நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
970 Posts • 388K views
#நல்லதே பேசு நல்லதே நினை அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா – இஸ்லாமிய கண்காட்சி, ரமலான் வரவேற்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா, அரபு பாடசாலை (மக்தப்) மற்றும் மாலை தனிப்பயிற்சியகம் சார்பில் இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சி மற்றும் ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (8.2.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு புது பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஏ. ஷேக் தாவூத் தலைமையேற்று நடத்தினார். மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஹ. முஹம்மது ஜாவிது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். திண்டிவனம் அனைத்து பள்ளிவாசல் முத்துவல்லிகள் மற்றும் நிர்வாகப் பெருமக்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக மதினா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ். ஹபீபுல்லாஹ் கிராத் ஓதினார். இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை இனாம் பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஏ. ஷாஹுல் ஹமீது தொடக்கி வைத்தார். வரவேற்புரையை ரஹ்மானியா பள்ளியின் செயலாளர் ஹாஜி காதர் மொய்தீன் நிகழ்த்தினார். தொடர்ந்து மௌலானா மௌலவி எஸ். சுல்தான் இப்ராகிம், மௌலானா மௌலவி எஸ். ஹபீபுல்லாஹ், கூபா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஏ. அபூபக்கர் சித்தீக், நவாப் பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஏ. நயாஸ் அஹ்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு பேருரையாக “நவீன காலத்து குழந்தைகளும் பெற்றோர்களும் – ரமலான் வரவேற்பு” என்ற தலைப்பில் பன்னூர் ஆமீர் கலீமி அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் ஏ. அப்துல் ஸத்தார் உரையாற்றினனார். இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகி ஷேக் இப்ராஹிம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் திரளான இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
17 likes
11 shares
#நல்லதே பேசு நல்லதே நினை மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசலில் பராஅத் இரவு விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 3.2.2026 அன்று இரவு 10 மணி முதல் 1 மணி வரை இறைவனுக்கு வழிபாடுகள் மேற்கொள்ளும் வகையில் புனித மிகுந்த பராஅத் இரவு விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் திண்டிவனம் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்தப் பிரச்சார சொற்பொழிவு கூட்டத்திற்கு மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி ஹ. முஹம்மது ஜாவிது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேராசிரியரும் அத்திக்கடை பள்ளிவாசல் இமாமுமான எம். ஷாஹுல் ஹமீது வாஹிதி அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இதேபோன்று பராஅத் இரவு சொற்பொழிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் இறுதியில், நகரத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் இமாம்கள், இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒன்றிணைந்து, செஞ்சி சாலையில் அமைந்துள்ள (ஈத்கா) மைதானத்தின் அடக்கஸ்தலத்திற்கு சென்று இறந்த முஸ்லிம்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சி மிகுந்த இறைபக்தி மற்றும் ஒற்றுமை உணர்வுடன் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
13 likes
12 shares