#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
விருதுநகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நடை ரோந்து (Foot Patrol).
விருதுநகர், ஜூன்.05 -
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.அபினவ் குமார் மேற்பார்வையில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். திரு.என். ஶ்ரீநாதா வழிகாட்டுதலின் படியும், காவல் துணை கண்காணிப்பாளர்கள் , ஆய்வாளர்கள் , சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆகியோர் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கி, பழைய பேருந்து நிலையம், விருதுநகர் மார்க்கெட் வீதி, மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டு குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.