#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜூவ் காந்தியின் 36 ஆவது ஆண்டு நினைவுதினம்
தூத்துக்குடி மே 23
தூத்துக்குடியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜூவ் காந்தியின் 36 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ராஜூவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு மாவட்ட தலைவர் சகாயராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பயங்கரவாத தீவிரவாதத்தை தடுக்கும் பொருட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் மண்டல தலைவர் ஐசன் சில்வா, மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோபால் மைக்கேல், பிரபாகர் மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ், மாவட்ட துணைத் தலைவர்கள் அந்தோணி ஜெயராஜ், அருள் வளவன், தனசேகரன், ராஜாராம், இளைஞர் காங். மரிய ஆல்வின், அமைப்புச்சாரா பிரிவு நிர்மல் கிறிஸ்டோபர், ஆராய்ச்சி பிரிவு ஆடிட்டர் சிவராஜ்மோகன், பிரபாகரன், மகளிர் காங்.மாநில இணை ஒருங்கி ணைப்பாளர் முத்து விஜயா,ஹசன், பாத்திமா, ஊடக பிரிவு தென்மண்டல அமைப்பாளர் ஜான் சாமுவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்.நிர்வாகி ரென்னிஸ் பாபு, வார்டு தலைவர்கள் மகாலிங்கம், சிமியோன், ராஜரத்தினம், நாகேந்திரன், தனிஸ்லாஸ், ராஜ்குமார், ஜெயபாண்டியன், ராஜகோபால், தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.