ஃபாலோவ்
saravanan.
@60258885saravanan
14,160
போஸ்ட்
8,700
பின்தொடர்பவர்கள்
saravanan.
327 காட்சிகள்
2 மணி நேரத்துக்கு முன்
#hmm hummy. குறிப்புகள்:* ➖➖➖➖➖➖➖➖➖➖ *குஜராத்தி பாணியில் காரமான மற்றும் கிரீமியான கறி:* குஜராத்தி பாணியில் காரமான மற்றும் கிரீமியான கறி செய்ய, முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விழுதை தயாரிக்கவும். பின்னர், நறுமணப் பொருட்களை (மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்றவை) வறுத்து, இந்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி ப்யூரி சேர்த்து, முந்திரி ப்யூரி அல்லது ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து, காரத்தை கூட்ட மிளகாய் சேர்க்கவும். இறுதியில், உங்களுக்கு பிடித்த காய்கறிகள் அல்லது பருப்புகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். *செய்முறை:* விழுது தயாரிப்பு: வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும். விருப்பப்பட்டால், முந்திரி ஊறவைத்து அரைக்கலாம். அடிப்படை வறுவல்: ஒரு வாணலியில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி, சீரகம், பெருங்காயம், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்து வறுக்கவும். விழுதைச் சேர்த்தல்: அரைத்து வைத்த வெங்காய விழுதை சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி மற்றும் காரம்: தக்காளி ப்யூரி சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும். கிரீமியைச் சேர்த்தல்: காரமான, கிரீமியான சுவைக்காக முந்திரி விழுது அல்லது ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும். காய்கறிகள்/பருப்பு சேர்த்தல்: இப்போது உங்களுக்கு பிடித்த காய்கறிகள் அல்லது சமைத்த பருப்புகளை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பரிமாறுதல்: கொத்தமல்லி தழை அல்லது காய்ந்த வெந்தய இலைகளால் அலங்கரித்து, ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறவும். 🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲
saravanan.
424 காட்சிகள்
2 மணி நேரத்துக்கு முன்
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை* (24.11.2025) ......................................................... *''கூட்டு முயற்சி ( TEAM WORK)"* ......................................................... பல நேரங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால் தான் நடந்ததாக நினைக்கின்றனர். ஆனால்!, மற்றவர்களின் ஒரு பங்களிப்பு இல்லாமல் அவ்வேலை முடிந்திருக்காது... ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாக செய்யப்படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது... ஏனெனில்!, கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது, குழுவிலிருப்பவர்களுடன் வேலை செய்யும் போது நமக்கு சகிப்புத்தன்மை, மற்றும் பலவித சூழ்நிலைகளைக் கையாள்வது போன்ற சிறப்பு பண்புகள் வந்து சேரும்... கோடைகாலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப் பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றைப் பறக்க விடுவதைக் கண்டார். அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராகப் பறந்தது... அது