இந்த படத்தில் காணப்படுவது காற்றாலை மின் உற்பத்தி இயந்திரத்தின் உட்புற அமைப்பு ஆகும். காற்றின் சக்தியை பயன்படுத்தி எவ்வாறு மின்சாரம் உருவாக்கப்படுகிறது என்பதை எளிய முறையில் பார்ப்போம்.
முதலில், காற்று வீசும் போது பெரிய பறக்குதிகள் போன்ற ரோட்டர் ப்ளேட்கள் சுழலத் தொடங்கும். இந்த ப்ளேட்கள் காற்றை “பிடித்து” சுழலும் சக்தியை உருவாக்குகின்றன.
இந்த சுழற்சி சக்தி முதலில் லோ-ஸ்பீடு ஷாஃப்ட் (மெதுவாக சுழலும் தண்டு) மூலம் உள்ளே செல்கிறது. அதன் பிறகு அது கியர்பாக்ஸ் என்ற பகுதியை அடைகிறது. கியர்பாக்ஸ் மெதுவான சுழற்சியை வேகமான சுழற்சியாக மாற்றுகிறது. உதாரணமாக, 1 முறை மெதுவாக சுழன்றால் அதை 100 மடங்கு வேகமாக மாற்றும் திறன் இதில் உள்ளது.
அதன்பிறகு, இந்த வேகமான சுழற்சி ஹை-ஸ்பீடு ஷாஃப்ட் மூலம் ஜெனரேட்டர் (மின் உற்பத்தி கருவி) வரை செல்கிறது. ஜெனரேட்டர் இந்த சுழற்சி சக்தியை மின்சாரமாக மாற்றுகிறது. இதுவே நாம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரம்.
மேலும், காற்றின் வேகத்தை அளப்பதற்கு அனீமோமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதைப் பொறுத்து காற்றாலை திரும்புவதற்கு யா டிரைவ் உதவுகிறது. இவை அனைத்தும் உயரமான டவர் மீது அமைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் உயரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
இதனால், காற்றின் இயற்கை சக்தியை பயன்படுத்தி எந்த எரிபொருளும் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. காற்றாலை என்பது சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். #🤔 Unknown Facts
எளிதில் வெற்றி பெற்று இருக்க வேண்டிய வாய்ப்பை தவற விட்ட
ஆப்கானிஸ்தான் கேப்டன்...
திறமையான வீரர்களை சரியான முறையில் பயன்படுத்தி இருந்தால் சூப்பர் ஓவரில் வென்று இருக்கலாம். #🏏 கிரிக்கெட்
🕉️ பிரம்மா ஏன் படைக்கிறார்? விஷ்ணு ஏன் காப்பாற்றுகிறார்? சிவன் ஏன் அழிக்கிறார்?
இந்த உலகம் உருவானதிலிருந்து மனித மனதில் எழும் மிகப் பெரிய கேள்வி ஒன்றே:
“படைத்தல், காத்தல், அழித்தல் – இந்த மூன்று செயல்களும் ஏன் தேவை?”
இந்து தர்மத்தின் அடிப்படையில்,
பிரம்மா – படைப்பவர்
விஷ்ணு – காப்பவர்
சிவன் – அழிப்பவர்
என்று மூன்று தெய்வங்களுக்கும் மூன்று முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் இதன் பின்னால் மறைந்திருக்கும் தத்துவம் என்ன? உண்மையான காரணம் என்ன?
அதை இப்போது விரிவாக அறிந்து கொள்வோம்.
🌿 படைப்பின் தொடக்கம்
தொடக்கத்தில் எதுவும் இல்லை. வெறும் பரபிரம்ம நிலை மட்டுமே இருந்தது.
அந்த பரபிரம்ம வடிவிலிருந்து முதலில் உருவானவர் சிவபெருமான்.
சிவன் தன்னிலிருந்து சக்தியை பிரித்து ஆதிசக்தியை உருவாக்கினார்.
அதன்பிறகு, சிவபெருமான் தனது திருவருளால் மகாவிஷ்ணுவை உருவாக்கினார்.
மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றியவரே பிரம்மதேவர்.
அதாவது –
முதல் படைப்பாளி சிவன்
படைப்பை நடத்துபவர் பிரம்மா
படைப்பை நிலைநிறுத்துபவர் விஷ்ணு
இவ்வாறு பிரபஞ்ச இயக்கம் மூன்று சக்திகளாகப் பிரிந்தது.
🌍 படைப்பு கடவுள் – பிரம்மா
பிரம்மதேவர் உலகைப் படைத்தவர்.
விண்வெளி, கிரகங்கள், பூமி, அண்ட சராசரங்கள் அனைத்தையும் உருவாக்கியது பிரம்மாவின் தெய்வீக ஆற்றல்தான்.
பின்னர் அவர் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என கோடானுகோடி உயிர்களை உருவாக்கினார்.
உயிர்களின் சமநிலை
பிரம்மதேவர் படைப்பில் மிக முக்கியமான விதி ஒன்றை வைத்தார்:
ஒவ்வொரு உயிருக்கும் எதிர் உயிர் இருக்க வேண்டும்.
காஷ்யப முனிவர் – அதிதி மூலம் தேவர்கள்
காஷ்யப முனிவர் – திதி மூலம் அசுரர்கள்
கருடன் – நாகம்
புலி – மான்
கழுகு – பாம்பு
இப்படி உலகில் அனைத்தும் சமநிலையாக உருவாக்கப்பட்டன.
