ஃபாலோவ்
N Murugesan
@67491307
855
போஸ்ட்
700
பின்தொடர்பவர்கள்
N Murugesan
556 காட்சிகள்
இன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை பூஜித்து வழிபடும் நாள்!! மற்ற பௌதீக எண்ணங்கள் அனைத்தையும் உதறி, மனம் முழுவதும் சிவ தத்துவத்தில் நிறைந்து, பக்தியில் நனைந்து இரவை கழிக்கும் நாள். அவ்வாறு காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்க சிவபெருமானை வழிபட அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்!!😄 ஓம் நமசிவாய!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
406 காட்சிகள்
ரீ ரிலிஸ் டிரெய்லர் பார்த்தால் வெறும் காமத்தால் தான் இந்த படம் 100 நாட்கள் ஓடியிருக்கும் என்று தோன்றுகிறது!! காதல் என்ற பெயரில் ஒரே காமம் - என்ன கேவலமான ரசனை அந்த காலத்தில்!! 😄 #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
566 காட்சிகள்
எதற்காக சிவபெருமானிடம் ஊடல்?! பல காரணங்கள். நான் ஆன்மீகத்திற்கு வந்ததே காமத்திலிருந்து முழுமையாக விடுபடுவதற்கே. அது இன்று வரை நடக்கவில்லை; அது முக்கியமான காரணம்; மேலும் எழுதுவதற்கு முன்பு, இறைவனிடம் என்னை விட அதிகம் ஊடல் கொண்டவர்களைப் பற்றி... *************************************************** நேற்று ஜி. செல்வா என்பவர் எழுதிய "எல்லாத்துக்கும் நாங்க தான் கஷ்டப்பட வேண்டுமா?!" என்ற புத்தக வெளியீட்டு விழா பற்றிய Shruti Literature TV சுருதி டிவி வீடியோ சில பார்த்தேன் - யுகபாரதி மற்றும் எழுத்தாளர் தீபலட்சுமி ஆகியோர் இந்த புத்தகத்தை பற்றி பேசியது. அப்போது எனக்குத் தோன்றியது: இவர்கள் சிவபெருமான் மீது கொண்ட ஊடல் தான் மிகப்பெரியது; அது என்னுடைய ஊடலை விட மிகவும் உண்மையானதுமா கூட என்று!! 😄 அப்போது தான் இவர்களுடைய கம்யூனிச சித்தாந்தமும் புரிந்தது. "இங்கே உலகில் இவ்வளவு அக்கிரமம் நடக்கிறது; இறைவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான்?! நாங்கள் அப்படி ஒரு இறைவன் இருக்கிறான் என்று இறை தத்துவத்தையே அவமதிப்பதற்கு பதிலாக, உலகில் இறைவன் இல்லை என்றே கொள்வோம்; உலகிற்கு நன்மை செய்வோம்!!" - இதற்கு முன்னர் கம்யூனிச சித்தாந்தத்தை நான் இவ்வாறு புரிந்து கொள்ள வில்லை!! நீங்கள் ஜி செல்வா எழுதிய இந்த புத்தகத்தை படித்தால், உங்களுக்கு உண்மையான கடவுள் பக்தி இருந்தால், நீங்களும் சிவபெருமானுடனுடன் ஊடல் கொள்வீர்கள் என்பது திண்ணம்!! (இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள்; இந்த புத்தகம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!). இங்கு மிகப் பெரிய உண்மை ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் கேட்க வேண்டிய கேள்வி: "இந்த உலகில் சிவபெருமான் இருப்பது உண்மை. ஆனாலும், இவ்வளவு அக்கிரமங்கள் நடப்பது ஏன்?!". இந்த கேள்வி தான் உண்மையான ஆன்மீகத்திற்கு அடிப்படை. இங்கு தான் ஆன்மீக வாழ்க்கை ஆரம்பிக்கிறது. என்னுடைய ஆன்மீகம் இப்படித் தான் ஆரம்பித்தது. Harold Kushner ஹேரால்ட் குஷ்னர் என்பவர் (யூத பாதிரியார்) எழுதிய "Why bad things happen to good people?" - "நல்ல மனிதர்களுக்கே தீமை நிகழ்வது ஏன்?" - என்ற புத்தகத்தில் இருந்து தான் என் ஆன்மீக தேடல் தொடங்கியது. ஆகையால் இதை அனுபவ ரீதியாக தான் சொல்கிறேன். இறைவன் இருந்தும் இந்த உலகம் இப்படி இருக்கிறதா?! இதை எப்படி புரிந்து கொள்வது?! (இந்த புரிதல் ஏற்படுவதற்கு பக்தி, யோகம், ஞானம் என்று பல பாதைகள் உள்ளன! 