Follow
saravanan.
@60258885saravanan
15,753
Posts
10,889
Followers
saravanan.
508 views
5 hours ago
#aalayam arivom. யோகநரசிம்மர் திருக்கோயில்,* *மூலவர் : யோகநரசிம்மர்.* *ஊர் : விஜய்நகர்.* *மாவட்டம் : மைசூரு.* *மாநிலம் : கர்நாடகா.* *காலை 6:00 மணி முதல் 1:30 மணி வரை, மாலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 81-256 3646.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *தல சிறப்பு : மூலவர் நரசிம்மர். குறுக்காக குத்துக் காலிட்டு, அதில் கைகளைத் தொங்கவிட்டபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள சுதர்சனர் அஷ்டபுஜ சுதர்சனராக எட்டுக்கைகளுடன் காட்சி தருவது இத்தலத்தின் தனி சிறப்பு.* *பொது தகவல் : 1998, மே 25ல் யோக நரசிம்மர் சிலை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 25ல் லட்சார்ச்சனையும், 26ல் சகஸ்ர கலசாபிஷேகமும். 27ல் சுதர்சன ஹோமமும் நடக்கிறது. அமாவாசை நாட்களில் இரவு 12மணிவரை விசேஷ பூஜை உண்டு. 300லிட்டர் பால், 300லிட்டர் தயிர் யோகநரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்படும். அமாவாசை வழிபாட்டில் எதிரிகளின் தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி உண்டாகவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.* *பிரார்த்தனை : எதிரிகளின் தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி உண்டாகவும், கல்வி கலைகளில் முன்னேற்றம் உண்டாகவும் யோக நரசிம்மரையும், சனி தோஷம் விலக சுதர்சனரையும் வழிபடுகின்றனர்.* *நேர்த்திக்கடன் : இங்குள்ள நரசிம்மருக்கு வெண்ணெய், செந்தூரம், துளசி, எலுமிச்சை. நவபுஷ்பங்கள் சாற்றியும், சுதர்சனருக்கு துளசி அணிவித்து நெய்தீபம் ஏற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.* *தலபெருமை : மைசூரு விஜய நகரில் மூலவர் நரசிம்மர், குறுக்காக குத்துக் காலிட்டு, அதில் கைகளைத் தொங்கவிட்டபடி யோகநிலையில் காட்சி தருகிறார். மேல் இரண்டு கைகள் சங்கு சக்கரம் தாங்கியுள்ளன. கால்களில் யோகப்பட்டை குறுக்காக செல்கிறது. லட்சுமித்தாயார் மார்பில் வீற்றிருக்கிறாள். இச்சிலை சாளக்ராமம் என்னும் கல்லினால் ஆனது கால்கட்டை விரலில் அதர்வன வேதம் அடங்கி இருப்பதால் இவரைத் தரிசிப்பவருக்கு எவ்வித தீயசக்தியும் அணுகாது என்பது ஐதீகம். தசாவதார சிற்பங்கள் கருவறை நுழைவாயிலிலும், அஷ்டலட்சுமி சிற்பங்கள் கதவிலும் இடம்பெற்றுள்ளன.* *ஒன்பது அலங்காரம் : புரட்டாசி நவராத்திரியின் ஒன்பது நாளும் ஒன்பது விதமாக யோகநரசிம்மர் அலங்கரிக்கப்படுகிறார். வெண்ணெய், செந்தூரம், துளசி, எலுமிச்சை, நவபுஷ்பம் அலங்காரங்கள் பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும் விஜயதசமியன்று யோகநரசிம்மரைத் தரிசித்தால் கல்வி கலைகளில் முன்னேற்றம் உண்டாகும். உற்சவர் சீனிவாசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கல்யாணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.* *வித்தியாசமான சுதர்சனர் : சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வார் சன்னதி இங்கு விசேஷமானது. இவர் பதினாறு கைகளோடு காட்சி தருவது வழக்கம். ஆனால், இங்கு அஷ்டபுஜ சுதர்சனராக எட்டுக்கைகளுடன் காட்சி தருகிறார். சக்கரத்தாழ்வாருக்குப் பின்புறம் நரசிம்மர் யோகநிலையில் வீற்றிருப்பார். இங்கு நரசிம்மரும் இடம்பெறவில்லை. இவருக்கு, சனிக்கிழமையில் துளசி அணிவித்து நெய்தீபம் ஏற்றிவழிபட சனிதோஷம் விலகி நன்மை உண்டாகும்.