ஃபாலோவ்
Thangamani
@449220596
168,527
போஸ்ட்
38,350
பின்தொடர்பவர்கள்
Thangamani
0 பார்க்க
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். சங்கீதம் 91:1 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். சங்கீதம் 91:2 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். சங்கீதம் 91:3 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார், அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். சங்கீதம் 91:4 இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், சங்கீதம் 91:5 இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். சங்கீதம் 91:6 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. சங்கீதம் 91:7 உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய். சங்கீதம் 91:8 எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். சங்கீதம் 91:9 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. சங்கீதம் 91:10 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11 உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். சங்கீதம் 91:12 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய். சங்கீதம் 91:13 அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன், என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். சங்கீதம் 91:14 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். சங்கீதம் 91:15 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். சங்கீதம் 91:16 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Thangamani
2.3K காட்சிகள்
மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால், சங்கீதம் 124:1 கர்த்தர் தாமே நமக்கு பக்கத்திலிராவிட்டால், சங்கீதம் 124:2 அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள். சங்கீதம் 124:3 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, சங்கீதம் 124:4 கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. சங்கீதம் 124:5 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 124:6 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். சங்கீதம் 124:7 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. சங்கீதம் 124:8 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Thangamani
429 காட்சிகள்
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார், அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது. சங்கீதம் 98:1 கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார். சங்கீதம் 98:2 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார், பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது. சங்கீதம் 98:3 பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள், முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். சங்கீதம் 98:4 சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். சங்கீதம் 98:5 கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள். சங்கீதம் 98:6 சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக. சங்கீதம் 98:7 கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது. சங்கீதம் 98:8 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். சங்கீதம் 98:9 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible www.bible2all.com #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு
Thangamani
531 காட்சிகள்
AI indicator
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 118:1 அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக. சங்கீதம் 118:2 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. சங்கீதம் 118:3 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. சங்கீதம் 118:4 நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். சங்கீதம் 118:5 கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்? சங்கீதம் 118:6 எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். சங்கீதம் 118:7 மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118:8 பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118:9 எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். சங்கீதம் 118:10 என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். சங்கீதம் 118:11 தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள், முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். சங்கீதம் 118:12 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய், கர்த்தரோ எனக்கு உதவி செய்தார். சங்கீதம் 118:13 கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர், அவர் எனக்கு இரட்சிப்புமானார். சங்கீதம் 118:14 நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். சங்கீதம் 118:15 கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். சங்கீதம் 118:16 நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். சங்கீதம் 118:17 கர்த்தர் என்னை வெகுவாய்த்தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. சங்கீதம் 118:18 நீதியின் வாசல்களைத் திறவுங்கள், நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன். சங்கீதம் 118:19 கர்த்தரின் வாசல் இதுவே, நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள். சங்கீதம் 118:20 நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன். சங்கீதம் 118:21 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. சங்கீதம் 118:22 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சங்கீதம் 118:23 இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். சங்கீதம் 118:24 கர்த்தாவே, இரட்சியும், கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும். சங்கீதம் 118:25 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். சங்கீதம் 118:26 கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார், பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். சங்கீதம் 118:27 நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன், நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். சங்கீதம் 118:28 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 118:29 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
See other profiles for amazing content