😄). இந்த கேள்விக்கான முழு விடையை இறைவனை முழுமையாக அடைந்தவர்கள் மட்டுமே முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்!! சிவபெருமானை நான் ஒரு முறை கண்டிருக்கக் கூடும்; ஆனால், நான் இன்னமும் சிவபெருமானை முழுமையாக அடையவில்லை. ஆகையால் தான் ஊடல். ஆகையால், என்னுடையது கம்யூனிசம் அல்ல; இது ஊடல் என்ற அளவில் தான் உள்ளது; நாத்திகம் அல்ல!! கம்யூனிச தோழர்கள் இறைவன் இல்லை என்ற எளிதான, ஆம், தோழர் செல்வாவுக்கும் தான் சொல்கிறேன்; இறைவன் இல்லை என்ற "மிகவும் எளிதான பாதையில்" செல்வதை விட்டுவிட்டு - "இறைவன் இருந்தும் ஏன் இவ்வளவு அக்கிரமம்?!" - என்ற "மிகவும் கடினமான ஆன்மீக பாதையில்" செல்ல அடுத்த பிறவி வரை காத்திருக்க கூடாது என்பதே என் விருப்பம்!! உலகிற்காக பாடுபடுவது உண்மையான ஆன்மீகத்தின் வழியும், எல்லையும் (both journey and destination) கூட. ஆகையால், ஆன்மீகம் என்றால் "இந்த போராட்டங்கள் தேவையில்லை; இறைவன் பார்த்துக் கொள்வான்; உலகைத் துறக்க வேண்டும்" போன்ற முட்டாள்தனமான சனாதன கொள்கைகளை உடையது அல்ல; நமது சைவ சமயத்தில் சிவபெருமானை "தேவர்களுக்கு (உயர் சாதியினர்க்கு) அரியவன்; ஏழைகளின் பங்காளன்" என்று பல இடங்களில் தேவாரத்திலும் திருவாசகத்திலும் பாடியுள்ளனர். ஆகையால், நீங்கள் சிவபெருமானிடம் ஊடலில் தான் இருக்கிறீர்கள்!! (By the way, தீபலட்சுமியின் குழந்தை பள்ளியில் ஆசிரியரிடம் கேட்ட கேள்வியை நாம் அனைவரும் கேட்டால் உலகை திருத்த முடியும்; நல்ல அரசியலை, ஆன்மீகத்தை உருவாக்க முடியும்!!) ***************************************************** என் ஊடலுக்கு காரணம் என்ன? சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் "கோவில் கோவிலாக அலைகிறேன்; அவனை காணவில்லை" என்பது தான்! ஆனால் சிவபெருமானின் காட்சியை பெற, பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற முனிவர்கள் கூட பெரும் தவம் செய்ய வேண்டியிருந்தது; நாமெல்லாம் எம்மாத்திரம்?! (ஏழை பங்காளன் என்ற நம்பிக்கை தான்!!😄). அதாவது பரவாயில்லை; காதலித்தவர்களுக்கு தெரியும் - கொஞ்சும் போது, காதலி அதை தடுத்து கொஞ்ச விடாமல் சிணுங்கினால், அழகு அதிகமாகும்; இன்பமும் அதிகமாகும்; ஆனால், கொஞ்சக் கூட விடாமல் டார்ச்சரே செய்தால்?!😄 இப்படித்தான் யாரோ திருவையாறில் பாட்டுப் பாட விடாமல் தடுத்தார்கள்; இவன் ஒன்றுமே செய்யாமல் "சிவனே" என்று உட்காந்திருக்கிறான்!!😄 இதனால் திருவையாறு சிவனிடம் எனக்கு ஊடல்; அது போல் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு காரணம்!! நேற்று ஈங்கோய்மலை சென்றேன்; மலையில் ஏறவே விடாமல் யாரோ கடும் டார்ச்சர் செய்கிறார்கள் (கர்மம் வைத்திருக்கிறார்கள்)!! இவன் எதுவும் செய்யவில்லை!! (மேலே நல்ல தரிசனம் கிடைத்தது; ஆனாலும் ஏதோ டார்ச்சர்). **************************************************. இது போன்ற ஊடல் என் கற்பனை அல்ல. மாணிக்கவாசகர் பல பாடல்களில் சிவபெருமானை காணவில்லை என்று புலம்பி இருக்கிறார். "ஒரு முறை காட்சி கொடுத்தான்; அப்போதே அவனுடன் சென்றிருக்க