Makkal Mugam
468 views
1 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 வேலூர் மாவட்டம், வேலூர் நீதிமன்றம் வளாகத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் வருங்கால பாரதப் பிரதமருமான திரு. ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் அணி சார்பில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு மாநில வழக்கறிஞர் அணி இணை தலைவர் திரு. வி.ஆர். கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் திரு. இராணிப்பேட்டை தீனா என்கின்ற தினகரன் அவர்கள் முன்னிலை வகித்தார். நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் திரு.வெங்கடேசன், திரு. ராமமூர்த்தி, திரு. செந்தில்குமார், திரு. ராஜா, திரு. பிச்சாண்டி மற்றும் பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சிறப்பாளர்களாக முன்னாள் வேலூர் யூனியன் சேர்மன் திரு. சி.கே. தேவேந்திரன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி. பி சந்திர பிரகாஷ் மற்றும் குணா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.