Follow
Vinoth Kumar
@2533543309
3,826
Posts
3,411
Followers
Vinoth Kumar
533 views
1 days ago
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 13/3/2026 அன்று மாலை 4 மணி அளவில் வருகின்ற சட்டமன்ற 2026 பொது தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது ச்செயலாளர் இ ரமணா நகர் சி மணி அவர்கள் பெரம்பூர் தொகுதி கொளத்தூர் தொகுதி போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்திருந்தார் அதன் பெயரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களுக்கு உத்தரவு பேரில் இன்று வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜே டில்லி பாபு அவர்கள் நேர்காணல் நடத்தினார் அப்பொழுது எடுத்த படம்
Vinoth Kumar
17.6K views
1 days ago
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் சென்னை, காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட விருப்ப மனு கொடுத்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களுக்கு, இன்று தி. மலை.வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், செய்யாறு, வந்தவாசி,ஆரணி, போளூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களுக்கு, மாவட்டத் தலைவர் J.பொன்னையன் தலைமையில், மேலிட பொறுப்பாளர்கள் குழு TBJ.ராஜா பாபு Ex. MLA, ஜி முனிரத்தினம்,V. P. அண்ணாமலை, தாவூத்ஷெரிப், வீணா ரவி, ஷாஹீன் இவர்கள் முன்னிலையில் நேர்முக காணல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ் சி துறை மாநில துணைத்தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான பத்தியாவரம் அன்புதாஸ் உட்பட 30 பேர் கலந்து கொண்டார்கள்.
Vinoth Kumar
2.1K views
1 days ago
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 போளூர் பேருந்து நிலையம் எதிரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரமலான் நோன்பு கஞ்சி விநியோகம். போளூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் புனித இஸ்லாமிய மாத நோன்பு கஞ்சி அனைத்து பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் நோன்பு கஞ்சியை விரும்பி பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் நகரத் தலைவர் மதீனா ஸ்டீல் அஷ்ரப் அவர்கள் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட வழக்கறிஞர் அணி அஸ்கர் பாஷா, போளூர் நகர செயலாளர் சாதிக் பாஷா மற்றும் மொசைக்கீர் மற்றும் உமர் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
Vinoth Kumar
565 views
1 days ago
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கலைர் கனவு இல்லம் திட்டம் கூடுதல் ஒதுக்கீட்டின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி (1203,2028) அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் கூடுதல் ஒதுக்கீட்டின் கீழ் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசு 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் கிராமப்புற எழைப் பொதுமக்களின் மீது கொண்டிருந்த கருணையையும் குடிசையில்லா தமிழ்நாடு" என்ற அவரது தொலைநோக்குப் பார்வையையும் மெய்ப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளுக்குப் பதிலாக புதியதாக பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தரும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என்ற சிறப்பு வாய்ந்த திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி 2030-ம் ஆண்டிற்குள் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டு குடிசை இல்லா தமிழ்நாடு என்ற வகையில் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-2025 ஆண்டு ஒரு வீடு ரூ. 3,53,900/- என்ற மதிப்பீட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3114 வீடுகள் 110.204 கோடி மதிப்பீட்டில் கட்டித்தரப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த நிதியாண்டில் ஒரு வீடு ரூ. 3,55,600/- என்ற மதிப்பீட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 5400 வீடுகள் ரூ. 19202 கோடி மதிப்பீட்டில் கட்டித்தருவதற்கு கிராம அளவிலான தேர்வுக்குழுவின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டு கிராம சபை ஒப்புதல் பெறப்பட்ட 5400 பயனாளிகளுக்கான வேலை உத்திரவு வழங்கப்பட்டு தற்பொழுது வரை 4605 வீடுகள் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 795 வீடுகள் முடிவடையும் தருவாயிலுள்ளன. இதில் 29 வீடுகள் நெசவாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 29 வீடுகள் 4.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும். கூடுதல் தொகை ரூ. 50,000/-கைத்தறித்துறை மூலம் வழங்கப்படும். இதன்தொடர்ச்சியாக ஒரு வீடு ரூ. 3,62,000/- என்ற மதிப்பீட்டில் இந்நிதியாண்டில் கூடுதலாக 5000 வீடுகள் ரூ.1810 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தர 18 ஊராட்சி ஒன்றியங்களில் 5000 பயனாளிகள் தேர்வு ஆணையிடப்பட்டது. இதன்படி செய்யப்பட்டு வீடுகள் கட்டித்தருவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சட்டமன்றத் துணைத்தலைவர் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களில் சேர்ந்த பயனாளிகளுக்கு வேலை ஆணைகளை வழங்கினார் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு பணி ஆணைகளை பெற்ற பயனாளிகள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்களின் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் மரு.ஆர்.மணி, செயற்பொறியாளர் (ஊ.வ) கு. இளங்கோ, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) பா. சஞ்சீவி குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Vinoth Kumar
1.9K views
1 days ago
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் *தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் விருதுநகர் மாவட்டம் சார்பில் மகளிர் தின விழா 12.3.26 ல் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ரெங்கநாயகி தலைமையில் TNROA அரங்கில் நடைபெற்றது* *திருமதி அய்யம்மாள் வரவேற்பு நிகழ்த்தினார்* *மாவட்ட தலைவர் பி.பாலகிருஷ்ணன் நோக்கவுரையாற்றினார்* *பேராசிரியர் முனைவர் சி.பாரதி பொருளாதார முன்னேற்றத்தில் மகளிர் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்* *சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் மாநில செயலாளர் மாநில செயலாளர் வி.குருசாமி உரையாற்றினார்* *மாநில செயலாளர் முனைவர் சு கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்* *மகளிரும் மருத்துவமும் என்ற தலைப்பில் மருத்துவர் சாந்தி அவர்கள் உரையாற்றினார்* மாவட்ட துணைத் தலைவர் ஜெகதீசன் நன்றி கூறினார் கூட்டத்தில் 110 பேர் பங்கேற்றனர்.
