ _*வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், மன அமைதி பெறவும் சிறந்த வழி பிரார்த்தனையாகும். இறைவனை பிரார்த்தனை செய்வதை விட வலிமையானது உலகில் வேறு எதுவும் இல்லை. இறைவன்தான் நமக்குத் சிறந்த வழிகாட்டி.*_