ஃபாலோவ்
சுரேஷ் குமாரா
@68475404
2,044
போஸ்ட்
4,465
பின்தொடர்பவர்கள்
சுரேஷ் குமாரா
660 காட்சிகள்
சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி (சிவனின் 108 போற்றி) ஓம் சிவாய போற்றி ஓம் மஹேஸ்வராய போற்றி ஓம் சம்பவே போற்றி ஓம் பினாகினே போற்றி ஓம் சசிசேகராய போற்றி ஓம் வாம தேவாய போற்றி ஓம் விரூபக்ஷாய போற்றி ஓம் கபர்தினே போற்றி ஓம் நீலலோஹிதாய போற்றி ஓம் சங்கராய போற்றி ஓம் சூலபாணயே போற்றி ஓம் கட்வாங்கினே போற்றி ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி ஓம் சிபி விஷ்டாய போற்றி ஓம் அம்பிகா நாதாய போற்றி ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி ஓம் பக்த வத்ஸலாய போற்றி ஓம் பவாய போற்றி ஓம் சர்வாய போற்றி ஓம் திரிலோகேசாய போற்றி ஓம் சிதிகண்டாய போற்றி ஓம் சிவாப்ரியாய போற்றி ஓம் உக்ராய போற்றி ஓம் கபாலினே போற்றி ஓம் காமாரயே போற்றி ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி ஓம் கங்காதராய போற்றி ஓம் லலாடாக்ஷாய போற்றி ஓம் காலகாளாய போற்றி ஓம் க்ருபாநிதயே போற்றி ஓம் பீமாய போற்றி ஓம் பரசுஹஸ்தாய போற்றி ஓம் ம்ருகபாணயே போற்றி ஓம் ஜடாதராய போற்றி ஓம் கைலாஸவாஸிநே போற்றி ஓம் கவசிநே போற்றி ஓம் கடோராய போற்றி ஓம் திரிபுராந்தகாய போற்றி ஓம் வ்ருஷாங்காய போற்றி ஓம் வ்ருஷபாரூடாய போற்றி ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி ஓம் ஸாமப்ரியாய போற்றி ஓம் ஸ்வரமயாய போற்றி ஓம் த்ரயீமூர்த்தயே போற்றி ஓம் அநீச்வராய போற்றி ஓம் ஸர்வஜ்ஞாய போற்றி ஓம் பரமாத்மநே போற்றி ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி ஓம் ஹவிஷே போற்றி ஓம் யக்ஞ மயாய போற்றி ஓம் ஸோமாய போற்றி ஓம் பஞ்வக்த்ராய போற்றி ஓம் ஸதாசிவாய போற்றி ஓம் விச்வேச்வராய போற்றி ஓம் வீரபத்ராய போற்றி ஓம் கணநாதாய போற்றி ஓம் ப்ரஜாபதயே போற்றி ஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி ஓம் துர்தர்ஷாய போற்றி ஓம் கிரீசாய போற்றி ஓம் கிரிசாய போற்றி ஓம் அநகாய போற்றி ஓம் புஜங்கபூஷணாய போற்றி ஓம் பர்க்காய போற்றி ஓம் கிரிதன்வநே போற்றி ஓம் கிரிப்ரியாய போற்றி ஓம் க்ருத்தி வாஸஸே போற்றி ஓம் புராராதயே போற்றி ஓம் மகவதே போற்றி ஓம் ப்ரமதாதிபாய போற்றி ஓம் ம்ருத்யுஞ்ஜயாய போற்றி ஓம் ஸூக்ஷ்மதனவே போற்றி ஓம் ஜகத்வ் யாபினே போற்றி ஓம் ஜகத் குரவே போற்றி ஓம் வ்யோமகேசாய போற்றி ஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி ஓம் சாருவிக்ரமாய போற்றி ஓம் ருத்ராய போற்றி ஓம் பூதபூதயே போற்றி ஓம் ஸ்தாணவே போற்றி ஓம் அஹிர் புதன்யாய போற்றி ஓம் திகம்பராய போற்றி ஓம் அஷ்டமூர்த்தயே போற்றி ஓம் அநேகாத்மநே போற்றி ஓம் ஸாத்விகாய போற்றி ஓம் சுத்த விக்ரஹாய போற்றி ஓம் சாச்வதாய போற்றி ஓம் கண்டபரசவே போற்றி ஓம் அஜாய போற்றி ஓம் பாசவிமோசகாய போற்றி ஓம் ம்ருடாய போற்றி ஓம் பசுபதயே போற்றி ஓம் தேவாய போற்றி ஓம் மஹாதேவாய போற்றி ஓம் அவ்யயாயே போற்றி ஓம் ஹரயே போற்றி ஓம் பூஷதந்தபிதே போற்றி ஓம் அவ்யக்ராய போற்றி ஓம் பகதேத்ரபிதே போற்றி ஓம் தக்ஷாத்வரஹராய போற்றி ஓம் ஹராய போற்றி ஓம் அவ்யக்தாய போற்றி ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி ஓம் ஸஹஸ்ரபதே போற்றி ஓம் அபவர்க்கப்ரதாய போற்றி ஓம் அனந்தாய போற்றி ஓம் தாரகாய போற்றி ஓம் பரமேஸ்வராய போற்றி #👌இந்த நாள் நல்ல நாள்🤝
சுரேஷ் குமாரா
458 காட்சிகள்
