Follow
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
@479671514
2,917
Posts
4,104
Followers
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
930 views
4 days ago
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் வரவேற்பு – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு முஸ்லிம் மக்கள் கழகம் பாராட்டு விழுப்புரம், ஆக. 6: தமிழக அரசின் 2026–27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை முஸ்லிம் மக்கள் கழகம் சமூக போராளி நிறுவனம் சார்பில் வரவேற்பதாக அதன் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படுவது, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்களின் மேம்பாட்டிற்காக ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது ஆகியவை சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25,000 மானியம் ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், மறைந்த தலைவர் கர்மவீரர் காமராஜர் பெயரில் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது, பெண்களின் முன்னேற்றத்திற்காக நவீன சைக்கிள், பேக், வாட்டர் கேன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுவது சமூக நலனில் அரசின் அக்கறையை வெளிப்படுத்துவதாக அவர் பாராட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு மக்களுக்கான அரசாகவும், பெண்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்களின் நலன்களை பாதுகாக்க உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் மேலும் தொடர வாழ்த்துகள் தெரிவித்தும், முஸ்லிம் மக்கள் கழகம் சமூக போராளி நிறுவனம் சார்பில் முனைவர் ச.சு. ஜைனுதீன் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.