வேண்டும்; இப்போது அவனை காணாமல் வருந்துகிறேன்" என்று பல பதிகங்களில் பாடியிருக்கிறார். அதாவது இறைவனை ஒரு முறை கண்டுவிட்டு பிறகு காணமல் தவிப்பது இந்த வகையான ஊடலாக வெளிப்படும். சுந்தரரின் ஊடல்கள் பிரசித்தமானவை. ஒரு முறை ஏதோ கோவிலில் ஏதோ வேண்டியிருக்கிறார்; ஒன்றும் நடக்கவில்லை போலிருக்கிறது; உடனே வழியில் வந்த ஒரு கோவிலுக்கு உள்ளே செல்லக் கூட மனம் வராமல் கோபமாக வெளியிலேயே நின்று விட்டார்!! உள்ளே போய் கும்பிட்டு என்னவாக போகிறது?! கோபத்தில் வெளியில் நின்று கொண்டு "உள்ளே நீ இருக்கிறாயா அல்லது வெறும் கல் மட்டும் தான் இருக்கிறதா?!" என்று கேட்டாராம். உடனே உள்ளிருந்து சிவபெருமானின் பதில் வந்ததாம் - "நாம் இங்கு தான் இருக்கிறோம்; நீர் போகலாம்!!" 😄😄😂 இதை ஒரு பதிகமாக அவர் எழுதியும் வைத்து விட்டார்!! ************************************************ என்னுடைய ஊடல் காரணங்கள் (கம்யூனிச தோழர்களுடையது போலல்லாமல்) சுயநலமானவையே!! 😄😂. காமத்திலிருந்து காப்பாற்றவில்லை என்பது மட்டுமல்ல; இவனுக்கு வாழ்க்கை பட்டு ஒரு உபயோகமும் இல்லை; வேலை இல்லை; வீடு வாசல் இல்லை; பணம் இல்லை; நகை இல்லை; ("ஏன்டா பிச்சைக்காரா, இப்படி செய்கிறாய்? நீ ஒரு முறை பிச்சை எடுத்திருக்கலாம்; அதற்காக நானும் இப்படி வாழ வேண்டுமா?!" என்று ஒரு முறை கேட்டேன். "என்னை பிச்சை எடுக்க வைத்ததால், பிராமண சமூகம் ஆயிரம் வருடங்கள் பிச்சை எடுக்க வேண்டியிருந்தது" என்று அதிர்ச்சி தகவல் கொடுத்தான்!!😄) இவனுக்கு ஒரு முறை வாழ்க்கைப் பட்டால் எழு பிறவியும் வாழ்க்கை பட வேண்டும்; இதனால் சுந்தரரை திருமணம் செய்து கொள்ள விடவில்லை!! சம்பந்தரை கூட மணப்பந்தலுடன் எடுத்துச் சென்று விட்டான்!! இது போன்ற காரணங்களாலானது என்னுடைய ஊடல்!! தொடர்ந்து கோவில்களுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறேன்; என்றாவது அகப்படுவான் என்று நம்பிக்கை!! 😄😂 ************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
596 காட்சிகள்
காதலை பக்தியுடன் இணையாக பேசுவது இல்லற ஆன்மீகம் செழிக்க வேண்டும்; இல்லறத்தில் இருந்தாலும் இறைவனை அடைய முடியும் என்பது போன்ற உண்மைகளை வலியுறுத்துவதற்காக மட்டுமல்ல. உண்மையாகவே காதலும், பக்தியும் ஒரு போன்ற தன்மையை உடையவையே. இதை மேலும் ஆராய்வதற்கு பதிலாக காதலியிடம் நமக்கு ஏற்படும் ஈர்ப்பும், இறைவனிடம் நாம் கொள்ளும் ஈர்ப்பும் ஒரு தன்மையானதே என்று புரிந்து கொண்டால் போதுமானது. ஆனால், மனிதர்களின் காதலும், இறைவனிடம் கொள்ளும் பக்தி / காதலும் எல்லா விதத்திலும் ஒன்றாகாது. ****************************************†*********. நான் முன்பு எழுதியது போல் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அதை பயன்படுத்தி பெறக்கூடிய புலன் இன்பம் ஓரளவிற்கு தான். பணக்காரர்கள் தமக்கு பிடித்த உணவை பத்து மடங்கு அதிகம் சாப்பிட முடியுமா என்ன?! ஆனால், அந்த இன்பத்தை அதிகரிக்க ஒரு வழி இருக்கிறது. அது தான் அந்த அதிக பணத்தை மற்றவர்களுக்கு உதவ உபயோகப் படுத்தி அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து நாமும் மகிழ்வது. இன்பத்தை நம் புலன்களுக்கு அப்பால் அதிகப்படுத்தும் வழி மற்றவர்களையும் மகிழ்ச்சிப் படுத்தி பார்ப்பது தான். ஒரு முறை