திருநீற்றுச் சுவடு
903 views
14 days ago
மாமதுரை மீனாட்சி திருக்கல்யாணம் டிக்கெட் வாங்கும் நடைமுறை. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதி கோயிலின் வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்குமேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது. உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # - மற்றும் கோயிலின் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in -ல் ஏப்.19 முதல் ஏப்ரல் 22-ம் தேதி இரவு 9 மணிவரை ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு ரூ.500 கட்டணச்சீட்டும் அல்லது மூன்று ரூ.200 கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்யலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டுக்களை பதிவு செய்ய முடியாது. ஒரு பதிவுக்கு ஒரு கைபேசி எண் பயன்படுத்தலாம். பாதுகாப்பு காரணமாக குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும். மேலும், கோயிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியிலுள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை கோயில் பணியாளர்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியிலுள்ள மையத்தில் காட்டி கட்டணச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம். திருக்கல்யாணம்‌ ஏப்ரல் 28-ம் தேதி காலை 08.35 மணிக்குமேல் 08.59 மணிக்குள் நடப்பதால் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் கோயிலுக்கு வரவேண்டும். ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரர் சன்னதி வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வடக்கு ராஜகோபுரம் வழியில் அனுமதிக்கப்படுவர். கட்டணமில்லா தரிசனத்தில் முதலில் வருபவர்களுக்கு அனுமதி என்ற முறைப்படி தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தின்போது ரூ.50, ரூ.100 மொய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இந்துசமய அறநிலையத் துறை இணையதளம் https://hrce.tn.gov.in மற்றும் கோயிலின் இணையதளம் https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற முகவரியில் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்தலாம்.

More like this