#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
போளூர் நகராட்சி பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சி கசீருல் ஜமாஅத் அஹ்லுஸ்ஸுன்னத் பெரிய மஸ்ஜித் சார்பில் ஈத்கா மைதானத்தில் இன்று காலை 7மணிக்கு பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை பெரிய மஸ்ஜித் இமாம் &கதீப் மெளலவி முஹம்மது இக்பால் தலைமையில் பையான், பக்ரீத் சிறப்பு தொழுகை பின் குத்பா துவா நடைபெற்றது.இஸ்லாமிய பெரியவர்கள் குழந்தைகள் புத்தாடை அணிந்து நறுமணம் பூசி சிறப்பு தொழுகைக்கு வந்தார்கள்.தொழுகைக்கு பின்னர் அனைவரும் கட்டி அணைத்து ஈத்முபாரக் தெரிவித்து கொண்டார்கள்.ஈத்கா ஏற்பாடுகள் பெரிய மஸ்ஜித் ஜமாத் தார்கள் ஊழியர்கள் இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் செய்தார்கள்.