ஃபாலோவ்
saravanan.
@60258885saravanan
14,774
போஸ்ட்
9,312
பின்தொடர்பவர்கள்
saravanan.
120 காட்சிகள்
#jayagaanthaninn ponnmoligal. _அதிக உணர்வுப் பூர்வமானவர்களாக நீங்கள் இருக்கிறீர்களோ..._ _*அவ்வளவு*_ _கடுமையான_ _குற்ற உணர்வு_ _உங்களிடம் இருக்கும்..._ _*மேலும்*_ _நீங்கள்_ _அதிகமாகப்_ _பொறுப்புணர்வு கொண்டால் அதிகக் குற்ற உணர்வுடன் இருப்பீர்கள்..!_ _*-ஜெயகாந்தன்.*_
saravanan.
24 காட்சிகள்
#azagaana vaalkkay thathuvam மேலே படத்தை உற்று பார்த்தேன், ஆனால் அவர்களில் *அரசியல்வாதியை*_ _*என்னால் அடையாளம் காண முடியவில்லை.* நான் இரண்டு முறை மீண்டும் மீண்டும் பார்த்தேன், ஆனால் அவர்களில் மிகவும்_ _*பணக்காரரை*_ _*என்னால் அடையாளம் காண முடியவில்லை.*_ _நான் படத்தை கண்ணுக்கு அருகில் வைத்து பெரிதுபடுத்திப் பார்த்தேன், ஆனாலும் அவர்களில்_ _*மிகவும் படித்த*_ _அல்லது_ _*செல்வாக்கு மிக்க மனிதரை*_ _*என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.*_ _அப்போது நான் எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்,_ "*_நிச்சயமாக,_ _வாழ்க்கை என்பது_ _நிரந்தரமில்லாது"._* _வெள்ளையாக இருந்தாலும் சரி,_ _கருப்பாக இருந்தாலும் சரி,_ _ஏழையாக இருந்தாலும் சரி,_ _பணக்காரராக இருந்தாலும் சரி,_ _உயரமாக இருந்தாலும் சரி,_ _குள்ளமாக இருந்தாலும் சரி,_ _அழகாக இருந்தாலும் சரி,_ _அசிங்கமாக இருந்தாலும் சரி,_ _படித்தவராக இருந்தாலும் சரி,_ _படிக்காதவராக இருந்தாலும் சரி,_ *_இயற்கையின் அழைப்பு தவிர்க்க முடியாதது. எனவே, பணிவாக இருங்கள்!_* _உங்கள் முதலீடுகள்,_ _வாழ்நாள்_ _சேமிப்புகள் மற்றும் சாதனைகள்,_ _பட்டங்கள் அல்லது கல்வித் தகுதிகளைப் பற்றிப்_ _பெருமையாகப் பேசிக்கொண்டு, "நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?", "நீ எனக்கு_ _சமமானவனா?", "நாம் ஒரே அந்தஸ்தில் இருக்கிறோமா?",_ _"உங்களுக்கு ஆட்களைத் தெரியுமா?", "உங்களுக்கு என் ஜாதி பற்றி தெரியுமா?", "உங்களுக்கு யாரைத் தெரியும்?" என்பது போன்ற கேள்விகளை சகா மனிதர்களிடம் கேட்கிறீர்கள்._ _*நீங்கள் வாழும் வாழ்க்கையே உறுதியற்றதாக இருக்கும்போது ஏன் பெருமை பேசுகிறீர்கள்?*_ _நீங்கள் யார் என்று மக்களுக்குத் தெரியுமா என்று கேட்கிறீர்கள், உண்மையில் எல்லோருமே மண்ணுக்கடியில் வெறும் தூசி, துகள்களே..._ _*மேலே உள்ள படத்தில் ஏழைகளையும் பணக்காரர்களையும் அல்லது பட்டதாரிகளையும் படிக்காதவர்களையும் உங்களால் வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், தயவுசெய்து பணிவாக இருக்க முயற்சி செய்யுங்கள், உங்கள் அகந்தையைக் குறைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.*_ _தற் பெருமையின் காரணமாக நீங்கள் புறக்கணித்த அந்த மனிதர்களை அரவணையுங்கள், நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கியவர்களை, குறைகள் இருந்தாலும் அவர்களை மன்னியுங்கள்._ _*மீண்டும் ஒருபோதும் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்த நபர்களுடன் சமாதானம் செய்து, மீண்டும் நட்பாக இணையுங்கள்.*_ _வாழ்க்கை கணிக்க முடியாதது!_ _*ஒரு நல்ல வாழ்க்கை வாழுங்கள், நீங்கள் இங்கு என்றென்றும் இருக்கப் போவதில்லை.*_ _இன்று நீங்கள் உயிருடன் இருந்தால்,_ _வாழ்க்கைக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்._
saravanan.
