#நல்லதே பேசு நல்லதே நினை தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!! – திண்டிவனத்தில் முக்கியஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம்
திண்டிவனம், பிப்.7 :
விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம், மயிலம், செஞ்சி சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (07.02.2026) திண்டிவனம் ஆர்யாஸ் மினி ஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் செஞ்சி அமைச்சர் மற்றும் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மஸ்தான் தலைமை தாங்கினார். பேராசிரியர் சபாபதி மோகன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் மயிலம் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் இரா.மாசிலாமணி, மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சேதுநாதன் (எக்ஸ். எம்.எல்.ஏ), திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ சீதாபதி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பிரபா கல்வி மணி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்.
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் முக்கியஸ்தராக கலந்து கொண்டு தனது கருத்துகளை முன்வைத்தார். அவர் பேசுகையில்,
திண்டிவனம் நகரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பூங்காவை புதுப்பித்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என்றும், திண்டிவனம் நள்ளியக்குடன் பகுதியில் உள்ள பழுதடைந்த சிறு தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் திண்டிவனம் நகரில் உள்ள அனைத்து பிளாட்பார்ம் வியாபாரிகளுக்கும் நகராட்சி மூலம் குறைந்த கட்டணத்தில் வியாபாரக் கூடங்கள் அமைத்து வழங்க வேண்டும் என்றும், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் குறும்பு விவசாயிகள் மணிலா சாகுபடி செய்ய தடையாக உள்ள பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நகரைச் சுற்றி திரியும் நாய்களை நாய்கள் கூடாரத்தில் தங்க வைக்கவும், முக்கிய சாலைகளில் மாடுகள் தங்குவதால் ஏற்படும் விபத்து அபாயங்களைத் தடுக்கும் வகையில் நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக திண்டிவனம் நகர கழக செயலாளர் ஆசிரியர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் சீனிராஜ், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒலக்கூர் பேரூராட்சி தலைவர் சொக்கலிங்கம், முஸ்லிம் மக்கள் கழக நகரச் செயலாளர் மு.அப்துல் ஹக்கீம், பா.சிராஜ் பேகம், ஜை.ஆயிஷா பேகம் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.