அகத்தியர் வாக்கு
Om Namah Shivayah | ஓம் அகத்தீசாய நம:
உள்ளபடி கூறி வாழுங்கால், என்றென்றும் வெற்றியும், தன்னம்பிக்கையும் உண்டாகும். உள்ளதைக் கூறாது, அல்லதை கூறுங்கால், தொடர்ந்து பாவச் சேற்றிலே ஆழ்ந்து, ஆழ்ந்து துன்பப்பட நேரிடும். உரைத்திடுவோம், எவன் எப்படி வாழ்ந்தாலும், அது குறித்து கவனம் செலுத்தாது, உண்மையை நன்றாக ஆய்ந்து, உணர்ந்து, சிந்தித்துப் பேசி, உள்ளதைக் கூறி, நல்லதை செய்து வாழுங்கால், நலம் தொடரும்
உரைத்திடுவோம், இவ்வாறெல்லாம் வாழாத மனிதனுக்கு, நல்விதமான வாழ்வு இருப்பது போல் தோன்றும். அப்படி தோன்றினாலும், அது நீடிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தெள்ளிய நெஞ்சத்திலே, நல்ல விதைகளை ஊன்றி, ஊன்றி தெளித்து விட்டால், தெளிவாய், காலப் போக்கிலே, அந்த நல்வித்துக்கள் எல்லாம் முளைத்து நல வ்ரிக்ஷங்களாகி, நல் கனிகளை தரும். அந்த கனிகள் மூலம் மேலும், மேலும் பல நல்வித்துக்கள் உருவாகும். எனவே, எது குறித்தும் கலங்காது, உன்னால் இயன்ற தர்மங்களை, பிரார்த்தனைகளை செய்து வாழ்ந்து வா. என்றென்றும் நலம் தொடரும் உன்னை. ஆசிகள். சுபம்.
1.3 நல்லதையே செய்ய வேண்டும்:
இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நலம் எண்ணி, நலம் உரைத்து, நலம் செய்ய நலமே நடக்குமப்பா. இஃதொப்ப கால காலம் மாந்தர்கள் வாழ்கின்ற வாழ்வு நிலை என்பது, பிற மனிதர்கள் தன்னை மதிக்க வேண்டும், தன்னை துதிக்க வேண்டும், தன் செயலை பாராட்ட வேண்டும், தன்னுடைய மன நிலையை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் பிறர் நடக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது பொதுவாக மனித இயல்பு. ஆனால் இவையெல்லாம் யாருக்கும் எந்த காலத்திலும் நூற்றுக்கு நூறு விழுக்காடு நடப்பதில்லை. ஒன்று, ஒரு மனிதனின் பதவி, செல்வம், செல்வாக்கு இதற்காகவோ அல்லது ஒரு மனிதனை அண்டிப் பிழைத்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலை இருக்கும் நிலையிலும், ஒரு வேளை ஒரு மனிதனை எதிர்த்துக் கொண்டால், அந்த மனிதனால் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் என்பது போன்ற வெளிப்படையான துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்ற நிர்பந்தம் இல்லாத நிலையில், எந்த மனிதனும் யாரையும் மதிக்கப் போவதில்லை. இதுதான் மனிதனின் இயல்பு. ஆனால் பரிபூரண அன்பு, எந்தவிதமான எதிபார்ப்பும் இல்லாத அன்பு, தூய அன்பு -இந்த அன்பு மட்டும் மனிதனிடம் மலர்ந்துவிட்டால், அதன் பிறகு, இவன் வேண்டியவன், இவன் உறவுக்காரன், இவன் நண்பன், இவன் எதிரி, இவன் ஆண், இவள் பெண் என்கிற பேதங்கள் எல்லாம் அடிபட்டுப் போகும். அங்கே வெறும் ஆத்ம தரிசனம் மட்டுமே தெரியும். இறைவன் படைப்பில் நாம் எப்படி வந்திருக்கிறோமோ, அதைப்போல அந்த ஆத்மாவும் வந்திருக்கிறது.
இந்த உலகம் நமக்கு மட்டுமல்ல. இது இறைவன் படைத்தது. இங்குள்ள நீர், காற்று, ஆகாயம், பூமி, விருக்ஷங்கள் பொதுவானது. நாம் எப்படி இந்த உலகிலே வாழ்வதற்கு வந்திருக்கிறோமோ, அதைப்போலத்தான் பிற உயிர்களும் வந்திருக்கிறது என்ற எண்ணம் வந்துவிட்டாலே, யார் மீதும் சினம், ஆத்திரம், பொறாமை எழாது. அனைவரும் நம்மைப் போன்ற உணர்வுள்ள மனிதர்கள் என்று எண்ணிவிட்டாலே, அங்கே நன்மைகள் நடந்து கொண்டே இருக்கும். எனவே இந்த உண்மையை புரிந்து கொண்டால், மனித நேயம் வளரும்,
Copyright© 2012 by Sidhar Arut Kudil. Thanjavur. All rights reserved.
Page | 13 #🕉நமசிவாய வாழ்க #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼சிவன் - பார்வதி #🙏நமசிவாய ஓம்✨ #🙏🏼ஓம் நமசிவாய