279 காட்சிகள்
#sinthanay thulirgal இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச் செய்யுங்கள்… 🌿 பலர் வாழ்க்கையைத் தொடங்க சரியான நேரம், சரியான வசதி, சரியான சூழ்நிலை வர வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். 👉 ஆனால் வாழ்க்கையின் உண்மை என்ன தெரியுமா? தொடங்குவதற்கான சரியான இடம் நீ இப்போது நிற்கும் இடமே. எதிர்காலம் உனக்கு எங்கேயோ இருந்து தொடங்குவதில்லை. 👉 அது இப்போதே, இங்கேயே தொடங்குகிறது. --- 🔥 1. “பின்னர்” என்பது முன்னேற்றத்தின் எதிரி “பின்னர் தொடங்கலாம்” என்ற எண்ணமே பல கனவுகளை அடக்கம் செய்திருக்கிறது. 👉 பின்னர் வரும் நேரம் பெரும்பாலும் வருவதில்லை. இப்போது எடுக்கப்படும் ஒரு சிறிய அடி தான் உண்மையான தொடக்கம். --- 🔥 2. இருப்பதை குறை சொல்லாதே அதையே கருவியாக்கு “என்னிடம் இது இல்லை” “அது இருந்திருந்தால்…” 👉 இந்த வாக்கியங்கள் மனதை நிறுத்திவிடும். உன்னிடம் இருப்பது சிறியதாக இருக்கலாம். 👉 ஆனால் தொடங்குவதற்கு அது போதும். --- 🔥 3. பெரிய கனவுகள் சிறிய செயல்களில் தான் பிறக்கின்றன ஒரே நாளில் பெரிய மாற்றம் தேவையில்லை. 👉 இன்று ஒரு முயற்சி. 👉 இன்று ஒரு முடிவு. 👉 இன்று ஒரு செயல். இந்தச் சிறிய தொடக்கங்களே பெரிய வாழ்க்கையை உருவாக்குகின்றன. --- 🔥 4. முடிந்ததை செய்வது பலவீனம் அல்ல “என்னால் இதுதான் முடியும்” என்று செய்வது சோம்பல் அல்ல. 👉 அது நிஜத்தை புரிந்த செயல்திறன். முடிந்ததை தொடர்ந்து செய்வவன் தான் ஒருநாள் முடியாததையும் செய்யக்கூடியவனாக மாறுவான். --- 🔥 5. ஒப்பீடு தொடக்கத்தை கொல்லும் மற்றவர்களின் தொடக்கம் உன் தொடக்கம் அல்ல. 👉 அவர்களிடம் இருப்பது உன்னிடம் இல்லாமலிருக்கலாம். அது பரவாயில்லை. உன் பாதை உனக்கே உரியது. --- 🔥 6. வாழ்க்கை முழு திட்டத்தை கேட்காது 👉 அது “இன்று நீ என்ன செய்தாய்?” என்று தான் கேட்கும். முழுப் பாதை தெரிய வேண்டியதில்லை. 👉 அடுத்த ஒரு அடி தெரிந்தால் போதும். --- 🔥 7. தொடங்கியவனுக்கு வழி தானாக உருவாகும் நிற்பவனுக்கு எதுவும் தெளிவாகத் தெரியாது. 👉 நடக்க ஆரம்பித்தவனுக்கு தான் வழியும், வாய்ப்பும், துணையும் தெரியத் தொடங்கும். --- 🔥 8. சிறிய முயற்சியை அலட்சியம் செய்யாதே இன்று நீ செய்யும் சின்ன விஷயம் நாளை உன் அடையாளமாக மாறலாம். 👉 பெரிய வாழ்க்கைகள் சின்ன தொடக்கங்களின் தொகுப்பே. --- 🔥 9. வாழ்க்கை பூரணத்தை எதிர்பார்ப்பதில்லை 👉 அது உண்மையை எதிர்பார்க்கிறது. முயற்சியை எதிர்பார்க்கிறது. தொடர்ச்சியை எதிர்பார்க்கிறது. பூரணமாக இல்லை என்பதற்காக தொடங்காமல் இருப்பதே உண்மையான இழப்பு. --- 🔥 10. இன்று தொடங்குவது தான் பெரிய தைரியம் நாளை தொடங்குவேன் என்று சொல்வது எளிது. 👉 இன்று தொடங்குவது தான் மனபலம். அந்த மனபலமே வாழ்க்கையை முன்னே நகர்த்தும். --- 🌟 முடிவுரை வாழ்க்கை உனக்கு அனைத்தையும் கொடுத்த பிறகு தொடங்கச் சொல்லாது. 👉 அது இருப்பதிலிருந்தே முடிந்த அளவிலேயே தொடங்கச் சொல்கிறது. இருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச் செய்யுங்கள்… அந்த “முடிந்தது” தான் ஒருநாள் “முடியாததை” சாத்தியமாக மாற்றும். இன்று. இப்போதே. இங்கேயே. தொடங்கு. 🌱 🌹🌹🌹
saravanan.
