Follow
Thangamani
@449220596
168,660
Posts
38,426
Followers
Thangamani
509 views
4 hours ago
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக. சங்கீதம் 102:1 என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும், உமது செவியை என்னிடத்தில் சாயும், நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும். சங்கீதம் 102:2 என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது, என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது. சங்கீதம் 102:3 என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது, என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன். சங்கீதம் 102:4 என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. சங்கீதம் 102:5 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன், பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன். சங்கீதம் 102:6 நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன். சங்கீதம் 102:7 நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள், என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள். சங்கீதம் 102:8 நீர் என்னை உயரத் தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். சங்கீதம் 102:9 ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன். சங்கீதம் 102:10 என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது, புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். சங்கீதம் 102:11 கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர், உம்முடைய பேர்பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும். சங்கீதம் 102:12 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது. சங்கீதம் 102:13 உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். சங்கீதம் 102:14 கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். சங்கீதம் 102:15 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். சங்கீதம் 102:16 அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். சங்கீதம் 102:17 பின்சந்ததிக்காக இது எழுதப்படும், சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும். சங்கீதம் 102:18 கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், சங்கீதம் 102:19 தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். சங்கீதம் 102:20 கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில், சங்கீதம் 102:21 சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள். சங்கீதம் 102:22 வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார். சங்கீதம் 102:23 அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும், உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். சங்கீதம் 102:24 நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர், வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. சங்கீதம் 102:25 அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர், அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம், அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம். சங்கீதம் 102:26 நீரோ மாறாதவராயிருக்கிறீர், உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. சங்கீதம் 102:27 உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள், அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன். சங்கீதம் 102:28 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Thangamani
505 views
1 days ago
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக, அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக. சங்கீதம் 99:1 கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர். சங்கீதம் 99:2 மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக, அது பரிசுத்தமுள்ளது. சங்கீதம் 99:3 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர், நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். சங்கீதம் 99:4 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள், அவர் பரிசுத்தமுள்ளவர். சங்கீதம் 99:5 அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு அருளினார். சங்கீதம் 99:6 மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார், அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். சங்கீதம் 99:7 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர், நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர். சங்கீதம் 99:8 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். சங்கீதம் 99:9 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Thangamani
227 views
2 days ago
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:1 தேவாதி தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:2 கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:3 ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:4 வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:5 தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:6 பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது, சங்கீதம் 136:7 பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:8 இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:9 எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:10 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:11 பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:12 சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:13 அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:14 பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:15 தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:16 பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது சங்கீதம் 136:17 பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:18 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:19 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:20 அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:21 அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:22 நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:23 நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:24 மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:25 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:26 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Thangamani
550 views
3 days ago
கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல, பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. சங்கீதம் 131:1 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன், என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. சங்கீதம் 131:2 இது முதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக. சங்கீதம் 131:3 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Thangamani
548 views
4 days ago
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சி;த்துக் கதறுகிறது. சங்கீதம் 42:1 என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது, நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? சங்கீதம் 42:2 உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. சங்கீதம் 42:3 முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே, இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. சங்கீதம் 42:4 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். சங்கீதம் 42:5 என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது, ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். சங்கீதம் 42:6 உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது, உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. சங்கீதம் 42:7 ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார், இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது, என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன். சங்கீதம் 42:8 நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். சங்கீதம் 42:9 உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. சங்கீதம் 42:10 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். சங்கீதம் 42:11 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com