sakthi m
596 views
10 hours ago
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #💪தி.மு.க மீண்டும் முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பி ஆகிவிட்டது. குழப்பமான மனநிலையை தாண்டி, இப்பொழுது கொஞ்சம் தெளிவாகவும் நிதானமாகவும் சிந்திக்க முடிகிறது. முகநூலில் பதிவுகள் எழுத துவங்கி ஏறக்குறைய 8 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அப்பொழுதிருந்த அரசியல் சூழ்நிலை இந்த இரண்டு மாதங்களில் முற்றிலுமாக மாறி இருப்பதாகவே தோன்றுகிறது. ஒன்றிய அரசாகிய பாஜகவை விமர்சித்தே எழுத துவங்கியதால், முகநூலில் இருக்கும் அநேக நபர்கள் அதே கருத்துடன் இருப்பவர்களாக தான் இருக்கிறார்கள். அங்கங்கே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பாஜக எதிர்ப்பு என்பது மைய்ய புள்ளியாகவே இருந்தது. தோழர் புன்னைவளவன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார், 'தவெக, மக்களை இரண்டாக பிளந்திருக்கிறது. குடும்பங்கள், நண்பர்கள் கூட இரண்டாக பிளந்திருக்கிறார்கள்' என்று. 20 ஆண்டு கால நட்பு, தவெக - திமுக அரசியல் பேசியதால் முதன்முதலாக விரிசல் விழுந்தது. அதன் பிறகான திமுக தோல்வியில் இருந்து மீண்டு வந்து முகநூலை கவனிக்கும் பொழுது, முகநூல் நண்பர்களில் பலருமே இரண்டாக பிளவுபட்டிருப்பதாகவே தோன்றுகிறது. முன்பெல்லாம் ஒரு சில விஷயங்களில் இருந்த கருத்து மாறுபாடு, இப்பொழுது அடிப்படை கொள்கை மாறுபாடாகவே தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், எனக்கு தான் அது கொள்கை மாறுபாடாக தெரிகிறது. முகநூல் நண்பர்கள் அதற்கு வைத்திருக்கும் பெயர் 'மாற்றம்'. திமுக வரலாறை படிக்கும் பொழுதெல்லாம், திமுகவின் எழுச்சி என் வாழ்நாளில் நிகழ்ந்திருக்க கூடாதா என்று தோன்றும். அனைத்துவிதமான ஒடுக்குமுறையையும் அடித்து ஒழித்து எழுந்து வந்த கட்சி. இப்பொழுதும் அது போல ஒரு எழுச்சி தான் நிகழ்ந்திருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதை சிலாகிப்பதற்கு பதில், அச்சம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது. உடன் பெரும் ஏமாற்றமும். திமுகவின் எழுச்சி என்பது யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்ததில்லை. படிப்படியாக, பெரியார் போட்ட அஸ்திவாரத்தில் உருவானது. முதலில் கொள்கையை பயின்று, பின்பற்றி, பின்பு கட்சி துவங்க பட்டு, மக்களிடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பின்பு தேர்தலில் சிறு வெற்றிகளுக்கு பிறகே ஆட்சியை பிடித்தது. பிரமாண்டமான காங்கிரஸ்ஸை வீழ்த்தி அந்த கட்சிக்கு தமிழ்நாட்டில் இறுதி உரை எழுதியது. காலம் எப்படி உருண்டோடி இருக்கிறது என்றால், நான் அரசியலை உற்று நோக்க துவங்கிய 2016 ஆண்டில் இருந்து காங்கிரஸும் திமுகவும் சேர்ந்து, விவாதங்களில் பிஜேபி எதிர்ப்பு அரசியலை பேசும். இப்போது நநடக்கும் விவாதங்களில் இரண்டும் எதிர் அணியில் நின்று பேசுவதே மிக வினோதமாக இருக்கிறது. இப்பொது காங்கிரஸ் பிரச்சனையில்லை. தமிழ்நாடு மக்கள் காங்கிரெஸ்ஸை