20 காட்சிகள்
#oru nimidam. *_ஒரு நிமிடம் உங்கள் வாழ்க்கையை மாற்றுமா? இதோ அந்த ரகசியம்!_* * 🌹🌹🌹‘ஒரு நிமிஷம்’ இந்த வார்த்தையை அடிக்கடி எல்லா சீரியல்களிலும் பேசுவதைக் கேட்டிருப்போம். ஒருத்தர் பேசிவிட்டு கிளம்பும்போது மறக்காமல் அடுத்த நடிகர் பேசும் டயலாக் இதுதான். இந்த வார்த்தையை கேட்டு கேட்டு எரிச்சல்தான் அதிகம் வந்தது. அதே நேரம் 'ஒரு நிமிஷம்' பல நேரம் நல்ல முடிவுகளுக்கு காரணமாகி விடுகிறது. நாடகங்களில் மட்டுமல்ல, மற்றவர்கள் இன்னொருவருடன் பேசும்போது இந்த வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பார்கள். சிறந்த முடிவுகள் ஒரு நிமிடத்தில் எடுக்க முடியுமா? 'பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம், பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்' கவியரசர் நமக்காகத்தான் பாடியுள்ளார். நாம் பயணம் செய்துகொண்டிருக்கும் பாதையில் முடிவெடுக்க வேண்டிய தருணம் வரும்போது, அந்த நிமிடம் வரும்போது சட்டென்று எடுத்துவிட வேண்டும். அங்கே ஒத்திவைப்பு கூடாது. உடலை நன்றாக வைத்துக் கொள்ள தினமும் நடைபயிற்சி செய்யச் சொல்வார்கள். மூச்சுப் பயிற்சி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். முகம் அழகாக இருக்கிறதா? என்று அவ்வப்போது கண்ணாடியை பார்த்து தெரிந்துக் கொள்கிறோம். முகம் மட்டுமல்ல, அகத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடி. ‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’ நெஞ்சத்தில் உள்ளதை முகம் காட்டிவிடும் என்பதை இந்தக் குறளின் மூலம் விளக்கியுள்ளார் திருவள்ளுவர். 'முகத்தில் முகம் பார்க்கலாம்' என்று ஒரு காதல் பாட்டை பட்டுக்கோட்டையார் 'தங்கப்பதுமை' படத்தில் பாடியிருப்பதை 80 கிட்ஸ் வரை கேட்டிருக்கலாம். காதலன் முகத்தில் காதலியின் முகம் தெரிவதை அழகாக சொல்லியிருப்பார். தங்கள் முகத்தை பார்க்க கண்ணாடி தேவையில்லை. ஒருவர் முகமே மற்றவரைப் பிரதிபலிப்பதாகச் சொல்லிவிட்டார். காதலில் மட்டுமல்ல எல்லா இடங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். நம் முகத்தை ஒரு தடவை நம் எதிரே உருவகப்படுத்தி பாருங்கள். அது உங்களால் செய்ய முடிந்தால் நீங்கள் ஒருமுகப்பட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். தினமும் ஒரு நிமிடம் இந்தப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு மிகப்பெரிய மாற்றம் உங்களுக்குள் வரும். . தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு கொடுத்தானே அதியமான் எப்படி? ஈகை குணம் அதிகம் உள்ள மன்னர்கள் நல்ல முடிவை எடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. பொன்னியின் செல்வன் நாவல் முழுவதும் வந்தியத்தேவன் எடுக்கும் முடிவுகள் எல்லாம் அந்த ஒரு நிமிடத்தில்தான். அது அவனது வாழ்வில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியதைப் படித்திருக்கிறோம். ஒரு நிமிஷம் (One minute) 60 விநாடிகள்தான். சொடுக்கு போடும் நேரத்தில் அந்த நிமிஷம் கடந்து சென்றுவிடும். எந்த ஒரு நிமிஷம் நம் வாழ்க்கையை உயர்த்தப் போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. "Just a tiny little minute, but eternity is in it" - சிறிய குட்டி நிமிடம்தான். ஆனால் நித்தியம் பொதிந்துள்ளது. ஒரு நிமிடம் தொடர்பாக Dr.Benjamin E Mays ஆங்கிலத்தில் எழுதிய கவிதையின் ஒரு வரி அது. *'ஒரு நிமிஷம்' என்று யாரவது நம்மிடம் சொன்னால் அந்த நிமிடத்தின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவோம்.* 🌹🌹🌹
saravanan.