அடுத்த நகரத்தில் இருப்பவர்களுக்குக் கூடத் தெரிந்திருக்கும் வகையில் உயரமாகப் பறந்தது. பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்கு “நகரத்தின் சாவி” எனும் பட்டத்தை வழங்க விரும்பினார் நகர முதல்வர் (மேயர்). இந்தக் காற்றாடி பறந்ததற்கு யார் பொறுப்பு...? என மக்களிடம் கேட்டார்... "நான் தான்” என்றான் ஒரு சிறுவன். “நான் என் கைகளாலேயே காற்றாடியை உருவாக்கினேன். நானே அதில் அழகான படங்களை வரைந்து அழகான காகிதத் துண்டுகளால் அதை உருவாக்கினேன். நானே அதைப் பறக்க வைத்தேன்” என்றான் அவன்... ஆனால் காற்றோ!, "நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது. என்னுடைய ஓட்டமே காற்றாடியை சீராகவும், சரியான திசையிலும் பறக்கச் செய்தது. நான் மட்டும் அதை நகர்த்தாவிட்டால் அது பறந்திருக்கவே முடியாது. எனவே நானே அதைப் பறக்க வைத்தேன்” என்றது காற்று... இல்லை!, நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது காற்றாடியின் வால், நான் தான் காற்றாடியை நகர்த்தவும் காற்றில் அது நிலையாகப் பறக்கவும் காரணம். நான் இல்லாவிட்டால் காற்றாடி கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித் தரையில் விழுந்து இருக்கும். அதை அந்தச் சிறுவனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது. எனவே!, நானே அதைப் பறக்க வைத்தேன்” என்றது அந்த காற்றாடியின் வால்... 🔹 இப்போது நீங்களே கூறுங்கள், யார் உண்மையில் காற்றாடியைப் பறக்க வைத்தவர்கள்...? *ஆம் நண்பர்களே...!* 🔴 எந்தவொரு செயலையும், "நான் தான் செய்தேன்", "என்னால் தான் அந்த செயல் செய்யப்பட்டது" என்று தன்னைப் பற்றி பெருமை கொள்ளாமல், நாங்கள் அல்லது எங்களது கூட்டு முயற்சியால் சாதித்தோம் அல்லது செய்யப்பட்டது போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்...! ⚫ நிர்வாகவியலார்கள் இதைத் தான் கூட்டு முயற்சி (Team Work) என்பார்கள். தன் முயற்சி ஒருவரின் வெற்றிக்கும், கூட்டு முயற்சி அனைவரின் வெற்றிக்கும் வழிகோலும்...!! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
saravanan.
304 காட்சிகள்
2 மணி நேரத்துக்கு முன்
#🙏கோவில் ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில்,* *மூலவர் : காயத்ரி லிங்கேஸ்வரர்.* *பவானி-638301,* *ஈரோடு மாவட்டம்.* *+91-4256-230 192, 98432 48588.* *காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•═•⊰ ═•╗* *★❀·.:::::::·:பகிர்வு:·::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰ • •═•╝* *சிறப்பு : மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மூன்று நதிகள் பாய்வதால் "தீர்த்த சங்கமம்' என்றும், ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் "க்ஷத்திர சங்கமம்' என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்ரலிங்கேஸ்வரர் மற்றும் காயத்ரி லிங்கேஸ்வரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கினைந்து உள்ளதால் "மூர்த்தி சங்கமம்' என்றும் அழைக்கப்படுகிறது.* *இத்தலத்தை சுற்றிலும் சங்ககிரி மலை, திருச்செங்கோட்டில் உள்ள நாககிரி, பெருமாள் மலையில் உள்ள மங்கலகிரி, ஊராட்சிகோட்டையில் உள்ள வேதகிரி மற்றும் காவிரியாற்று ஓரம் பதுமகிரி ஆகிய மலைகளுக்கு நடுவே இருப்பதால் பாவனி ஸ்தலம் "பஞ்சகிரி மத்திய பிரதேசம்' என அழைக்கப்பட்டது.* *திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.* *சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.* *"மந்திரங்களின் ராஜா" எனப்படும் காயத்ரி மந்திரத்தை, அவன் முன் சென்று ஒருமுறை சொன்னால் போதும்; ஒரு லட்சம் முறை சொன்ன பலனை நாம் அடைந்து விடலாம். மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் அருகில் காவிரி யாற்றின் ஓரத்தில் தனித்து நின்று தன்னிகரில்லாத பவன்களை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார் காயத்ரி லிங்கேஸ்வரர். இத்தலத்தில் மூன்று நதிகள் பாய்வதால் "தீர்த்த சங்கமம்' என்றும், ஒரே ராஜகோபுரத்தின் கீழ் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் "சேத்திர சங்கமம்' என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்ர லிங்கேஸ்வரர் மற்றும் காயத்ரி லிங்கேஸ்வரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கினைந்து உள்ளதால் "மூர்த்தி சங்கமம்' என்றும் அழைக்கப்படுகிறது.* *ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரியாற்றோரம் "காயத்ரி லிங்கேஸ்வரர்' தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கிச் சென்றால் வேண்டிய வரங்களை உடனே பெறலாம் என்பது ஐதீகம்.* *பராசர முனிவர். குபேரர், சூரியன் ஆகியோர் மூலஸ்தானம் வந்து வணங்கிச் சென்றனர். இத்தல விருட்சம் இலந்தை மரம். காயத்ரி லிங்கேஸ்வரர் முன்னால் சென்று, காயத்ரி மந்திரத்தை சொல்லத் தகுதியுடைய உச்சரிப்பு பிறழாமல் சொல்லக்கூடியவர்கள், ஒரு தடவை சொன்னால் போதும், லட்சம் தடவை சொன்ன பலன் கிட்டும்.* *இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி தினமும் இறைவனை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சங்மேஸ்வரரை வணங்குவதற்கு முன், சற்று தூரத்திலுள்ள காவிரியாற்று ஓரம் சென்று தினமும் நித்யகர்ம அனுஷ்டானத்தை தொடர்ந்து செய்து வந்தாராம். அதுபோல் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து 12 ஆயிரம் கோடி முறை உச்சரித்த காரணத்தால், "காயத்ரி லிங்கேஸ்வரர்" அங்கே தானாகவே தோன்றினார்.* *இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.* *இனிய காலை வணக்கம்.🙏💐* *🌹அன்புடன்🌹* *சோழ.அர.வானவரம்பன்.* *+918072055052.* 🪴 🪴🪴 🪴🪴 🪴🪴 🪴
saravanan.
485 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#sinthanay thulirgal ஒவ்வோர் ஆலோசனைக்கும், அவர்களிடம் ஏற்கெனவே ஒரு முடிவு இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை! 🌿 வாழ்க்கையில் நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் “யாரிடம் ஆலோசனை கேட்கலாம்?” என்று எண்ணியிருக்கிறோம். சிலர் நமக்கு நல்ல நோக்கில் கூறுவார்கள், சிலர் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் சொல்வார்கள், சிலர் தங்கள் மனநிலையின் அடிப்படையில் கூறுவார்கள். ஆனால் உண்மையில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே ஒரு முடிவு செய்து விட்டுத் தான் நம்மிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அது உண்மையை மறைக்கும் முகமூடி போல — ஆனால் மனதளவில் அவர்கள் தீர்மானம் செய்து விட்டார்கள். 💭 --- 🌱 1️⃣ ஆலோசனை கேட்பது ஒரு மனஅமைதி தேடல் மிகும்பாலானவர்கள் ஆலோசனை கேட்பது உண்மையான தீர்வு தேடல் அல்ல. அது மனதில் ஏற்கனவே எடுத்த முடிவுக்கு “ஆதரவு” தேடல் மட்டுமே. அவர்கள் கேட்பது உறுதிப்படுத்திக் கொள்ள — “நான் தவறாக நினைக்கலையா?” என்று. --- 🌾 2️⃣ உண்மையான ஆலோசனை கேட்பவர்கள் அரிது ஒரு உண்மையான ஆலோசனை கேட்பவன் தான் வளர்ச்சி அடைவான். ஏனெனில் அவன் கேட்பது தீர்வு தேடி, புதிதாக சிந்திக்க. ஆனால் பெரும்பாலானவர்கள் கேட்பது வெறும் ஒப்புதல் பெறவே. --- 🌻 3️⃣ ஆலோசனையை கேட்கும் போது ‘ஓபன் மைண்ட்’ தேவை உண்மையாக ஆலோசனை பெற விரும்புகிறவன், தனது சிந்தனையை சற்று ஓரம்கொடுக்க வேண்டும். மனம் திறந்தவர்தான் மாற்றத்தை ஏற்க முடியும். மாற்றத்தை ஏற்காதவன், எந்த ஆலோசனையையும் பயனாக மாற்ற முடியாது. --- 🌼 4️⃣ பலர் ஆலோசனை கேட்டு தீர்மானத்தை நியாயப்படுத்துவார்கள் “நான் இதை செய்யலாமா?” என்று கேட்பார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஏற்கனவே தீர்மானம் செய்துவிட்டார்கள். நாம் “இல்லை” என்றாலும் அவர்கள் “ஆனா எனக்கு அது சரியாகத் தோணுது” என்று சொல்லி தங்களது முடிவை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். --- 🌷 5️⃣ ஆலோசனை என்பது ‘தீர்மானத்தை மாற்றுவது’ அல்ல ஆலோசனை என்பது ஒருவரை திருப்பி விடுவதற்கான கருவி அல்ல. அது திசையை தெளிவாக்கும் ஒளி. ஆனால் யாராவது அதை ஒரு தடையாக நினைத்தால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரே இடத்தில் மாட்டிக் கொள்வார்கள். --- 🌹 6️⃣ சிலர் ஆலோசனை கேட்பது வெறும் பழக்கம்தான் அவர்களுக்கு எல்லாவற்றிலும் மற்றவர்களின் கருத்து தேவை. இது ஒரு பாதுகாப்பு உளவியல் — தாங்களாக முடிவு எடுக்க அச்சப்படுவார்கள். ஆனால் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், ஒருநாள் அவர்கள் தங்களது உள் குரலை கேட்க கற்றுக்கொள்ள வேண்டும். --- 🌺 7️⃣ நல்ல ஆலோசனை என்பது நிஜம் கூறும் துணிவு நல்ல நண்பர் எப்போதும் உனக்கு பிடித்ததை அல்ல, உண்மையை சொல்லுவான். அதுவே உண்மையான ஆலோசனை. கேட்பவர் அதை ஏற்கவில்லை என்றாலும், காலம் போக அதுவே அவருக்கு மிகப் பெரிய பாடமாக மாறும். --- 🌼 8️⃣ தவறான ஆலோசனை — தவறான திசை பல நேரங்களில், ஆலோசனை கேட்பவர் தவறானவரிடம் கேட்பார்கள். அனுபவமில்லாதவரிடமோ, எதிர்மறையானவரிடமோ கேட்பது — இருள் வழியில் ஒளி தேடுவது போல. ஆலோசனை கேட்கும் இடம் தான் முக்கியம். --- 🌻 9️⃣ எல்லோரிடமிருந்தும் ஆலோசனை எடுக்க வேண்டாம் எல்லாருக்கும் வாழ்க்கை அனுபவம் வேறு. ஒருவர் வென்ற வழி, இன்னொருவருக்குத் தோல்வியாகலாம். எனவே ஆலோசனை கேட்கும் போது, உன் வாழ்க்கை நோக்கத்தோடு பொருந்துகிறதா? என்று உள் மனதில் கேள். --- 🌸 🔟 இறுதியில் — உன் தீர்மானமே உன் வாழ்க்கை நீ எத்தனை பேரிடம் கேட்டாலும், முடிவு உன்னுடையது. நீ தான் அதை வாழப் போகிறாய். எனவே, ஆலோசனையை கேள், ஆனால் முடிவை உன் உள்ளம் சொல்லட்டும். ❤️ --- 🌟 முடிவுரை: வாழ்க்கையில் ஆலோசனை கேட்பது தவறு இல்லை, ஆனால் முடிவு செய்வது உன் பொறுப்பு. மற்றவர்களின் சொற்கள் உன் பாதையை ஒளிர வைக்கலாம், ஆனால் நடக்க வேண்டியது நீ தான்! 💪 ஏனெனில், வெற்றி பெறும் மனிதன் ஆலோசனையை கேட்டு, தீர்மானத்தை தன்னுள் எடுப்பவன் தான். 🌈 🌹🌹🌹
saravanan.