நான் கோவிலுக்கு அதிகாலை சென்று கொண்டிருந்த போது, வழியில் ஒரு பெரிய ஏழைகள் க்யூ! என்னவென்று பார்த்தால் யாரோ அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஏழைகள் அவ்வளவு சந்தோஷமாக, ஆர்வமாக க்யூவில் நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன் ஏதோ நானே அவர்களுக்கு அன்னதானம் அளிப்பது போன்ற ஒரு சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. அந்த காலத்தில் பணம் அதிகம் சம்பாதிப்பதே அதனால் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்ற எண்ணத்தில் தான் என்று ஒரு திருக்குறள் கூட இருக்கிறது. வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை அதிகம் பெறுவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது தான்!! ************************************************* மேற்கூறிய உண்மை பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், பலரும் உணராத ஒரு உண்மை இருக்கிறது. அது என்னவென்றால் மேற்கூறியது பக்திக்கும் பொருந்தும்!! ஒரு முறை உறையூர் சிவன் கோவிலில் பக்தியுடன் இருந்த போது இது எனக்கு தோன்றியது: "இந்த பக்தி உணர்வை, அதனால் வரும் மகிழ்ச்சியை எப்படி அதிகப் படுத்துவாய்?! இதற்கு ஒரு வழி இருக்கிறது; உண்மையான பக்தியில் ஆழ்ந்த அனைவரும் இதை இயற்கையாகவே செய்வர்; ஆனால், காரணம் இதுதான் என்று அவர்களுக்கு தெரியாது! அது தான், மற்றவர்களையும் பக்தியில் ஈடுபட செய்வது!! மற்றவர்களுக்கு இறை நம்பிக்கையை ஊட்டுவதும், அவர்களுக்கு பக்தியை மேலும் பெருகச் செய்வதும் நம்முடைய பக்தியையும் அதிகரிக்கும்!!' இதை பக்தியில் ஆழ்ந்த பலர் புரிந்து கொள்வர்! (பகவத் கீதையில் அர்ஜுனன்: "இறைவனை அடைந்தவர்கள் எப்படி காலம் கழிப்பர்? உலக இன்பத்தை துறந்த அவர்களுக்கு இன்பம் தான் ஏது?" என்று கேட்க, கிருஷ்ணர் கூறுவது இதைத்தான்: "அவர்கள் என்னுடைய புகழை மற்றவர்களிடம் கூறி அதனால் இன்பம் பெறுவர்"!!). இதனால் தான் அடியவர்கள் மத்தியில் இருப்பதும் மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கு அவனருளால் அவன் தாள் வணங்கி உண்மையான பக்தி கிடைத்து விட்டால், இயற்கையாகவே மற்றவர்களுக்கும் அந்த நம்பிக்கையை, பக்தியை ஊட்டுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உண்மையான இறையருள் பெற்ற பலருடைய வாழ்க்கை வரலாறு இதற்கு சான்று!!************************************************** இப்போது பக்தி = காதலுக்கு வருவோம். மேற்கூறியது தான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு!!. உலகியல் காதலில் என்னுடைய காதலியை மற்றவர்கள் பார்க்கக் கூட நான் அனுமதிக்க மாட்டேன்!!😄 அப்படியிருக்க மற்றவர்கள் நம் காதலியை கொஞ்சுவதற்கு அனுமதிப்போமா?! ஆனால், ஆன்மீகத்தில் இது ரிவர்ஸ்!! ஆன்மீகத்தில் என் காதலியை மற்றவர்களையும் கொஞ்ச செய்வதில் மேலும் இன்பம்!! எல்லோரும் என்னுடைய இறைவனை வழிபட வேண்டும்; அவன் புகழ் பாட வேண்டும்; அதனால் நன்மை பெற வேண்டும் என்று நினைப்பது உண்மையான பக்தி உணர்வு!! ஆக, இது போன்ற விஷயங்களில் பக்தியும், காதலும் ஒன்று என்ற உவமை பொருந்தாது! அது போல் தான் சிவபெருமானை மட்டும் தான் வணங்க வேண்டும்; வேறு கடவுளை வணங்கக் கூடாது என்பதும் இந்த பக்தி=காதல் என்ற ஒற்றுமையில் அடங்காது. அனைத்து கடவுள்களும் ஒன்றே - ஒரே பொருளில் தோன்றியவர்களே என்பதால் இந்த விஷயத்தில் தவறாகாது. சைவ சித்தாந்தம் சிவபெருமானே அனைத்து கடவுள்களுக்கும் ஆதாரம் என்று கூட கூறுகிறது!! (ஆனால், முக்தி நிலையடைய இது அவசியம் - முக்தி என்பது இறைவனுடன் இரண்டற கலப்பது; அதற்கு நிஷ்டா பக்தி தேவை தான். அதே வேளையில் மற்ற கடவுள் கள்ள காதலி என்ற உவமை பொருந்தாது!! 