14 காட்சிகள்
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁துளக்கில் நமிநந்தி தூய புனலூற்று_ _🍁விளக்கில் ஒளிநின்று வீச அருள்வானை_ _🍁அளப்பில் புகழானை ஆரூர் மேயானை_ _🍁வளத்தைத் தருவானை மறவேல் மடநெஞ்சே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_அசையாத திட பக்தி உடைய நமிநந்தி அடிகள் கமலாலயக் குளத்தின் தூய நீரை ஊற்றி எரித்த விளக்கில் நீடு ஒளிவீசும்படி அருளியவனை !! அளவற்ற புகழ் உடையவனை !! திருவாரூரில் உறைகின்றவனை !! எல்லா நலங்களையும் தருபவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
saravanan.
65 காட்சிகள்
#poojay seivathu eppadi. பூஜை இப்படி பண்ணுங்க...வீட்டில் அதிர்ஷ்டம் பெருகிக் கொண்டே இருக்கும்_* * 🛕🛕🛕வேல் பூஜை என்பது மிகவும் எளிமையான வழிபாடாக இருந்தாலும், மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. பல பக்தர்களின் வாழ்க்கையில் பல அதிசயங்களை நிகழ்த்தும் வழிபாடாக வேல் வழிபாடு கருதப்படுகிறது. நம்பிக்கையுடன், மனமுருகி முருகனிடம் வேண்டிக் கொண்டு, இந்த வேல் வழிபாட்டினை செய்யும் போது வேண்டியவை அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. > இந்து சமயத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு. அந்த வகையில் முருகப்பெருமானின் அடையாளமாகவும், சக்தியின் வடிவமாகவும் கருதப்படுவது, வேல். முருகப்பெருமானின் ஆயுதமாகவும், முருகப் பெருமானின் வடிவமாகவும் கருதப்படும் வேல், தீய சக்திகளை அழித்து, நன்மைகளையும், நிம்மதியையும் அருளும் தெய்வீக சக்தியாகப் பாவிக்கப்படுகிறது. அரக்கர்களை அழித்து உலகைக் காக்கும் வேலாயுதம், முருகனின் அருளின் பிரதிநிதியாகவே கருதப்படுகிறது.அதனால் தான் கோயில்களில் செய்யப்படும் வேல் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. அதேபோல், நம் வீடுகளிலும் சிறிய அளவில் வேல் வைத்து வழிபாடு செய்வது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. வீட்டில் முருகனின் வேலுக்கு எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்? எப்படி வழிபட்டால் முழுமையான பலன் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். வீட்டில் வேல் பூஜை செய்யும் சரியான முறை : வேல் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியது, முருகன் கோயில் அல்லது அறுபடை வீடுகளில் ஏதேனும் ஒரு தலத்தில் விற்கப்படும் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட சிறிய வேல் ஒன்றை வாங்க வேண்டும். அந்த வேல் வாங்கிய இடத்திலேயே, முருகப்பெருமானின் சன்னிதியில் வேலாயுதத்தை கையில் வைத்து, மனமுருகி பிரார்த்தனை செய்து, முருகனின் அருளைப் பெற்று, பிறகு அதை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டிற்கு கொண்டு வந்த வேலுக்கு உடனடியாக பூஜை செய்ய வேண்டும். பூஜை அறையில் ஒரு புதிய சிவப்பு நிற துணி விரிக்க வேண்டும். அதன் மீது ஒரு வெள்ளி கிண்ணம் அல்லது பித்தளை கிண்ணம் அல்லது செம்பு கிண்ணம் வைக்க வேண்டும். அந்த கிண்ணத்தில் புதிய பச்சரிசி நிரப்ப வேண்டும். அதன் நடுவில் வேலாயுதத்தை நேராக நட்டு வைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதே வேல் பூஜைக்கான அடிப்படை முறையாகும். வேலுக்கு அபிஷேகம் செய்யும் முறை : வேல் பூஜையை தொடங்க சிறந்த நாள் வளர்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது சுபமுகூர்த்த நாள் அன்றுதான் முதன்முதலாக பூஜையை தொடங்க வேண்டும். முதலில் கங்கை நீர் கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு காய்ச்சப்படாத சுத்தமான பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் சாதாரண தூய நீரால் வேலாயுதத்தை சுத்தம் செய்ய வேண்டும். தூய துணியால் மென்மையாக துடைக்க வேண்டும். மீண்டும் புதிய பச்சரிசி நிரப்பிய கிண்ணத்தில் வேலாயுதத்தை நட்டு வைக்க வேண்டும். அபிஷேகத்திற்குப் பிறகு சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வேலின் இரு பக்கங்களிலும் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். அதன் மீது வாசமுள்ள விபூதியை மென்மையாக தூவ வேண்டும். பின்னர் பன்னீர் ரோஜா, செவ்வரளி பூ போன்ற முருகனுக்குப் பிடித்த மலர்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். வேல் பூஜையின் போது நைவேத்தியமாக கற்கண்டு, அவல், பொரிகடலை, பழங்கள் போன்றவற்றை படைக்க வேண்டும். முருகன் காயத்ரி மந்திரம், கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், கந்த குரு கவசம், முருக ஸ்தோத்திரங்கள் இவற்றை மனமுருகி பாராயணம் செய்வது மிகுந்த பலனை தரும்.