Vinoth Kumar
5.5K views
2 days ago
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 தமிழகக் கோயில்களையும் பூஜாரிகளையும் காக்க 11 அதிரடித் தீர்மானங்கள்: திருவண்ணாமலையில் எழுச்சியுடன் நடந்த 'ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாடு'! திருவண்ணாமலை | மார்ச் 13, 2026 திருக்கோயில் பாதுகாப்பு, பசு பாதுகாப்பு, கலாச்சார பாதுகாப்பு மற்றும் பூஜாரிகளின் வாழ்வாதாரத்தை முன்வைத்து, விசுவ ஹிந்து பரிஷத் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் ‘ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாடு’ 11-03-2026 புதன்கிழமை மாலை திருவண்ணாமலை கிரிவலப்பாதை சந்தைமேடு மைதானத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. திருவண்ணாமலை சடை சாமி ஆஸ்ரமம் திருப்பாத சுவாமிகள் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்தா சுவாமிகள், சுத்தாத்துவித சைவத் திருமடம் குமாரசாமி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மன்னார்குடி ஸ்ரீ சண்டலக்கார செண்பக மன்னர் ஸ்ரீராமனுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமி உ.வே.தேஹளீச ராமானுஜ சாரியர், ஆத்மானந்த ஸரஸ்வதி சுவாமிகள் மற்றும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இந்த மாநாட்டிற்கு விசுவ இந்து பரிஷத் வட தமிழக மாநிலத் தலைவர் ஆண்டாள் பி. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தென் வட மாநில அமைப்புச் செயலாளர் ஆத்தூர் வே. பாலாஜி, வட தமிழக மாநில அமைப்புச் செயலாளர் சு.வே. ராமன், அகில பாரத இணைச் செயலாளர் பி. எம். நாகராஜன் மற்றும் பூஜாரிகள் பேரமைப்பு மாநிலத் தலைவர் எஸ். ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, அகில பாரத அமைப்பு இணை பொதுச் செயலாளர் கோ. ஸ்தாணுமாலயன் விழா பேருரை ஆற்றினார். இம்மாநாட்டில் பூஜாரிகளின் நலன் மற்றும் கோயில் பாதுகாப்பு குறித்த 11 முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, பூஜாரிகள் அரசு சலுகைகளைப் பெறத் தடையாக இருக்கும் ₹72,000 வருவாய் வரம்பை ரத்து செய்ய வேண்டும், 60 வயது நிறைந்த அனைத்து பூஜாரிகளுக்கும் ₹5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், பூஜாரி மறைவுக்குப் பின் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் மற்றும் இந்து அறநிலையத் துறையில் பணியாற்றும் பூஜாரிகளுக்கு மாதம் ₹10,000 பணிக்கொடை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவும், பட்டா இல்லாத கோயில்களுக்குப் பட்டா வழங்கவும், கோயில் வருவாயைக் கோயில் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே செலவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆன்மீகவாதிகளை மட்டுமே அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் மற்றும் இந்து கலாச்சாரத்தை இழிவுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானங்களும் மாநாட்டில் முன்வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிராமக் கோயில் பூஜாரிகள், அர்ச்சகர்கள், சிவனடியார்கள், சந்நியாசிகள் மற்றும் திரளான பக்தகோடிகள் கலந்து கொண்டனர்.
See other profiles for amazing content