* *தல வரலாறு : விஷ்ணு என்றால் சர்வ வியாபி அல்லது எங்கும் நிறைந்தவர். விஷ்ணுவை தியானித்து ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை ஜெபித்து வந்தான் இரண்யனின் மகனான பிரகலாதன். அசுர குலத்தில் பிறந்த அவனை, தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் பாடம் கற்க அனுப்பினான் இரண்யன். குருகுலத்தில் படித்த பிள்ளைகள் அனைவரும் பிரகலாதனால் விஷ் பக்தர்களாக மாறினர். அசுரனான தனக்கு இப்படி ஒரு குழந்தையா என்று பிரகலாதனின் மீது இரண்யனுக்கு கோபம் வந்தது. அவனைக் கொல்லத் துணிந்தான். விஷம் கொடுத்தான். மலையில் இருந்து உருட்டினான். யானையைக் கொண்டு மிதிக்கச் செய்தான். எதுவும் பலனளிக்கவில்லை. கடைசியாக, பிரகலாதனிடம், எங்கே உன் ஹரி? என்று ஆவேசமாகக் கத்தினான். அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், என்று பதிலளித்தான் பிரகலாதன், பிரகலாதனின் வாக்கை காப்பதற்காக விஷ்ணு, தூணைப் பிளந்து கொண்டு சிங்கமுகத்துடன் காட்சி அளித்தார். ஹரி என்றால் சிங்கம் என்றும் பொருளுண்டு. அவர் இரண்யனைச் சம்ஹாரம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* *திருவிழா : நரசிம்மர் ஜெயந்தி.* *சிறப்பம்சம் : மூலவர் நரசிம்மர், குறுக்காக குத்துக்காலிட்டு, அதில் கைகளைத் தொங்கவிட்டபடி யோகநிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள சுதர்சனர் அஷ்டபுஜ சுதர்சனராக எட்டுக்கைகளுடன் காட்சி தருவது இத்தலத்தின் தனி சிறப்பு.* *இருப்பிடம் : மைசூரு- மங்களூரு மெயின்ரோட்டில் 4கி.மீ., தொலைவில் விஜய்நகர் உள்ளது. பஸ், ஆட்டோ உண்டு.* *அருகிலுள்ள ரயில் நிலையம் : மைசூரு.* *அருகிலுள்ள விமான நிலையம் : மைசூரு.* *தங்கும் வசதி : மைசூருவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.*
saravanan.
494 views
5 hours ago
Veeraragavaswami. Thiruvallavar. ( #irav vanakkam. Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam)
saravanan.
530 views
15 hours ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில்,* *மூலவர் : ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர்), ரத்தினகீரிசர்.* *அம்மன்/தாயார் : கரும்பார்குழலி.* *அய்யர் மலை - வாட்போக்கி,* *குளித்தலை,* *சிவாயம் அஞ்சல்-639 120,* *வைகல்நல்லூர் வழி,* *கரூர் மாவட்டம்.* *காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91-4323-245 522.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : சித்திரைத் திருவிழா - 15 நாட்கள் கார்த்திகை சோமாவாரம் 1017 படிகளில் பக்தர்கள் புரண்டே மேலேறி மலைக்கோயிலுக்கு வருவது சிறப்பு பிரதோச காலங்கள், குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி கிரிவல நாட்கள் வாரத்தின் சனி ஞாயிற்றுக் கிழமைகள், மாதப்பிறப்பு நாட்கள், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு. தீபாவளி, பொங்கல். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். மலைகோயில் 1200 படிகள். கடம்பர் கோயில் (குளித்தலை), திருவாட்போக்கி, திரு ஈங்கோய்மலை ஒரே நாளில்-காலை, பகல், மாலையில் தரிசிக்கும் மரபு இங்கு உள்ளது. சித்திரை மாதங்களில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது, பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 64 வது தேவாரத்தலம் ஆகும்.* *இங்கு இறைவனுக்கு கேந்திபூ சாத்துவதில்லை. மாணிக்கம் பதித்த விலை மதிப்பற்ற கிரீடம் சூட்டி கார்த்திகை 1ந் தேதி சுவாமி காட்சியளிப்பார்.* *தங்கள் குல தெய்வம் தெரியாதவர்கள் ரத்தினகிரீஸ்வரரை தங்கள் குலதெய்வமாக வழிபடலாம். தவிர இங்கு இறைவனை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம் ஆகியவை நிறைவேறுகின்றன. இத்தலத்து ரத்தினகிரீஸ்வரரை வணங்கினால் மன அமைதி கிடைக்கும். நிம்மதி வேண்டுவோர் நிறைய பேர் இம்மலைக்கு வருகிறார்கள். தவிர இம்மலையில் படிகள் வழியே மலை ஏறும் போது ஏராளமான மூலிகை மரங்கள் இருபுறமும் உள்ளன.* *இத்தகைய அபூர்வமான மூலிகை காற்றை சுவாசிப்பதால் உடலில் உள்ள ஆஸ்துமா, ரத்த கொதிப்பு, நெஞ்சுவலி, கை கால் மூட்டு வலி, இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் ஒருமுறை மலை ஏறிவிட்டு வந்தாலே அதிசயமான மாற்றத்தை அடைவதை முழுமையாக உணர முடியும். இந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் அடிக்கடி வந்து வழிபட்டால் கூடிய விரைவில் குணமடைவது கண்கூடாக நடந்து வரும் அதிசயமான உண்மை.