புயல் அடிக்கும் போது நாம அமைதியா ஓரமா நின்னு அல்லது ஒளிஞ்சு நின்னு தான் வேடிக்கை தான் பாக்கணும்! அதை விட்டுட்டு புயல் கிட்ட போனா அது சுழட்டி அடிச்சு தூக்கி வீசிரும்! அப்படி இன்று இஷான் எனும் வீசிய புயலில் பாகிஸ்தான் பவுலர்கள் தூக்கி வீசப்பட்டார்கள்! இது என்ன மாதிரியான புயல்? என்ன வேகத்தில் அடிக்குதுன்னு எல்லாம் அவனுங்களை யோசிக்க கூட டைம் கொடுக்காம கொஞ்ச நேரம் வீசிய அந்த புயலால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்களும் நிலைகுலைந்து போனார்கள்! வீசியது 40 நிமிஷம் தான்! ஆனா அந்த சேதாரத்தை இப்போது கணக்கிட முடியாது! போட்டியின் முடிவில் தான் அந்த புயலால் எந்தளவுக்கு சேதாரம் ஏற்பட்டு இருக்கிறது என்று தெரியவரும்! பாகிஸ்தான் அணிக்கு எதிராக 20 ஓவர் உலககோப்பை தொடரின் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் இஷான் கிஷன் ஆவார்! அவர் இந்த போட்டியில் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்! இந்த வகையில் விராட் கோலி 82* & 78* ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்! பாகிஸ்தான் அணிக்கு எதிராக 20 ஓவர் உலககோப்பை தொடரில் ஒரு போட்டியில் அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய ஓபனர் இஷான் கிஷன் ஆவார்! இந்த வகையில் 2007 ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலககோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கவுதம் கம்பீர் அரைசதம் அடித்து இருந்தார்! மீண்டும் வாய்ப்பு கிடைச்சு ஆடும் போது எப்படி ஆடணும் தெரியுமா? இப்படி ஆடணும்! அதுவும் வெறித்தனமா இந்த மாதிரி தரமா ஆடணும்னு இஷான் கிஷன் நிரூபித்து கொண்டே வருகிறார்! எதிரணி கேப்டன் என்னடா பண்றதுன்னு எப்ப யோசிக்கிறானோ அப்பவே ஒரு பேட்டரா தன் வேலையை சிறப்பா பண்ணிட்டார் இஷான் கிஷன் 🥳 🙌 🔥 Ishan's Missions Continues.... #ishankishan #TeamIndia #IndvsPak #indvspak2026 #indvspakt20 #cricketlovers #🏏 கிரிக்கெட்
சுரேஷ் குமாரா
574 காட்சிகள்
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான் ஆனால் அவ்வளவு எளிதான வெற்றியா என்று கேட்டால் கிடையாது இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இந்த இலங்கை மைதானத்தில் பாகிஸ்தான் அணி வெறும் இரண்டு ஓவர்களை மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்து பழகியது ஆனால் மீதமுள்ள 18 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வைத்து ரொட்டேட் செய்தது அதையும் சிறப்பாக தடுத்து ஆடி இந்திய அணி ஒரு 175 ரன்கள் குவித்தது ஆனால் அந்த ஸ்பின்னிலும் தரமாக வீசினார்கள் சில பந்துகள் எதிர்பார்த்ததை விட அபாயமாக திரும்பியது இதனால் பேட்ஸ்மேன்கள் சற்று திணறியதை காண முடிந்து இப்படி இருக்க இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஸ்பின்னர்கள் பந்து வீசும் போது இதே போல் இருக்குமா என்று நாம் எதிர்பார்த்தோம் ஆனால் பந்து திரும்ப அவ்வளவு உதவவில்லை மாறாக பேட்டிக்கு சுலபமாக செல்வது போன்று தான் இருந்தது இருப்பினும் இந்தியாவின் திறமை அங்கேதான் வெளிப்பட்டது குறிப்பாக வருண் சக்கரவர்த்தி பந்துகளை அவர்கள் முதல் ஓவரில் எப்படி பார்த்து பார்த்து ஆடினார்கள் என்பது நன்றாக தெரிந்தது. வெறும் நான்கு ரண்களை மட்டுமே அவர் முதல் ஓவரில் விட்டுக் கொடுத்தார் அதேபோல்தான் அக்ச்சர் பட்டேலும் பந்து திரும்பவில்லை என்றாலும் பாபர் ஆசமின் விக்கெட்டை ஒரு ஸ்ட்ரெய்ட் பந்திருக்கு இரையாக்கியது அவ்வளவு எளிதல்ல திறமையான பந்துவீச்சை வெளிப்படுத்துவதை விட அந்த திறமைக்கு நாம் விரல்கள் தான் காரணம் அந்த விரலில் நுனியில் இருந்து பந்துகளை சுழற்றி அனுப்புவது அவ்வளவு எளிதல்ல என்பதை இன்றைய ஆட்டத்தில் இந்திய ஸ்பின்னர்கள் அருமையாக நமக்கு செய்து காட்டினார்கள் குல்தீப் யாதவ் வருண் சக்கரவர்த்தி அக்சர் பட்டேல் மற்றும் திலக் வர்மா என்று சூழல் பந்து வீச்சு இந்தியாவிற்கு அருமையாக கை கொடுத்தது சொல்ல போனால் முதல் இன்னிங்ஸில் பந்து திரும்பியதை விட பாதி அளவுக்கு தான் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு பந்து திரும்பியது இருப்பினும் இந்தியா பாகிஸ்தானை 114 ரன்களுக்குள்ளேயே சுருட்டி விட்டது இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் அசுரத்தனமான அபாரமான திறமை தான் இந்தியா வின் சுழல் உலகத்தரம் 🥵🔥 #varunchakaravarthy #kuldeepyadav #AxarPatel #tilakvarma #hardikpandya #🏏 கிரிக்கெட்