மேலே கூறிய முறையில் தொடர்ந்து 21 நாட்கள் மனம் உருகி, முழு நம்பிக்கையுடன் வேலுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தால் எத்தகைய பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தடைகள் நீங்கும். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் மறையும். செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கும், காரியத் தடைகள் விலகும் , மன அமைதி கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், செல்வ வளம் அதிகரிக்கும். 🍁🍁🍁
saravanan.
463 காட்சிகள்
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (06.02.2026)* .................................................................... *"ஆடம்பரம் ஒரு அழிவுப்பாதை...!"* ......................................................................... நாளும் வளர்ந்து வரும் அறிவியல், மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றிவிட்டது. ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்களை விட, அதனால் அழிந்து போனவர்கள்தான் அதிகம்... ஒவ்வொரு செயலும் மனித வாழ்க்கையில் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்பதில் எந்த தடையுமில்லை. அது ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று எண்ணும்போதுதான் அழிவுப்பாதை ஆரம்பமாகின்றது... மன்னர் கிருட்டிண தேவராயருக்கு பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது. முதன்மை அரசவையோர்கள், பொதுமக்கள் என மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள்... தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொதி மிகப் பெரிதாக இருந்ததால், அவையில் உள்ளவர்கள், ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொதியைப் பிரிக்குமாறு தெனாலிராமனிடம் கூறினார் அரசர்... தெனாலிராமன் பொதியைப் பிரித்தார், அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.அவையினர் பகடி செய்து சிரித்தனர்... அரசர், “ராமா!, இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன...?” எனக் கேட்டார்... அரசே!, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்... "அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்...!” என்றார்... அவையினர் கரவோசை எழுப்பி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ”ராமா!, எனக்கு சரியான புத்தி புகட்டினாய்". ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை... ”புதையலும் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே என் பிறந்தநாள் விழாவை நிறுத்துங்கள்", இனி என் பிறந்த நாளன்று வறுமையில் வாடும் ஆதரவற்ற ஏழைகள், வயோதியர்களுக்கு மூன்று வேலை அன்னதானம் செய்யுங்கள்... வீர விளையாட்டுக்களை நடத்துங்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னும், பொருளும் கொடுங்கள். தேவொயின்றி பணத்தை ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது,” என ஆணையிட்டார்... *ஆம் நண்பர்களே ............* 🟣*ஆடம்பர மூதான மோகம் அழிவைத்தான் கொடுக்கும்* 🎾*தகுதிக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் பின் ஒருநாள் அமைதி இழப்பார்கள்...!* 🔴 *ஆடம்பர வாழ்க்கை, வாழ்பவனின் செல்வம் எல்லாம் சூரிய ஒளியின்முன் மாயும் மூடு பனியைப்போல மறைந்து விடும்...!!* ⚫ *நமது தகுதிக்கு உட்பட்டு, எளிமையாக வாழ்ந்து விட்டால் மனநிறையுடன் வாழலாம்...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ ( 94429-28401) 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
saravanan.
0 பார்க்க
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam. #kaalay vanakkam.
See other profiles for amazing content