இவனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணுமோ! அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதமாய் விளங்குவானிவன். அமலன் அவியாத சுடர் அளவிலா ஆரமுது இவன். அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவன் இவன். மறங்கொள் இரணியன் மார்வை முன் கீண்டவன் இவன். அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்க உருவாய் உளந்தொட்டிரணியன் ஒண்மார்பகலம் பிளந்திட்ட கைகள் உடைய எம்பெருமான் இவன். கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன் இவன். அதிரும் சுழல் பெருந்தோள் இரணியனாகம் பிளந்தரியாய் உதிரமளந்த கையோடிருந்தவன் இவனே. நாதனான நரசிங்கன் இவன். மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்குபவன் இவன். இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தியணி பணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்னும் அணிவிளங்குமுயர் வெள்ளை யணையமேவி மட்டபல்லியெனும் பெருநகருள் தெண்ணீர் க்ருஷ்ணவேணீ திரைக்கையாலடி வருட அமர்ந்த நாதன் இவன். திரண்ட தோளிரணியன் சினங்கொளாகமொன்றையும் இரண்டு கூறு செய்துகந்த சிங்கமென்பதிவனையே! எட்டு மெட்டு மெட்டுமாய் ஓரேழுமேழுமேழுமாய் எட்டு மூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவன் இவனே. மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வனிவன். வானவரேஸு இவன். மாமுனி வேள்வியைக் காத்தவன் அடிபணியும் எம்பெருமானிவன். அமலனாதி பிரானுமிவனே. நிமலன் நின்மலன் நீதிவானவனும் இவனே. என்னை யாண்டிடும் தன்மையன் இவனே. மிக்க வேதியர் வேதத்துனுட் பொருளானவன். அடைந்தவர்கட்கெல்லாம் அன்பனிவன். அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இவன். அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிவன். ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்தவம் மானிவன். எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலனின்னுயிரை வவ்வி, ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மான் இவன். மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்றவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிவன். எரிந்த பைங்கணிலங்கு பேழ்வாய் எயிற்றோடி தெவ்வுருவென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்தவம்மான் இவன். முனைத்த சீற்றம் வீண்சுடப் போய் மூவுலகும் பிறவும் அனைத்து மஞ்ச வாளரியாய் இருந்தவம்மானிவன் நாத்தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கோரா ளரியாய் இருந்த வம்மானிவன். நாம் தொழும் நம் பெருமான் இவன். அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளனிவன். எங்களீசன் எம்பிரானிவனே!!
தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணனுடலம் பிளந்திட்டவன் இவன். நம்பி நம் பெருமானிவன். முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த புனிதன். பந்திருக்கும் மெல்விரலாள் பார்வை பனி மலராள் வந்திருக்கும் மார்வனாம் நீலமேனி மணிவண்ணனிவன். வேதத்தின் சுவைப் பயனிவன். விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனி, மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும் மண்ணகமும் மற்றுமெல்லாம் எஞ்சாமல் வயிற்றடக்கியாலின் மேலோர் இளந்தளிரின் கண் வளர்ந்த வீசனிவன்.tks nalini gopalan
இவனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணுமோ! அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதமாய் விளங்குவானிவன். அமலன் அவியாத சுடர் அளவிலா ஆரமுது இவன். அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவன் இவன். மறங்கொள் இரணியன் மார்வை முன் கீண்டவன் இவன். அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்க உருவாய் உளந்தொட்டிரணியன் ஒண்மார்பகலம் பிளந்திட்ட கைகள் உடைய எம்பெருமான் இவன். கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன் இவன். அதிரும் சுழல் பெருந்தோள் இரணியனாகம் பிளந்தரியாய் உதிரமளந்த கையோடிருந்தவன் இவனே. நாதனான நரசிங்கன் இவன். மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்குபவன் இவன். இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தியணி பணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்னும் அணிவிளங்குமுயர் வெள்ளை யணையமேவி மட்டபல்லியெனும் பெருநகருள் தெண்ணீர் க்ருஷ்ணவேணீ திரைக்கையாலடி வருட அமர்ந்த நாதன் இவன். திரண்ட தோளிரணியன் சினங்கொளாகமொன்றையும் இரண்டு கூறு செய்துகந்த சிங்கமென்பதிவனையே! எட்டு மெட்டு மெட்டுமாய் ஓரேழுமேழுமேழுமாய் எட்டு மூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவன் இவனே. மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வனிவன். வானவரேஸு இவன். மாமுனி வேள்வியைக் காத்தவன் அடிபணியும் எம்பெருமானிவன். அமலனாதி பிரானுமிவனே. நிமலன் நின்மலன் நீதிவானவனும் இவனே. என்னை யாண்டிடும் தன்மையன் இவனே. மிக்க வேதியர் வேதத்துனுட் பொருளானவன். அடைந்தவர்கட்கெல்லாம் அன்பனிவன். அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இவன். அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிவன். ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்தவம் மானிவன். எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலனின்னுயிரை வவ்வி, ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மான் இவன். மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்றவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிவன். எரிந்த பைங்கணிலங்கு பேழ்வாய் எயிற்றோடி தெவ்வுருவென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்தவம்மான் இவன். முனைத்த சீற்றம் வீண்சுடப் போய் மூவுலகும் பிறவும் அனைத்து மஞ்ச வாளரியாய் இருந்தவம்மானிவன் நாத்தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கோரா ளரியாய் இருந்த வம்மானிவன். நாம் தொழும் நம் பெருமான் இவன். அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளனிவன். எங்களீசன் எம்பிரானிவனே!!
#🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