தேர்ந்தெடுக்கவேயில்லை. திமுகவில் இருந்ததினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒருவேளை தவெகவுடன் இருந்திருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். தவெக அதிக இடங்களை பெற்றது genz கிட்ஸ்சால் என்பது என்னை பொறுத்தவரை ஒரு மாயை. வயது வித்தியாசமில்லாமல் தவெகவிற்கு வாக்களித்தவர்கள் அதிகம். ஆனால் அதில் எனக்கு லேசாக அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் என்னவென்றால், அரசியல் புரிதல் இல்லாமல், தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்களிப்பவர்களின் வாக்குகள் தான் தவெகவிற்கு சென்றிருக்கிறது என்று நினைத்தேன். முகநூலில் அரசியல் பேசும் பலரும் தவெகவிற்கு ஆதரவளிப்பது மிகுந்த ஆச்சர்யத்தை கொடுக்கிறது. தவெக கட்சி துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு அப்படி என்ன சாதித்திருக்கிறது என்றால் வெறும் திமுக வெறுப்பை மட்டுமே விதைத்திருக்கிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்குமா என்பது பெரும் கேள்விக் குறி. அவர் விஜய்யை கட்சியே துவங்கவிட்டிருக்க மாட்டார் என்பதல்ல. திமுக மீது இருக்கும் வெறுப்பு, மக்களுக்கு என்றுமே அதிமுக மீது இருந்ததில்லை. திமுக தூய்மையான கட்சியா என்றால், சத்தியமாக இல்லை. விமர்சனம் செய்யவும், வெறுக்கவும் பலர் கட்சியின் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால், அதற்கு குறைவில்லாமல் அதே போன்ற ஆட்கள் அதிமுகவிலும் இருக்கும் பொழுது, அநேக வெறுப்பு திமுக மேல் ஏன் விழுகிறது! இத்தனைக்கும் திமுகவை விட அதிமுக தமிழ்நாட்டை ஆண்ட நாட்கள் தான் அதிகம். அது ஒருபுறம் இருக்கட்டும். தவெகவிற்கு வருவோம். திமுக வெறுப்பு மட்டுமே தவெகவின் அடிப்படை கொள்கை என்பதை விஜய் அவர்களின் மேடை பேச்சுக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். தவெகவின் கொள்கை தலைவர்களை பற்றி எங்காவது எதற்காகவாவது பேசப்பட்டிருக்கிறதா என்று தேடிப்பார்த்தால், 'அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் பிற கொள்கை தலைவர்களின் வழியில்' என்று மட்டுமே பேசி இருக்கிறார். சரி, கொள்கையை பற்றி பேச வேண்டாம். திராவிட கட்சிகள் கோட்டை விட்டது , கொள்கை என்றால் என்ன ,அதன் அத்தியாவசியம் என்ன என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்து செல்லவேயில்லை என்பதே நிதர்சனம். இப்பொழுது தவெக வெற்றியை கொண்டாடும் அநேக முகநூல் நண்பர்கள் திமுகவுடன் ஒப்பிட்டே ஆதரிக்கிறார்கள். திமுக துவங்கப்பட்டு 76 ஆண்டுகள் ஆகிறது. இவ்வளவு காலமாக செயல்படும் கட்சியில் கொள்கை தோய்வு, ஏமாற்றங்கள், தவறுகள், லஞ்சம், ஊழல் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கட்சி துவங்கி இரண்டே ஆண்டுகள் ஆன ஒரு கட்சியில் இவையெல்லாம் இருக்கின்றது என்றால், ஒருவேளை அந்த கட்சி 50 ஆண்டு காலம் நீடித்தால், அப்போது கட்சியில் இருப்பவர்கள் எல்லோரும் எப்படி இருப்பார்கள் !!!! தேர்தலுக்கு முன்னர் நிகழ்ந்தவை, குடும்பத்தில் மனைவியுடன் மணமுறிவு என்பது அரசியலுக்கு தேவையற்ற விஷயம். 