ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
601 views
7 hours ago
*சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி சித்திரை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ‘ஸ்நாதனாஷ்டமி’* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ *முக்கிய குறிப்பு அஷ்டமி திதி சனிக்கிழமை காலை 10.41 க்கு ஆரம்பித்து ஞாயிறு காலை 11.10 மணிக்கு முடிகிறது இரண்டு நாளிலும் ராகு கால பூஜை நேரம் வராது ராகு கால நேரத்தில் வழிபடும் அன்பர்கள் சனிக்கிழமை மதியம் 1.30 to 3.00 மணிக்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அருள் பெறவும்.* ☘☘☘☘☘☘☘☘ பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் vஆற்றல் அளிக்கும் நாட்களாகும். ☘ *#பைரவருக்குண்டான_பொது_காயத்ரி* ☘ சுவாநத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்தோ பைரவ பிரசோதயாத் ☘ பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச்s சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால mநேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும். ☘️ *சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயாசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.* #🌚தேய்பிறை🌙அஷ்டமி🐶 ஸ்ரீசொர்ண ஆகர்ஷண🐕 பைரவர்🙏 #🙏🏾சனி பகவான் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #✨கடவுள்