நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
970 Posts • 389K views
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! பள்ளிவாசலில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் அவர்கள் செய்தி மலர் ஆசிரியர் சையத் அகமத்தை சந்தித்தனர் வடசென்னை திருவெற்றியூர் பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித்-ஏ-குத்தூஸ் பள்ளிவாசலில் செய்தி மலர் ஆசிரியர் சையத் அகமத் அவர்களை ஞாயிற்றுக்கிழமை 1.2.2026 அன்று பிற்பகல் 1.35 மணியளவில் நேரில் சந்தித்து சில நேரம் கலந்துரையாடினர். இந்த சந்திப்பு மேற்படி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. சந்திப்பின்போது பள்ளிவாசல் தொடர்பான சமூக மற்றும் ஆன்மிக விஷயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வின் போது ஜை. முஹமத் முஸ்தபா மற்றும் ஜை. முஹமத் சித்திக் ஆகியோர் சையத் அகமத் அவர்களுடன் உடன் இருந்தனர். சந்திப்பின் நினைவாக புகைப்படமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பு பங்கேற்ற அனைவரிடமும் மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியது.
12 likes
12 shares
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! கிராமத்தில் பொங்கல் விழா –முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழுப்புரம் ஜன-19 விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு 17.1.2026 சனிக்கிழமை மாலை நேரத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகளுக்காக ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், எலுமிச்சை ஸ்பூன், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில இளைஞர் அணி தலைவர் வி. விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் அவரது குடும்பத்தாரும் விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பரிசளிப்பு நிகழ்வின் போது மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கிராம மக்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். விழா இனிய பொங்கல் வாழ்த்துகளுடன் மகிழ்ச்சியான சூழலில் நிறைவடைந்தது.
11 likes
11 shares
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா 27-வது வார்டில் ரூ.3,000 பொங்கல் தொகுப்பு வழங்கல் திண்டிவனம்: ஜன- 08 கழக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைப்படியும், மண்டல பொறுப்பாளர் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள 27-வது வார்டில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், கழகத் தலைவர் அறிவித்தபடி ரூ.3,000 பொங்கல் தொகுப்பை 27-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கு. ஷபியுல்லா பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட வடக்கு பொருளாளர் வழக்கறிஞர் ரமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கலந்து கொண்டார். மேலும், திமுக நகர துணை செயலாளர் டி.எம்.கே. தாஜ், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் டி.சி.எம். தோல் மண்டி ஹாஜ் ஷெரீப், ஆர்.எம்.ஜி. அப்துல் ரசாக், உசேன், திமுக 27-வது வார்டு வாழ்க கிளைக் கழக செயலாளர் சாகுல் அமீது, எஸ். எஸ். பி .சலீம்.சுல்தான், அசாருதீன், நைனா முகமது, 27-வது வார்டு பிரதிநிதி மு. மஸ்தான், திமுக பி. சித்திக், மேஸ்திரி ஜெயவேல், துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் இந்த சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
35 likes
42 shares