41 பேர் உயிரிழப்பு, அதற்கு கொஞ்சமும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் பழியை அன்றைய முதல்வர் ஸ்டாலின் மேல் போட்டது, ரசிகர்களை தூக்கி எரிவதை வேடிக்கை பார்ப்பது, வாகனத்தில் பின் தொடரும் ரசிகர்களுக்கு அறிவுரையோ எச்சரிக்கையோ விடுக்காமல் அதை ஊக்கப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டது, part time பிரச்சாரம். தேர்தல் முடிந்ததும், எதிர்க்கட்சி கூட்டணியில் இருப்பவர்களை அழைப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் விஜய் செல்வதற்கு முன்னால் சோபா செல்வது எதற்கு என்பது ஊர் அறிந்த ரகசியம் தான். தன் பதவியை தக்க வைத்துக்கொள்ள அதிமுக mla களை ராஜினாமா செய்ய வைப்பது. வெறும் இரண்டே ஆண்டுகள் ஆன ஒரு கட்சி நிகழ்த்தியவை இவை!!!!! இப்பொது செய்தி என்னவென்றால், இவ்வளவு அட்டூழியங்களை செய்து கொண்டிருக்கும் பொழுது, ஆங்கங்கே செய்யும் ஓரிரண்டு நல்ல விஷயங்களை எடுத்து வந்து, விஜய் பரவாயில்லை, ஏதோ முயற்சிக்கிறார், மாற்றம் கொண்டு வந்திருக்கிறார் என்பது போன்ற பதிவுகளை பார்க்கும் பொழுது, தமிழ்நாடு அரசியல் தவெக வரவினால் எவ்வளவு மலிந்து போய் இருக்கிறது என்ற அயர்ச்சியை கொடுக்கிறது. ஒரே நாளில் மூன்று pocso வழக்குகள் பதியப்பட்டதை அடுத்து ஒரு பதிவை பார்க்க நேர்ந்தது. திமுக பிரமுகர் ஒருவர் ஒரு குழந்தைக்கு இழைத்த பாலியல் வன்கொடுமை, அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டதும் தான் விஷயம் வெளியே வந்தது. அது குறித்து ஸ்டாலின் வாயை திறந்து ஏதேனும் அறிக்கை விட்டாரா என்று. கண்டிக்க பட வேண்டிய விஷயம். எப்போது? எப்போது என்றாலும். ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் 175 பாலியல் குற்றங்கள், 65 கொலைகள், 4 ஜாதி ஆணவ படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த சமயத்தில் திமுகவை குற்றம் சாட்டுவது யாரை தப்பிக்க வைக்க!!!!!! டிக்கெட்டை ப்ளாக்கில் விற்றவர்கள், பாலியல் குற்றவாளிகள், பிற கட்சிகளில் இருந்து வந்து ஒட்டிக் கொண்டவர்கள், இவர்களை தாண்டி இவன் நல்லவன் என்று சொல்ல, இரண்டே ஆண்டுகள் ஆன, ஆட்சிக்கு வந்து ஒரே ஒரு மாதம் ஆன கட்சியால் எத்தனை பேரை காட்டி விட முடியும்! எழுத்தாளர் ஷாஜி தன் கட்டுரையில் குறிப்பிட்டது, 'விஜய் மட்டுமில்லை, ஸ்டாலினும் முதன் முறை முதலமைச்சர் தான். ஆனால் விஜய்க்கு இருக்கும் குற்றமற்ற பிம்பம் ஸ்டாலினுக்கு இல்லாததற்கு காரணம் , அது 60 ஆண்டு கால பாரம்பரிய கட்சி' . இப்பொழுது தவெகவை திமுகவுடன் ஒப்பிட்டு பார்க்கும் நபர்கள் செய்யும் பெரும் பிழை என்னவென்றால், தவெகவை 2026 திமுகவுடன் ஒப்பிடுவது. தவெகவை 1967 திமுகவுடன் ஒப்பிட்டு பாருங்கள், அது தான் நியாயமான ஒப்பீடாக இருக்க முடியும். உண்மையான 'அண்ணா' யார் என்று புரியும். வெறும் திமுக வெறுப்பு என்ற ஒற்றை புள்ளியில் தவெகவை ஆதரிப்பவர்கள், பிஜேபி மற்றும் rss ஆதரவாளர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை.