ஃபாலோவ்
saravanan.
@60258885saravanan
15,071
போஸ்ட்
9,457
பின்தொடர்பவர்கள்
saravanan.
0 பார்க்க
https://youtube.com/watch?v=zvA5sGU010s&si=B5499FR4szf9x_r7 (Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam
saravanan.
484 காட்சிகள்
#virinthomal avasiyam. *_மனிதனை மனிதனாக்கும் இரு கண்கள்!_* _விருந்தோம்பல்/வாசிப்பு இவை இரண்டும் இன்று காணாமல் போகும் நிலையில் உள்ளன என்பதை எடுத்துச் சொல்வோம்._ * 🌹🌹🌹விருந்தோம்பல் – மனிதனை மனிதனாக்கும் அறம் ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வீடுகளில் கதவைத் தட்ட வேண்டியதில்லை. வாசலில் நின்றாலே முகத்தில் புன்னகையுடன் “வாங்க… வாங்க…” என்ற அழைப்பு ஒலித்தது. அது வெறும் வார்த்தையல்ல — அது தமிழரின் பண்பாடு. விருந்தோம்பல் என்பது உணவு பரிமாறுதல் மட்டும் அல்ல. அது மனத்தைப் பகிர்தல். ஒரு தட்டு சோறு, ஒரு சொட்டு ரசம், அதற்கும் மேலாக ஒரு அன்பான பார்வை... அதுவே விருந்தினரின் பசியை முழுமையாக தீர்த்தது. இன்றைய வேகமான வாழ்க்கையில் “நேரமில்லை”, “வேலை அதிகம்” என்ற காரணங்கள் விருந்தோம்பலை மெதுவாக வாசலுக்கு வெளியே நிறுத்திவிட்டன. ஆனால் நினைவில் கொள்ளுங்கள்... திருவள்ளுவர் உயிரைக் காட்டிலும் உயர்வாகக் கூறிய அறம் இது ஒன்றே. விருந்தினரை வரவேற்கும் அந்த ஒரு நிமிடம் நம்முடைய மனதை விரிவாக்குகிறது. சுயநலத்திலிருந்து சமூகத்துக்கான பயணம் அங்கேதான் தொடங்குகிறது. விருந்தோம்பல் என்பதை party என அர்த்தம் கொள்கின்றனர் இந்த காலத்து இளைஞர்கள். ஆனால் வீட்டிற்கு வருகின்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாராயிருப்பினும் அன்புடன் வரவேற்று தாகம் தீர தண்ணீர் அல்லது மோர் கொடுத்து உபசரிப்பது தான் தமிழரின் தலையாய பண்பாடு. இன்று அது காணாமல் போகும் நிலையில் உள்ளது என்பதை எடுத்துச் சொல்வோம். இன்றே ஒரு மாற்றம் செய்வோம். வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அன்புடன் அமர வைத்து, புன்னகையுடன் பேசி. நலம் விசாரித்து உறவுகளை மேம்படுத்துவோம். அது அவருக்கு மட்டுமல்ல — நமக்கே ஒரு ஊக்கமாக மாறும். நம் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு பலமாகவும், பாலமாகவும் இருக்கும். ‘விருந்தோம்பல்’ என்பது பழக்கம் அல்ல. அது ஒரு மனிதனை மனிதனாக்கும் அறம். ‘வாசிப்பு’ – வாழ்க்கையை உயர்த்தும் மந்திரம் இன்று நம்முள் பலருக்கும் படிக்கும் ஆர்வம் இருப்பினும், புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற உண்மையான உந்துதல் குறைந்து வருகிறது. “தேவைப்படும் போது கைப்பேசியில் படித்தால் போதும்” என்ற மனநிலைக்கு நாம் பழகிவிட்டோம். கல்வி என்பது பள்ளி, கல்லூரி புத்தகங்களுக்குள் மட்டுமே அடங்கிய ஒன்றல்ல. பல்வேறு புத்தகங்களும், நாளிதழ்களில் வரும் செய்திகள் கூட ஒரு விதமான வாழ்க்கைக் கல்வியே. ஒருவர் எவ்வளவு நேரம் வாசிப்பில் தன் மனதை செலுத்துகிறாரோ, அந்த அளவிற்கு அவரின் மனச்சிந்தனை விரிவடைகிறது. அதோடு, வாசிப்பு மனிதனின் மனதை அமைதியடையச் செய்து, தெளிவான சிந்தனையை உருவாக்குகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே வாசிப்பைப் பழக்கமாக்க வேண்டும். அதற்காக, அவர்களின் பிறந்த நாள் போன்ற சந்தோஷமான தருணங்களில், அவரவர் வயதுக்கு ஏற்ற கதைப் புத்தகங்களை பரிசாக அளிப்பது மிகவும் சிறந்த வழியாகும். மேலும், தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அன்றைய நாளிதழ் செய்திகளை வாசிக்கச் செய்ய வேண்டும். அதிலிருந்து சிறுவர் சம்பந்தமான சில வினாக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு விடை காணச் செய்வதும் அவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும். இவ்வாறு தொடர்ந்து செய்யப்படும்போது, குழந்தைகளுக்குள் வாசிக்கும் பழக்கமும் ஆர்வமும் இயல்பாகவே வளரத் தொடங்கும். சிறு வயதிலேயே வாசிக்கும் பழக்கம் உள்ள மாணவர்கள், கல்வியில் மட்டுமல்லாது பிற கலைகளையும் ஆர்வத்துடன் கற்றுத் தெளிகிறார்கள். இதனால் அவர்களுக்குள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் வலுப்பெறுகிறது. எனவே பெற்றோர்களே, குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் என்று ஓய்வில்லாமல் அனுப்பும் போது, அவர்களுக்கு நாளிதழ்களும் புத்தகங்களும் வாசிக்க தனியான நேரம் ஒதுக்கிக் கொடுங்கள். வாசிப்பை நேசிப்போம்… வாழ்வில் வெற்றி பெறுவோம். 🌹🌹🌹
saravanan.
1.1K காட்சிகள்
#mark Dyvan ponnmoligal. *_மரணத்தை நினைத்து பயப்படுகிறீர்களா... மார்க் ட்வைன் சொன்ன இந்த ஒரு வரியை படித்துப் பாருங்கள்!_* * 🌹🌹🌹மரணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே நம்மில் பலருக்கும் உள்ளுக்குள் ஒருவிதமான நடுக்கம் வந்துவிடும். இந்த உலகத்தை விட்டு நாம் எப்போது செல்லப் போகிறோம் என்ற பயம் பலரையும் நிம்மதியாகத் தூங்க விடாமல் செய்கிறது. ஆனால், உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான மார்க் ட்வைன் இதை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அணுகுகிறார். மரணத்தைப் பார்த்துப் பயப்படுபவர்கள் உண்மையில் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழாதவர்கள் என்கிறார் அவர். அவர் சொன்ன ஒரு குறிப்பிட்ட பொன்மொழியைப் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் ஆழமான அர்த்தத்தைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க. 1835 ஆம் ஆண்டில் பிறந்த மார்க் ட்வைன், அமெரிக்க இலக்கிய உலகில் ஒரு மாபெரும் சகாப்தம் ஆவார். இவரது நாவல்கள் இன்றும் உலக இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளாகக் கொண்டாடப்படுகின்றன. அவர் ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி, சமுதாயத்தை மிக நுட்பமாகக் கவனித்த ஒரு சிறந்த பேச்சாளரும், உலகப் பயணியும் ஆவார். "வாழ்க்கையைக் கண்டு பயப்படுபவர்களுக்குத் தான் மரணத்தைக் கண்டால் பயம் வரும். தன் வாழ்நாளை முழுமையாக வாழ்ந்து முடித்த ஒருவன், எந்த நொடியிலும் மரணத்தைச் சந்திக்கத் தயாராகவே இருப்பான்" என்பது அவர் சொன்ன மிகவும் பிரபலமான ஒரு தத்துவமாகும். இந்த ஒற்றை வரி, ஒட்டுமொத்த மனித குலத்தின் மனநிலையையும் அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. பயத்தின் பின்னணி! இந்த வரிகளின் உண்மையான அர்த்தம் மிகவும் ஆழமானது. நாம் ஏன் மரணத்தை வெறுக்கிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாழ்க்கையில் சாதிக்க நினைத்ததைச் செய்யாமல் விட்டது, பிடித்த விஷயங்களை அனுபவிக்காமல் தள்ளிப் போட்டது, தோல்விக்குப் பயந்து எந்த ஒரு ரிஸ்க்கும் எடுக்காமல் முடங்கிக் கிடந்தது எனப் பலவிதமான ஏமாற்றங்களை மனதிற்குள் சுமந்துகொண்டு இருப்பவர்களுக்குத் தான் சாவு என்பது ஒரு பயங்கரமான முடிவாகத் தெரிகிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சமூகத்திற்காகவே பயந்து பயந்து வாழ்பவர்கள், தங்களது சொந்த ஆசைகளைக் குழிதோண்டிப் புதைத்து விடுகிறார்கள். இவர்களுக்குத் தான் மரணப் படுக்கையில் குற்ற உணர்ச்சி அதிகம் இருக்கும். வாழ்க்கையை ரசிக்கும் கலை! மறுபுறம், கிடைக்கிற ஒவ்வொரு நொடியையும் ரசித்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு, பிடித்தவர்களோடு அன்பைப் பகிர்ந்து வாழும் ஒருவருக்கு, மரணம் என்பது ஒரு இயற்கையான சுழற்சி மட்டுமே. அவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. இன்றைய அவசர உலகத்தில் நாம் எல்லோருமே அடுத்த நாள் என்ன நடக்கும் என்ற கவலையிலேயே இன்றைய நிம்மதியைத் தொலைத்து விடுகிறோம். இப்படி எல்லாவற்றிற்கும் பயந்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து முடிப்பதுதான் உண்மையான சோகம் என்று ட்வைன் நமக்கு உணர்த்துகிறார். எதற்கும் தயங்காமல் தைரியமாக அடித்து விளையாடும்போது, மரணம் குறித்த எந்தக் கவலையும் நம்மை அண்டாது. ஒவ்வொரு நாளையும் நமக்குக் கிடைத்த ஒரு புதிய வாய்ப்பாக நினைத்து, அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படி வாழப் பழகிவிட்டால், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் திரும்பிப் பார்க்கும்போது எவ்வித வருத்தமும் இருக்காது. வாழ்க்கையை முழுமையாக ரசிப்போம், மரணத்தை ஒரு புன்னகையோடு வரவேற்போம். 🌹🌹🌹
saravanan.
652 காட்சிகள்
#aalaya athisiyam. மாறும் ஈசன்: பக்தர்களை வியக்க வைக்கும் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் அதிசயம்!_* * 🛕🛕🛕தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூரில் உள்ளது கல்யாணசுந்தரர் திருக்கோயில். இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஈசன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஐந்து நிறங்களில் காட்சி தருகிறார். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் மலை அருள்பாலிக்கிறார். இத்தல சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாது அற்புதமான அமைப்பைக் கொண்டுள்ளது. காலையில் சூரியன் உதிப்பதற்கும் மாலையில் சூரியன் மறைவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆறு நாழிகைக்கு ஒரு முறை மூலவர் ஈசன் வண்ணம் மாறுகிறார். அதனால் இத்தல இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி தருகின்றார். காலை 6 முதல் 8.15 வரை தாமிர வண்ணத்திலும், 8.15 முதல் 11.30 மணி வரை இளஞ்சிவப்பு வண்ணத்திலும் 11.30 முதல் மதியம் 2.30 மணி வரை உருக்கிய தங்க வண்ணத்திலும் 2.30 முதல் மாலை 5 மணி வரை நவரத்தின பச்சை வண்ணத்திலும் 5 முதல் 6 மணி வரை செம்மை வண்ணத்தில் காட்சி தருவதாக தல புராணம் கூறுகின்றது. மாடக்கோயில் வகையை சேர்ந்த இந்த ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டியது. யானை உள்ளே போக முடியாதவாறு கோயில் அமைந்திருக்கிறது. முதன்மையான வாயிலும் அடுத்தடுத்த வாயிலும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்காமல் சில படிக்கட்டுகளை கடந்து ஏறிச் சென்று மூலவர் சன்னிதியை அடைய முடியும். பாண்டவர்களின் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றதாலும் கர்ணனை ஆற்றில் விட்டதாலும் அவளுக்கு தோஷம் பற்றிக் கொள்கிறது. இந்த தோஷம் நீங்க குந்தி இறைவனிடம் முறையிட்டாள். ஒரே நாளில் ஏழு கடலில் நீராடினால் மன நிம்மதி கிடைப்பதோடு, செய்த பாவமும் நீங்கும் என்று அறிந்தாள். அது எப்படி சாத்தியம் என அவள் கலங்கியபோது ஏழு கடல் தீர்த்தமும் ஒரே இடத்தில் கலக்கும் சப்த சாகர தீர்த்தம் தென்னகத்தின் நல்லூர் எனப்படும் இத்தலத்தில் உள்ளதை அறிந்தாள். இத்தலம் வந்து சிவ பூஜை செய்து இங்கு வந்து சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி மன நிம்மதி அடைந்தாள். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி இத்தலத்தில் நீராடி தனது தோஷம் நீங்கப் பெற்றாள். இதை மெய்ப்பிக்கும் வகையில் குந்தி சிவ பூஜை செய்யும் சிற்பம் இங்கு இருக்கிறது. பிரம்ம தேவன் திருக்குளத்தின் கீழ் திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யஜுர் வேதத்தையும், மேற்கு திசையில் சாம வேதத்தையும், வட திசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்த கோடி மகா மந்திரங்களையும், பதினெண் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தல புராணம் கூறுகிறது. பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவு கூறும் விதத்தில் சடாரியை தலையில் சூட்டுவது வழக்கம் சிவாலயங்களில் இந்த வழக்கமில்லை என்றாலும், நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் சிரசில் சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. 🍁🍁🍁
saravanan.
412 காட்சிகள்
#nalla natppu kadavull kodutha varam saami. நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ? தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க ஒரு நண்பன் தேவை ! தடம் மாறும் போது தடம் மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை ! ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை ! அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை ! அவ்வப்போது அரவணைத்துச் செல்ல சில நண்பர்கள் தேவை ! அதட்டி உருட்டி மிரட்டி நம்மைக் காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை ! துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை ! ஊர் சுற்றி வர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை ! நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக் கொள்ள சில நண்பர்கள் தேவை ! எதிர்த்துப் பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை ! இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை. அந்த சிலரைத் தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் ! 😊😊😊
See other profiles for amazing content