😄😄) ******************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
883 காட்சிகள்
சிவபெருமானுடன் நான் ஊடலில் (கோபத்தில்) இருக்கிறேன். டைவர்ஸ் வரைக்கும் போகுமா அல்லது மீண்டும் பழையபடி ஆகுமா என்று தெரியவில்லை!😄 ************************************************* இளையராஜா எஸ்பிபி ஜானகி டூயட் பாடல் ஒன்றில் வரும் வரி எனக்கு மிகவும் மிகவும் பிடிக்கும் - "கொஞ்சும் இன்பம் போல் உலகில் வேறு இன்பம் இல்லை!". அது போல் , ஆன்மீகத்தில் இறைவனிடம் பக்தி செலுத்தும் இன்பம் போல் வேறு இல்லை. இந்த கொள்கை வைணவத்திற்கு மிகவும் பொருந்தும். அது போதாது; இறைவனுடன் இரண்டற கலத்தல் வேண்டும் - இது சைவம். ஆனால், காதலி கொஞ்சுவதற்கு கூட தடை செய்தால் எப்படி? அல்லது தடையை நீக்காமல் இருந்தால் எப்படி?; போதாத குறைக்கு தாயுமானவர் கோவிலுக்கு செல்லும் போது, வழியில் ஏன் பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு வருகிறாய்? என்கிறான். இது எப்படி இருக்கிறது என்றால் "யாரினும் காதலம்" என்று வரும் திருக்குறள் போல். காதலன் காதலியிடம் கூறினானாம் - "மற்ற யாருடைய காதலையும் விட நம் காதல் தான் பெரிது; இதற்கு இணையில்லை". உடனே காதலி கோபித்துக் கொண்டு சென்று விட்டாளாம். ஏனென்று கேட்டால் "மற்ற யாருடைய காதலை விட " என்றால் உனக்கு வேறு காதலி உண்டு என்றல்லவா அர்த்தம் ஆகிறது என்றாளாம்!! 😄 சிதம்பரம் சென்றால் நடுநாயகமாக பெருமாள் சன்னதி இருக்கிறதே அது என்னவாம்?! ************************************************ காதலில் ஊடல் மிகவும் அவசியம். ஏன் தெரியுமா?! இதை திருவள்ளுவர் கூட சரியாக விளக்கவில்லை. ஆங்கிலக் காதலில் "there should be space distance, one should not be too possessive" என்பார்கள். அதாவது இருவருக்கும் இடையே ஒரு வகை இடைவெளி இருப்பது அவசியம். அப்போது தான் அவரவர்கான ஃப்ரீடம் சற்று சுதந்திரம் இருக்கும் என்பார்கள். அதாவது அப்படி distance இருந்தால் தான் அடிக்கடி சண்டை ஏதும் வராதாம். ஆனால், காதலர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வர வேண்டும் என்று தமிழ் காதலுக்கு இலக்கணம் கூறுகிறது!! சிலர் குறளுக்கு உரை எழுதுவது போல் - "ஊடல் தான் பிறகு இன்பத்தை பெருக்கும்; அதற்காக காதலி ஊடல் கொள்வாள்" - ஊடல் இன்பத்தை பெருக்குவதற்காக அல்ல!! எதற்காக காதலர்களிடையே சண்டை வர வேண்டும்? நமது குறிக்கோள்- இரண்டற கலப்பது. அதற்கு உள்ள தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் (இரு பொருட்கள் சமாதி அடைய அந்த இரு பொருட்களும் ஒரே தன்மையாக வேண்டும்!!). இந்த சண்டைகள் தாம் இருவருக்கும் இடையேயான வேறுபாடுகள்; குற்றங்கள் ; தடங்கல்கள் போன்றவை வெளிப்பட கருவியாகிறது. ஒவ்வொரு ஊடல் நடந்து மீளும் போதும் ஒரு தடை விலகுகிறது. நெருக்கம் அதிகமாகிறது!! ஆங்கில