சுரேஷ் குமாரா
687 காட்சிகள்
The high-vo ltage T20 World Cup 2026 match between India and Pakistan is scheduled to be played in Colombo on February 15. However, ahead of the blockbuster encounter, a worrying update has emerged for fans.There is a strong possibility of rain during the India-Pakistan clash. According to AccuWeather, rain is likely in Colombo on the afternoon and evening of February 15, with a 50–70% chance of precipitation. The match is set to begin at 7 PM local time, and fans will be hoping that rain does not interrupt the much-anticipated contestThe high-voltage T20 World Cup 2026 match between India and Pakistan is scheduled to be played in Colombo on February 15. However, ahead of the blockbuster encounter, a worrying update has emerged for fans.There is a strong possibility of rain during the India-Pakistan clash. According to AccuWeather, rain is likely in Colombo on the afternoon and evening of February 15, with a 50–70% chance of precipitation. The match is set to begin at 7 PM local time, and fans will be hoping that rain does not interrupt the much-anticipated contest. #T20WorldCup #cricket #🏏 கிரிக்கெட்
சுரேஷ் குமாரா
591 காட்சிகள்
பசியறிந்து சோறு போட ஒருவர் இருக்கும் வரை.. சாப்பிட்டாயா எனக் கேட்க ஒருவர் இருக்கும் வரை.. தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க ஒருவர் இருக்கும் வரை.. நோய் வந்தால் இரவுகளில் கண் விழித்துப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கும் வரை.. குரல் மாறுபாட்டில் மன நிலையைக் கணிக்க ஒருவர் இருக்கும் வரை.. போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என வழியனுப்ப ஒருவர் இருக்கும் வரை.. வீட்டைக் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் இருக்கும் வரை.. தோற்றுப் போய் திரும்புகையில் தோள் சாய்த்துக் கொள்ள ஒருவர் இருக்கும் வரை.. போ என்றாலும் விட்டுப் போகாது சண்டை போட்டுக் கொண்டேனும் உடனிருக்க ஒருவர் இருக்கும் வரை.. மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒருவர் இருக்கும் வரை.. நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க ஒருவர் இருக்கும் வரை.. எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக் கொடுக்காத ஒருவர் இருக்கும் வரை.. கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி நானிருக்கிறேனென உணர்த்த ஒருவர் இருக்கும் வரை.. தவறுகளைத் தவறென சுட்டிக் காட்டித் திருத்தும் ஒருவர் இருக்கும் வரை.. துயர் அழுத்தும் கணங்களில் அருகிருந்து கண்ணீர்த் துடைக்க ஒருவர் இருக்கும் வரை.. மனக் குறைகளைப் புலம்பித் தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க ஒருவர் இருக்கும் வரை மட்டுமே.. வாழ்வு வசந்தமானது! 💔💔💔💔💔💔💔😥😥😥 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
சுரேஷ் குமாரா
601 காட்சிகள்
அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட நுழைய முடியாது; பிரமிக்க வைக்கும் புதிய பிரதமர் அலுவலகம்; வல்லரசு நாட்டில் கூட இப்படி ஒரு அலுவலகம் கிடையாதே..! டில்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகமும் செயல்பட உள்ளது. புதிய வளாகத்தில் தேவநகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட 'சேவா தீர்த்' என்ற பெயர்ப் பலகையும், அதன் கீழே 'நாக்ரிக் தேவோ பவ' (குடிமக்கள் கடவுளுக்கு நிகரானவர்) என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில், தனது பணியைத் தொடங்கிய முதல் நாளான இன்று, ஐந்து திட்டங்களுக்குப் பிரதமர் ஒப்புதல் வழங்கினார். அதன்படி, பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கான