ஃபாலோவ்
Thangamani
@449220596
168,740
போஸ்ட்
38,457
பின்தொடர்பவர்கள்
Thangamani
501 காட்சிகள்
11 மணி நேரத்துக்கு முன்
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன், வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. சங்கீதம் 63:1 இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். சங்கீதம் 63:2 ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது, என் உதடுகள் உம்மைத் துதிக்கும். சங்கீதம் 63:3 என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன். சங்கீதம் 63:4 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும், என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். சங்கீதம் 63:5 என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். சங்கீதம் 63:6 நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். சங்கீதம் 63:7 என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது, உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. சங்கீதம் 63:8 என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். சங்கீதம் 63:9 அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள், நரிகளுக்கு இரையாவார்கள். சங்கீதம் 63:10 ராஜாவோ தேவனில் களிகூருவார், அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள், பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும சங்கீதம் 63:11 Shared from Tamil Bible 8.9 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=63
Thangamani
396 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, நான் பாடிக்கீர்த்தனம் பண்ணுவேன், என் மகிமையும் பாடும். சங்கீதம் 108:1 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன். சங்கீதம் 108:2 கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத்துதிப்பேன், ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். சங்கீதம் 108:3 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. சங்கீதம் 108:4 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும், உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. சங்கீதம் 108:5 உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். சங்கீதம் 108:6 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன், சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்து கொள்ளுவேன். சங்கீதம் 108:7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன். சங்கீதம் 108:8 மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன், பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன். சங்கீதம் 108:9 அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? சங்கீதம் 108:10 எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா? சங்கீதம் 108:11 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும், மனுஷனுடைய உதவி விருதா. சங்கீதம் 108:12 தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம், அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார். சங்கீதம் 108:13 Shared from Tamil Bible 8.9 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=108
Thangamani
401 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 112:1 அவன் சந்ததிபூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். சங்கீதம் 112:2 ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும், அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். சங்கீதம் 112:3 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும், அவன் இரக்கமும்மனஉருக்கமும்நீதியுமுள்ளவன். சங்கீதம் 112:4 இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 112:5 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான், நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். சங்கீதம் 112:6 துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான், அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். சங்கீதம் 112:7 அவன் இருதயம் உறுதியாயிருக்கும், அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான். சங்கீதம் 112:8 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன்கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். சங்கீதம் 112:9 துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக்கரைந்துபோவான், துன்மார்க்கருடைய ஆசை அழியும். சங்கீதம் 112:10 Shared from Tamil Bible 8.9 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=112
Thangamani
414 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
கர்த்தரைத் துதியுங்கள், நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. சங்கீதம் 147:1 கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார், துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். சங்கீதம் 147:2 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். சங்கீதம் 147:3 அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். சங்கீதம் 147:4 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார், அவருடைய அறிவு அளவில்லாதது. சங்கீதம் 147:5 கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார், துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். சங்கீதம் 147:6 கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடுங்கள், நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள். சங்கீதம் 147:7 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். சங்கீதம் 147:8 அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். சங்கீதம் 147:9 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார், வீரனுடைய கால்களில் பிரியப்படார். சங்கீதம் 147:10 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். சங்கீதம் 147:11 எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி, சீயோனே, உன் தேவனைத் துதி. சங்கீதம் 147:12 அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். சங்கீதம் 147:13 அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். சங்கீதம் 147:14 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார், அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது. சங்கீதம் 147:15 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார், சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். சங்கீதம் 147:16 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார், அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? சங்கீதம் 147:17 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார், தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். சங்கீதம் 147:18 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். சங்கீதம் 147:19 அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை, அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா. சங்கீதம் 147:20 Shared from Tamil Bible 8.9 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=147
Thangamani
447 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள், கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். சங்கீதம் 113:1 இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடையநாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது. சங்கீதம் 113:2 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. சங்கீதம் 113:3 கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர், அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. சங்கீதம் 113:4 உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? சங்கீதம் 113:5 அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். சங்கீதம் 113:6 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். சங்கீதம் 113:7 அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். சங்கீதம் 113:8 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா. சங்கீதம் 113:9 Shared from Tamil Bible 8.9 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=113