காதல் போல் இருவருக்கும் இடையேயான வேற்றுமைகள் இங்கு பாதுகாக்கப் படவில்லை!! மாறாக, அந்த வேற்றுமைகள் ஒவ்வொன்றாக வெளிப்பட வெளிப்பட ஊடல்கள் ஏற்பட்டு, "இது உண்மையான காதலா? இது இந்த வேற்றுமையை வெல்லும் அளவுக்கு உறுதியானதா?" என்று டெஸ்ட் நடைபெறுகிறது!! அந்த வேற்றுமை கலையைப் படும் போது, ஊடல் நீங்கி, இன்பம் மேலும் அதிகரிக்கிறது - ஏனென்றால் இடைவெளி இப்போது மேலும் குறைந்து விடுகிறது!! இப்படியாக ஊடல்களே இரு காதலர்களை மேலும் மேலும் நெருங்க வைக்கிறது!! காதல் என்பதற்காக எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள கூடாது!! ஆகையால் காதலுக்கு ஊடல் மிகவும் அவசியம் என்று காதலுக்கு தமிழ் இலக்கணம் கூறுகிறது!! ஆனால் ஒன்று: ஊடலை களைய முடியாத அளவுக்கு வேற்றுமை என்றால், பிரிவதே மேல் என்பதாலும் ஊடல் காதலுக்கு அவசியம். இணையவே முடியாத இருவர் முயற்சி செய்வதில் என்ன பயன்?! முயற்சியால் வரும் ஊடல் வேற்றுமையை நீக்கினால் அல்லவா இடைவெளி குறையும்?! ஆகையால், ஆங்கில காதல் போல் வேற்றுமைகளை, இடைவெளியை ("maintaining a distance"!😄) அப்படியே வைத்துக் கொண்டு முயல்வது உண்மையான காதல் ஆகாது!! ************************************************. ஆன்மீகத்திற்கும் இது பொருந்தும். இறைவனே ஆனாலும் தவறு என்றால் விலகி விட வேண்டும். இதுவே உண்மையை வெளிப்படச் செய்யும். கர்மங்களை களையும். இறைவனை அடைய உள்ள தடைகள் நீங்க வழிவகை செய்யும். தமிழ் கலாச்சாரத்தில் இறைவனுக்கே எதிராக போவது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. நக்கீரர், வணங்காமல் சென்ற சுந்தரரின் சிவனையே தள்ளி வைப்பேன் என்று சொன்ன சிவனடியார் என்று உதாரணங்கள் பல உண்டு. இணையவே தேவையில்லை எனும் வைணவத்தில் ஊடலும் தேவையில்லை!!😄 இரண்டற கலப்பதை கொள்கையாக கொண்ட சைவத்தில் ஊடல் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று!! ***************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
687 காட்சிகள்
ஓ, கூடல சங்கம தேவ தேவா, உன் நறுமணம் எங்களிடையேயும் பரவட்டும்!! மற்றுமொரு கன்னட வசன ன பாடல்; அற்புதமான இசையில்!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம https://youtube.com/watch?v=mG9_sKHTcMk&si=BKRuCgGP_5vCoIln
N Murugesan
578 காட்சிகள்
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்குவதே ஒரு சிறந்த அனுபவம்!! ஆனால், அனைத்தையும் படிக்கிறோமோ என்பது doubt தான்!! 😄 சில சமயம் வாங்கிய புத்தகத்தையே கூட நான் மீண்டும் வாங்கியிருக்கிறேன்; வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரியும்!! 😄😂 பலரும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி விடுவார்கள், ஆனால் அவற்றை முழுமையாகப் படித்து முடிப்பதில்லை. ஜப்பானிய மொழியில் இதற்கு "சுண்டோகு" (Tsundoku) என்று ஒரு வார்த்தையே உண்டு!!