நலத்திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். சுமார் 1,100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரதமர் அலுவலக வளாகம், வெறும் அலுவலகம் மட்டுமல்ல; இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றும் ஒரு நவீனக் கோட்டை. இதன் கட்டமைப்பு மற்றும் உள் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. டெல்லியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சவுத் பிளாக் கட்டிடத்திற்கு அருகிலேயே இந்தப் புதிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ளது. பழைய டெல்லியின் பாரம்பரியம் மாறக்கூடாது என்பதற்காக, சிவப்பு மற்றும் பழுப்புக் நிற டோல்பூர் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் பிரம்மாண்ட முறையில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் வெளியே இருந்து பார்க்கும்போது இது ஒரு பாரம்பரியக் கட்டிடமாகத் தெரிந்தாலும், உள்ளே இது ஒரு '22-ம் நூற்றாண்டு' தொழில்நுட்பக் கூடம். நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் அதிநவீன பொறியியல் தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள்: 1. டிஜிட்டல் இந்தியா மையம்: இந்த புதிய பிரதமர் அலுவலகம் முழுவதும் காகிதமில்லா அலுவலகமாக (Paperless Office) செயல்படும். அதற்கான அதிவேக இன்ட்ராநெட் மற்றும் பாதுகாப்பான சர்வர் வசதிகள் சுவர்களுக்குள்ளேயே ஆங்காங்கே பதிக்கப்பட்டுள்ளன. 2. கலாச்சாரப் பிரதிபலிப்பு: பிரதமர் அலுவலகத்தின் உட்புறச் சுவர்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைக் குறிக்கும் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' தத்துவத்தை இது பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மிகச்சிறப்பு. 3. வார் ரூம் (War Room): அவசர சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அவசர முடிவுகளை எடுப்பதற்காக, அதிநவீன தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட 'வார் ரூம்' மற்றும் அமைச்சரவைக் கூட்ட அரங்கம் (Cabinet Meeting Hall) இங்கு அமைக்கப்பெற்றுள்ளது. 4. ஈ கூட நுழைய முடியாதபடி கடும் பாதுகாப்பு: இந்தியாவின் உச்சபட்ச பதவியில் இருப்பவர் அலுவலகம் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் கற்பனைக்கு எட்டாதவை. சுரங்கப் பாதை: பிரதமரின் இல்லத்தில் இருந்து அலுவலகத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் செல்ல பாதுகாப்பான நிலத்தடிச் சுரங்கப்பாதை (Underground Tunnel) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விஐபி போக்குவரத்தின்போது டெல்லியில் பொதுமக்களுக்கு டிராபிக் தொல்லை இருக்காது. 5. டிரோன் பாதுகாப்பு: வானில் இருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஆன்டி-ட்ரோன் சிஸ்டம் (Anti-drone System) மற்றும் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இந்த அலுவலகம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. 6. பசுமைக் கட்டிடம் (Green Building): பிரதமர் அலுவலகம் முழுவதுமே 'பசுமைக் கட்டிடம்' சான்றிதழ் பெற்ற வளாகம். சூரிய ஒளி மின்சாரம், மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் மறுசுழற்சித் திட்டங்களுடன், இயற்கையோடு இயைந்த வகையில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில், 90 ஆண்டுகாலப் பழைய கட்டிடத்திலிருந்து, நவீன இந்தியாவின் அடையாளமாக மாறியிருக்கும் இந்தப் புதிய PMO, இந்தியாவின் அதிகார மையத்திற்குப் புதிய கம்பீரத்தைச் சேர்த்துள்ளது என்றால் மிகையாகாது. பிரதமர் அலுவலகம் இருந்த சவுத் பிளாக் கட்டடம் தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இந்திய பிரதமர் அலுவலகம் 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #📺வைரல் தகவல்🤩
See other profiles for amazing content