#🌻வாழ்த்துக்கள்💐 #😎வரலாற்றில் இன்று📰
வே.தில்லைநாயகம்
👉 தமிழ்நாடு நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் 1925ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தார்.
👉 இவர் 1949ஆம் ஆண்டு அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்று, பொதுக்கல்வித்துறை இயக்க முதல் நூலகரானார்.
👉 ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நூலகத்துறை இயக்குநராக பதவி வகித்து, தமிழ்நாடு நூலக இயக்கத்தின் பொற்காலமாக மாற்றிய இவர் 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
👉 இவர் எழுதிய 'இந்திய நூலக இயக்கம்' என்ற நூலுக்காக உலக பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
👉 தமிழில் 'வேதியம் 1008' உட்பட சில நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெற்றவை.
👉 தமிழ்நாடு பொது நூலக இயக்கத்தின் தந்தை வே.தில்லைநாயகம் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.