* *அபிசேக, ஆராதனைகள் மற்றும் மணி விளக்குகள் ஆகியவை இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகிறார்கள். இறைவனுக்கு தூய உலர்ந்த வேஷ்டி சாத்தலாம். சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர், ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல், வேள்வி புரிதல், தபம் செய்தல், தியானம் செய்தல் ஆகியவை இத்தலத்தில்செய்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும். அத்தனை சிறப்பு வாய்ந்த சிவதலம். இது தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.* *இறைவன் 9(நவ) ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சை கற்கள், சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன. சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றன.* *இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. மணிமுடி இழந்து தேடி வந்த ஆரிய மன்னனுக்கு இரத்தினமும், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பொற்கிழியும் இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான்.* *வைராக்கிய பெருமாள் : காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் தனக்கு குழந்தை பிறந்தால் தன் சிரசை தருவதாக வேண்டினார். அது படியே நடக்க வைராக்கிய பெருமாள் தன் சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தார். மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது. தேனும் தேங்காய்ப்பாலும் மட்டும்தான் இவருக்கு அபிசேகம், பூஜை முடிந்த பிறகு சுவாமியின் மாலை இவருக்குத்தான் போடப்படும். இத்தலத்தில் இவர் மிகவும் விசேசமானவர்.* *காகம் பறவா மலை : ஆயர் இருவர் அபிசேகத்துக்காக கொண்டு வந்து வைத்திருந்த பால் காகம் கவிழ்ந்ததால் அது எரிந்து போயிற்று அப்படி கவிழ்ந்த எல்லைக்கு மேல் காகம் இப்போதும் இந்த மலையின் மீது ஒரு காகம் கூட பறப்பதில்லை என்பது சிறப்பான அதிசயம்.* *தீர்த்தசிறப்பு : காவேரித் தீர்த்தம் ( தினமும் கால்நடையாகவே & கி.மீ., நடந்து எடுத்துக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிசேகம் செய்யப்படுகிறது.* *இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம். சோதிலிங்க வடிவமானது. மலைக்கொழுந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு மூர்த்தி. காலையில் காவிரிக் கரையிலுள்ள கடம்பர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு நடுப்பகலில் ரத்தினகிரீஸ்வரரை வணங்கி மாலையில் திருஈங்கோய் மலைநாதரை வழிபட்டால் நல்ல புண்ணியமுண்டு என்பது ஐதீகம். மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றி நிரப்பப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை.* *ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான். இதனால் சுயம்புவில் இருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து மன்னன் தன் தவறை உணர்ந்து இறைவனை வணங்கினான். இதையடுத்து இறைவன் தோன்றி மன்னனுக்கு அருளாசி வழங்கி இரத்தினங்களை வழங்கினான். அந்த தழும்பு இன்னும் சுவாமியின் முடியில் உள்ளது.* *இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதங்களில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.* *சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும்.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்.* *+918072055052* 🔵🟠🟥🌈🟥🌈🟥🌈🟣
saravanan.
384 views
16 hours ago
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam. #kaalay vanakkam.
saravanan.
612 views
1 days ago
#ellaam avan sitham . dharshan. Mk. Evening. Pandharpur. 10.8.26