705 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#magaa Sakthi. ரத்ன மங்கலம்: அரைக்காசு அம்மன் ஆலயம்! வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் வழியில், தாகூர் இன்ஜினியரிங் கல்லூரியின் பக்கத்தில் செல்லும் பாதையில் அரை கி.மீ. தூரத்தில் ரத்ன மங்கலத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கிறது. அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது நன்னம்பிக்கை. ஒரே இடத்தில், சுற்றிலும் நூற்றி ஏழு அம்மன்கள் அருள்பரப்ப, நடு நாயகமாக அரைக்காசு அம்மன் எனும் பிரகதாம்பாள் கொலுவீற்றிருக்கும் ஆலயத்தை தரிசித்தால் வரமருளும் அன்னையின் பாசத்தில் மூழ்கலாம் என்பதும் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. கை தவறியோ அல்லது மறந்தோ எங்கேனும் வைத்து விட்ட பொருளை இந்த அரைக்காசு அம்மனை நினைத்து, 'அம்மா உனக்கு வெல்லம் கரைத்து வைக்கிறேன். தொலைந்த பொருள் எனக்குக் கிட்ட அருள வேண்டும்!.' என மனமுருகி நேர்ந்து கொண்டால், தொலைந்த பொருள் எதுவாக இருந்தாலும் உடனே சில நாட்களில் கிட்டி விடும் அற்புதம் இன்றும் நிகழ்ந்து வருகிறது!. ஆலயத்தில் நுழைந்ததும் வலது புறம் தல Sri விநாயகர் அருளக் காணலாம். அவரது திருவுருவிற்கு நேர் எதிரே பதினெட்டாம் படி கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. ஆண்டிற்கு ஒரு முறை ஆடி மாதம் 18 ஆம் தேதியன்று மட்டும் இந்தக் கருப்பண்ண சன்னிதியின் கதவைத் திறந்து வைத்து விமரிசையாக வழிபாடுகள் சுவாமி. நடத்துகிறார்கள். மற்ற நாட்களில் வருஷம் பூராவும் பூட்டிய கதவிற்கே வழிபாடு!!. இங்கே கோவில் கொண்டு அருளும் அரைக்காசு அம்மனைச் சுற்றி, புகழ் பெற்ற சக்தி தலங்களில் அருள் மழை பொலிந்து வரும் 107 தேவியர்கள், அங்கே எந்தெந்த திருவுருவில் அருள்கின்றனரோ அதே வடிவில் வரிசையாக இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேவியர்க்கும் தனித்தனி விமான கலசம் உள்ளது. இதில் வடிவுடை, கொடியிடை, திருவுடை ஆகிய மூன்று அம்மன்களையும் பௌர்ணமி அன்று தரிசிப்பது விசேஷசம். அதேபோல காமாட்சி விசாலாட்சி, மீனாட்சி, பெண்களின் சபரிமலை தெய்வமான ஆற்றுக் கால்பகவதி, சக்குளத்துக்காவு பகவதியையும் இங்கே தரிசிக்க முடிகிறது இந்த அன்னையர்களுக்கு குங்கும அர்ச்சனை செய்யும் அன்பர்களுக்கு ஆலயத்தின் சார்பில் ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல், ரவிக்கைத் துணி, கருப்பண்ண சுவாமியின் பிரசாதமான சந்தனம், அரைக்காசு அம்மனுக்கு மிகவும் பிடித்தமான வெல்லம் ஆகியவற்றை வைத்துப் பிரசாதமாகத் தருகிறார்கள்! தேவியின் கருவறை முன் ஓங்காரமான பஞ்லோகத்தினாலான திரிசூலத்தை தரிசிக்கிறோம். அதன் முன் பலிபீடமும், சிம்ம வாகனமும் இருக்கின்றன. அம்பிகையின் நேர் எதிரே கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் வடிவான மேரு அமைந்துள்ளது. இந்த மேருவுக்கு பக்தர்கள் தாமே அபிஷேகம் செய்து வழிபடலாம். அர்த்தமண்டபத்தில் உள்ள விதானத்தில் ஒன்று முதல் 108 வரை எண்கள் கொண்ட பிரசன்னயந்திரம் எழுதப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் மேற்சொன்ன அந்த யந்திரத்தின் கீழ் நின்று, கீழே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியிலிருந்து ஒரு திருவுளச்சீட்டை, அன்னையை தரிசித்தபடியே எடுக்கிறார்கள். அதில் எந்த எண் வருகிறதோ அதற்கான பலனும் அந்தத் திருவுளச் சீட்டிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்படி பயன் அடைந்த பக்த கோடிகள் ஏராளம்! கருவறையில் துவாரபாலகிகளாக பத்ரிணி, தீப்தா எனும் தேவியின் தோழியர் இருவர் வீற்றிருக்கின்றனர். அரைக்காசு அம்மன் பாசம் - அங்குசம் - வரத அபயம் தாங்கி அர்த்த பத்மா சனத்தில் சாந்தவடிவினளாய் பொலிகின்றாள். இந்த அன்னையின் திருவடியின் கீழ் உற்சவ விக்ரகம் உள்ளது! தொடர்ந்து 12 வாரங்கள் இந்தக் கோவிலுக்கு வந்து இந்த அம்பாளைத் தரிசிக்கும் திருமணமாகாத கன்னியருக்கு உடனே திருமணயோகம் கூடி வருகிறது. மணவாழ்வில் விரக்தி கண்டு பிரியும் நிலையில் உள்ள தம்பதியும் இந்த அன்னையை வந்து தரிசித்திட வேற்றுமை மறைந்து இல்வாழ்வில் இனிமை சேர்ந்திடும் என்பதும் ஐதீகமாக உள்ளது. 🟨🟨. ♦️. 🟥🟥 *எல்லாம் அவன் சித்தம்* *சர்வம் சிவமயம்* 🟨🟨. ♦️. 🟥🟥
saravanan.
