Arab Tamil Daily
571 views
1 days ago
குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமானங்கள் ஜூன்-1 முதல் மீண்டும் சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: குவைத் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து விமானங்களும் ஜூன் 1 முதல் மீண்டும் குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகளை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக டிராவல் துறையை சேர்ந்தவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.ஆரம்பத்தில் இருவழி சேவையாக ஒவ்வொரு வழித்தடத்திற்கும் வாரத்திற்கு ஒரு சேவை இயக்க அனுமதி வழங்கப்படும். தொடர்ந்து படிப்படியாக சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குவைத்திலிருந்து விமான சேவையை வழங்கி வந்த வி்மான நிறுவனங்களுக்கு இந்த சேவைக்கான அனுமதி வழங்கப்படும். விமான சேவைகள் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேரத்திற்கு இடையே இருக்கும். இது தொடர்பாக அதிகாரிகள் விரைவில் விமான அட்டவணையை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து, குவைத் பிப்ரவரி 28 அன்று தனது வான்வெளியையும் விமான நிலையத்தையும் மூடி, விமான சேவைகளை முற்றிலுமாக நிறுத்தியது. இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன. சமீபத்தில், குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவை குவைத் விமான நிலையத்திலிருந்து சேவைகளைத் தொடங்கின, ஆனால் மற்ற விமான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவது, தமிழர்கள் உட்பட குவைத்திலுள்ள இந்திய பயணிகளுக்கு நிம்மதியளிக்க கூடிய செய்தி ஆகும். தற்போது, ​​குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் மட்டுமே குவைத்திலிருந்து விமானங்களை இயக்குகின்றன. இவை தமிழகம் உட்பட உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் இயக்கப்படவில்லை. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதால், விமான டிக்கெட்டுகளின் விலையும் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️