😄 - அதாவது படிக்கும் ஆர்வத்தில் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைப்பது, ஆனால் படிக்காமல் விடுவது. புத்தகங்களை படிப்பதை காபி குடிப்பதை போல் ஒரு தினசரி பழக்கமாக மாற்றுவது தான் இதற்கு தீர்வு. இங்கே வல்லுனர்கள் கூறும் சில டிப்ஸ்!! ************************************************ 1. தினமும் 30 நிமிட விதி (The 30-Minute Rule): நமக்கு நேரம் இல்லை என்று சொல்வது ஒரு சாக்குப்போக்கு மட்டுமே. தினமும் காலையிலோ அல்லது இரவிலோ வெறும் 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். சராசரியாக ஒரு மனிதரால் நிமிடத்திற்கு 240 வார்த்தைகள் படிக்க முடியும். தினமும் 30 நிமிடம் படித்தால், ஒரு வருடத்திற்கு சுமார் 30 முதல் 50 புத்தகங்களை நம்மால் படித்து முடிக்க முடியும். "நேரம் கிடைக்கும்போது படிப்பேன்" என்று காத்திருக்காமல், "இது படிப்பதற்கான நேரம்" என்று ஒதுக்குவதே சூட்சுமம். ********************************************** 2. எப்போதும் கையில் ஒரு புத்தகம் (Carry a Book Everywhere): Ryan Holiday கூறுவது போல, வீட்டை விட்டு கிளம்பும்போது 'பர்ஸ், சாவி, போன்' எடுப்பது போல ஒரு புத்தகத்தையும் கையில் எடுத்துச் செல்லுங்கள். பேருந்து பயணம், மருத்துவமனை காத்திருப்பு, அல்லது நண்பருக்காக காத்திருக்கும் நேரங்களில் போனை நோண்டுவதற்கு பதில், இரண்டு பக்கங்களாவது படியுங்கள். இந்த சிறிய இடைவெளிகள் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். ************************************************3. பிடிக்காத புத்தகத்தை பாதியிலேயே நிறுத்துங்கள்: ஒரு புத்தகம் 50 பக்கங்களுக்கு மேல் உங்களை ஈர்க்கவில்லை என்றால், அதைத் தயங்காமல் மூடி வைத்துவிடுங்கள். வாசிப்பு என்பது சுமை அல்ல, அது ஒரு இன்பம். *********** 4. அட்டை முதல் அட்டை வரை படிக்க வேண்டியதில்லை (Selectivity): புத்தகங்கள் ஒன்றும் மருந்துச் சீட்டுகள் அல்ல, முழுமையாகக் குடிக்க. எல்லா புத்தகங்களையும் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வரிசையாகப் படிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் பொருளடக்கத்தைப் பாருங்கள். உங்களுக்கு மிகவும் ஆர்வமூட்டும் தலைப்பை மட்டும் முதலில் படியுங்கள். அந்த ஆர்வம் உங்களை மற்ற பக்கங்களுக்கும் அழைத்துச் செல்லும். *********** 5. சூழலை மாற்றுங்கள் (Visual Cues): புத்தகங்களை அலமாரியில் பூட்டி வைக்காமல், நீங்கள் அடிக்கடி அமரும் சோபா, சாப்பாட்டு மேசை அல்லது படுக்கைக்கு அருகில் வையுங்கள். கண்ணில் பட்டால் மட்டுமே கை தானாக எடுக்கும். ************ 6. பழக்கங்களை இணையுங்கள் (Habit Stacking): ஏற்கனவே நீங்கள் செய்யும் ஒரு செயலுடன் வாசிப்பை இணையுங்கள். உதாரணமாக, "காலை காபி குடிக்கும்போது 5 பக்கங்கள் வாசிப்பேன்" என்று முடிவு செய்யுங்கள். ******** 7.. ஒரே நேரத்தில் பல புத்தகங்கள்: உங்கள் மனநிலைக்கு ஏற்ப புத்தகங்களைத் தேர்ந்தெடுங்கள். பயணம் செய்யும்போது ஒரு நாவல், காலையில் ஒரு தத்துவப் புத்தகம் என மாற்றி மாற்றி வாசிப்பது சலிப்பைத் தவிர்க்கும். ************ 8. பக்கங்களை இலக்காக வைக்காதீர்கள்: "இந்த வாரம் ஒரு புத்தகம் முடிக்க வேண்டும்" என்ற அழுத்தம் வேண்டாம். "இன்று 2 நிமிடங்கள் அல்லது 2 பக்கங்கள் வாசிப்பேன்" என்ற சிறிய தொடக்கம் போதும். *********** ******** 9. படித்ததை மற்றவரிடம் பகிருங்கள்: நீங்கள் படித்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நண்பரிடமோ அல்லது சமூக வலைதளத்திலோ பகிருங்கள். மற்றவருக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அந்த