614 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁வணங்கி வாழும் அன்பினார் மனங்க ளிக்க நல்குவான்_ _🍁அணங்கு பாகம் ஆயினான் அழிக்கும் நஞ்சு கண்டுவான்_ _🍁கணங்கள் நாத காவெனக் களத்தில் இட்ட நல்லவன்_ _🍁குணங்கள் எட்டு டைப்பிரான் குடந்தை மேய கூத்தனே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_என்றும் வழிபடும் பக்தர்கள் மனம் மகிழ வரம் அருள்வான் !! உமைபங்கன் !! எல்லாவற்றையும் அழிக்கவல்ல ஆலகால விஷத்தைக் கண்டு தேவர்கள், "பூதகணங்களுக்கு நாதனே! காத்தருளாய்" என்று சரண்புகவும், அவர்களுக்கு இரங்கி அந்த விடத்தைக் கண்டத்தில் வைத்த நல்லவன் !! எண்குணத்தன் !! எண் குணங்களாவன. 1. தன்வயம். 2. தூய உடம்பு. 3. இயற்கையுணர்வு 4. முற்றுணர்வு, 5. இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்றல் 6. முடிவில் ஆற்றல், 7. பேரருள், 8. வரம்பில் !! அப்பெருமான், கும்பகோணத்தில் உறைகின்ற கூத்தன் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
saravanan.
533 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#aalayam arivom. ஆன சுயம்பு அம்மன்! உலகிலேயே இங்கு மட்டும்தான்!_* * 🛕🛕🛕தேவர்கள் இட்ட பிரம்மதண்டம், கோடாரியால் வெட்டுப்பட்ட தடத்துடன் சிவலிங்கம், ருத்ராட்சத்தைத் தாங்கியபடி சுயம்பு அம்மன்... எங்கே? அர்ச்சுனம் - மருதமரம் ஸ்ரீசைலம் – தலையார்ச்சுனம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் – இடையார்ச்சுனம் திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் – கடையார்ச்சுனம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் (நாறும்பூ -மணம்மிக்க மலர்கள்) கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. > ஒரு சமயம், தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வழிபடுவதற்கு சிறந்த இடம் தேடினார்கள். காசிக்கு நிகரான திருத்தலம் எதுவென்று சிவபெருமானிடம் கேட்டார்கள். சிவபெருமாள் பிரம்மதண்டத்தைத் தேவர்களிடம் கொடுத்து, அதைத் தரையில் போடும்படி கூறினார். தேவர்களும் பிரம்மதண்டத்தை தரையில் இட, அது கங்கை தொடங்கி பல்வேறு இடங்களில் பயணித்து, தாமிரபரணி ஆற்றங்கரையில் வந்து நின்றது. அந்த இடமே திருப்புடைமருதூர். காசிக்கு நிகரான திருத்தலம் இதுவே என சிவபெருமான் கூற, தேவர்கள் அங்கே சிவலிங்கத்தையும், பிரம்மதண்டத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்து தேவலோகம் திரும்பினார்கள். தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், காலப்போக்கில் மரங்கள் வளர்ந்து, மண்மூடி மறைந்துவிட்டது. நாளடைவில் மருத மரங்கள் நிறைந்த வனமாக இப்பகுதி மாறியது. வீரமார்த்தாண்டவர்மன் என்ற மன்னன், ஒருமுறை வேட்டையாட இந்த வனத்திற்கு வந்தான். அவன் கண்ணில்பட்ட ஒரு மானை நோக்கி அம்பு எய்தான். மான் அங்கிருந்த ஒரு மருத மரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்தது. மன்னன் அந்த மரத்தை வெட்டும்படி உத்தரவிட்டான். வீரர்கள் கோடாரியால் மரத்தை வெட்ட ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த வீரர்கள் மன்னனிடம் தகவலைச் சொல்ல, மன்னன் வந்து பார்த்து, உள்ளே வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் இருப்பதைக் காண்கிறான். தன் தவறுக்கு வருந்திய மன்னன், அங்கே ஆலயம் எழுப்பி, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்கிறான். அதுவே இப்போதிருக்கும் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் ஆலயம் ஆகும். தேவர்கள் வைத்து பூஜித்த பிரம்மதண்டத்தை இப்போதும் இக்கோவிலில் தரிசிக்கலாம். அதே போல் இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் கோடாரியால் வெட்டுப்பட்ட தடமும், அம்பு பாய்ந்த தடமும் இப்போதும் இருக்கிறது. காயம்பட்ட சுயம்பு மூர்த்தியின் லிங்கத் திருமேனிக்கு சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது. நாறும்பூநாதர் எங்ஙனம் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறாரோ, அதைப்போலவே அம்பிகையும் உளிபடா திருமேனியாக நின்றகோலத்தில் அருள்கிறார். இத்தலத்து அம்பிகையின் திருமேனி ருத்ராட்சத்தால் ஆன சுயம்பு திருமேனி. இந்த விக்ரகம் இமயமலையின் ஒரு பகுதியில் உள்ள கோமதி ஆற்றில் இயற்கையாகவே கண்டெடுக்கப்பட்ட சிலை என்று சொல்கிறார்கள். இதனால்தான் அம்பிகைக்கு கோமதி என்ற பெயர் வந்தது என்கிறார்கள். அம்பிகைக்கு பாலபிஷேகம் செய்யும்போது ருத்ராட்சத் திருமேனியை நன்றாகத் தரிசிக்கலாம். கருவூர் சித்தர் இறைவனைத் தரிசிக்க வந்தபோது, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அக்கரையில் நின்று தவித்த சித்தர், நாறும்பூநாதரைக் காண இயலாது போய்விடுமோ என்று வேதனைப்பட்டார். “நாறும்பூநாதா! உன்னைத் தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கிறேன். ஆற்றில் வெள்ளம் புரண்டு ஓடுகிறது. உன் திருமுக தரிசனத்திற்கு வழி சொல்ல மாட்டாயா?” என்று இறைவனிடம் இறைஞ்சினார். பக்தனின் குரலுக்கு செவிசாய்க்கும் விதமாக நாறும்பூநாதர் சற்றே திரும்பி, சித்தர் சிரமப்படாமல் ஆற்றைக் கடந்து வர அருளினார். இப்போதும் இறைவன் நாறும்பூநாதர், பீடத்திலிருந்து சற்றே இடப்பக்கம் தலை சாய்ந்தபடி இருப்பதைக் காணலாம். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் நவகைலாயங்களில் இத்திருத்தலமும் ஒன்று. இத்தலத்திற்கு மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி போன்ற பெயர்களும் முந்தைய காலங்களில் இருந்துள்ளன. இக்கோவிலுக்குப் பின்புறம் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையில், தனி சந்நிதியில், ஆதியில் மான் ஒளிந்து லிங்கம் வெளிப்பட்ட மருத மரத்தின் அடிப்பகுதி உள்ளது. இதில் தேவேந்திரன் வணங்கியபடி காட்சியளிக்கிறார். 🍁🍁🍁
See other profiles for amazing content