விஷயம் மனதில் ஆழப் பதியும். ஃபெயின்மேன் உத்தி" - கற்பிப்பதற்காக வாசியுங்கள் (The Feynman Technique): ஒரு புத்தகத்தை சாதாரணமாக வாசிப்பதற்கும், "இதை நான் மற்றவருக்கு விளக்க வேண்டும்" என்ற எண்ணத்தோடு வாசிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ***** 10. டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox): சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்குவதற்குப் பதில், வாசிப்பை ஒரு தியானமாகப் பாருங்கள். போனைத் தூர வைத்துவிட்டு வாசிப்பது உங்கள் கவனத் திறனை (Focus) அதிகரிக்கும். ***** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
N Murugesan
627 காட்சிகள்
இது உண்மையா அல்லது என் கற்பனையா தெரியவில்லை!! 😄. *********************************************** சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்கள் கூட்டம் பெரும் மகிழ்ச்சியை தருகிறது!! திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் போது இவ்வளவு கூட்டம் நான் பார்த்ததில்லை. நான் போகும் போதெல்லாம் ஒவ்வொரு ஸ்டாலிலும் ஓரிருவர் தான் இருப்பர்!😄. *************************************************** ஒரு முறை நான் கோவிலுக்கு சென்று விட்டு பக்தி உணர்வு மாறாமல் திருச்சி வருடாந்திர புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். ஒவ்வொரு ஸ்டாலாக பார்த்துக் கொண்டே போன போது, ஒரு கம்யூனிஸ்ட் சோசியலிஸம் சம்பந்தமான புத்தகங்கள் மட்டும் உள்ள ஸ்டாலில் நுழைந்தேன். எந்த பதிப்பகம் என்று ஞாபகமில்லை. யாருமே இல்லாத டீ கடையில் டீ ஆற்றுவது போல் அங்கே இருந்தவர்கள் என்னவோ உற்சாகமாகத் தான் இருந்தனர்!! இதையெல்லாம் யார் வாங்குவார்கள் என்று எனக்கு தான் பாவமாக இருந்தது!! ஆனால் உள்ளே நுழைந்தவுடனே ஒரு different consciousnessயை உணர்ந்தேன். ஆனால் அது ஒரு நாத்திகம் கலந்த உணர்வு தான்! எனக்கு அந்த consciousness உணர்வு மிகவும் வித்யாசமாக இருந்தது. பிடித்திருந்தது. அதில் ஆன்மீகத்திற்கே உரிய உண்மை, தூய்மை, உலகத்தை நலிந்தவர்களை பற்றிய அக்கறை போன்ற எல்லாம் இருந்தது. ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லை; ஒரு வகையான நாத்திக உணர்வும் மேலோங்கி இருந்தது. இவ்வளவு அருமையான consciousness நாத்திகத்தில் ஏன் இருக்கிறது என்று தோன்றியது. ஏற்கனவே கடவுளாக இருந்த யாரோ கோபத்தில் நாத்திகராக மாறி அந்த ஸ்டாலில் இருந்திருக்க வேண்டும் என்று கூட தோன்றியது!! "ஏன் இது நாத்திகத்தில் இருக்க வேண்டும்; உண்மையான ஆன்மீகம் தெரியாத consciousness பாவம்!" என்று நினைத்தேன். அந்த consciousness என்னிடம் தொற்றிக் கொண்டது என்று நினைக்கிறேன். பிறகு நான் ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் போதும் அந்த consciousnessஉம் ஆன்மீகத்தில் நனைவதை உணர்ந்தேன். பிறகு அந்த consciousness முழுமையாக ஆன்மீகத்தில் நுழைந்து பின்னர் கடவுள் போஸ்ட் கூட பெற்று விட்டது என்று நினைக்கிறேன்!!😄 அது யார்; இப்போது என்ன நிலை என்றெல்லாம் தெரியவில்லை!! இது உண்மாயாக நடந்ததா அல்லது என் கற்பனையா?!! *********************************************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
See other profiles for amazing content