உணவுச் சங்கிலியின் தத்துவம்
இந்த உலகில் எந்த உயிரும் தனித்து வாழ முடியாது.
உதாரணமாக:
புல் முளைக்கிறது
புல்லை மாடு, மான் போன்ற தாவர உண்ணிகள் உண்ணுகின்றன
அவற்றை புலி, சிங்கம் போன்ற மாமிச உண்ணிகள் வேட்டையாடுகின்றன
அவை இறந்தபின் கழுகு, காக்கை, பூச்சிகள் உணவாகின்றன
மீதமுள்ளவை மண்ணுக்கு உரமாகின்றன
அதே மண்ணில் மீண்டும் புல் முளைக்கிறது
இதுவே இயற்கையின் சுழற்சி!
இந்த நுண்ணிய அமைப்பை உருவாக்கி இயக்குவது பிரம்மதேவரின் படைப்புத் தொழில்.
மனிதனின் அறிவு, விதி, வாழ்க்கை நடை – அனைத்தையும் நிர்ணயிப்பதும் பிரம்மதேவர்தான்.
🛡️ காக்கும் கடவுள் – விஷ்ணு
பிரம்மா உருவாக்கிய உயிர்களுக்குள் காலப்போக்கில் முரண்பாடுகள் தோன்றத் தொடங்கின.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர்
கருடனுக்கும் நாகத்திற்கும் பகை
மனிதர்களுக்குள் சண்டை
தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் மோதல்
இந்த மோதல்கள் எல்லாம் எல்லை மீறும்போது உலகம் அழிவை நோக்கிச் செல்லும்.
அப்போதுதான் மகாவிஷ்ணு காப்பாற்ற வருகிறார்.
விஷ்ணுவின் அவதார நோக்கம்
உலக சமநிலையை காக்கவே விஷ்ணு அவதாரம் எடுக்கிறார்.
பூமியை காக்க வராஹ அவதாரம்
தர்மத்தை நிலைநிறுத்த கிருஷ்ண அவதாரம்
நெறிமுறை வாழ்க்கையை கற்றுத்தர ராம அவதாரம்
ஒவ்வொரு அவதாரமும் உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே!
உயிர்கள் முழுமையாக அழிந்துவிடக் கூடாது என்பதற்காக
நல்லவர்களை காத்து, தீமையை அடக்குகிறார் விஷ்ணு.
🔥 அழிக்கும் கடவுள் – சிவன்
சிவபெருமான் ஏன் அழிக்க வேண்டும்?
இதுதான் மிக ஆழமான தத்துவம்.
அழிவு இல்லையென்றால் – புதிய படைப்பே இல்லை!
அழிவு ஏன் அவசியம்?
உதாரணமாக:
டைனோசர்கள் அழியாமல் இருந்திருந்தால்
மனித இனம் தோன்றியிருக்க முடியாது.
மரங்கள் பழைய இலைகளை உதிர்க்காவிட்டால்
புதிய இலைகள் பிறக்காது.
இருள் இல்லையென்றால்
வெளிச்சத்தின் அர்த்தம் தெரியாது.
அதேபோல,
பழைய உயிர்கள் அழிந்தால்தான் புதிய உயிர்கள் தோன்றும்.
சிவன் – எமன் சம்பவம்
ஒரு காலத்தில் சிவபெருமான், எமதர்மராஜாவை உதைத்து, உயிர்கள் மரணமடையாதபடி செய்தார்.
அதன் விளைவு என்ன?
மக்கள் எண்ணிக்கை பெருகியது
பூமி பாரம் தாங்க முடியாமல் திணறியது
உணவுப் பஞ்சம் ஏற்பட்டது
இயற்கை சமநிலை முறிந்தது
அப்போது பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க,
சிவபெருமான் எமனை மீண்டும் உயிர்ப்பித்து, மரணத் தொழிலை ஒப்படைத்தார்.
அதன்பிறகே உலக சமநிலை மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.
🌀 மூன்று தொழில்களின் உண்மையான அர்த்தம்
அதனால்,
படைப்பு – வளர்ச்சிக்காக
காப்பு – நிலைத்தன்மைக்காக
அழிவு – புதுமைக்காக
இந்த மூன்றும் இல்லையென்றால் பிரபஞ்சம் இயங்காது.
இதுவே பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் தெய்வீக நோக்கம்!
🌟 முடிவுரை
இந்த உலகம் ஒரு தொடர்ச்சியான சுழற்சி.
படைத்தல் → காத்தல் → அழித்தல் → மீண்டும் படைத்தல்
இந்தச் சுழற்சியே வாழ்வின் ரகசியம்.
அதனை இயக்கும் சக்திகளே – மும்மூர்த்திகள். #🖌பக்தி ஓவியம்🎨🙏
🚨 𝑹𝑬𝑷𝑶𝑹𝑻𝑺 🚨
Abhishek Sharma is suffering from a stomach infection and a fever. He did not feel well at the team dinner at head coach Gautam Gambhir’s house on Sunday. 🤕
He was admitted to the hospital on Monday and remained there on Tuesday. The team management is currently monitoring his condition. If Abhishek isn’t fit, Sanju Samson will open with Ishan Kishan. 🇮🇳🏏
(Source: Abhishek Tripathi)
#AbhishekSharma #INDvNAM #T20WorldCup #🏏 கிரிக்கெட்
காசோலை கொடுத்தவர் தேதியிட்டு வழங்குகிறார்.
காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் அதை காசோலை பெற்றவர் வங்கி கணக்கில் போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும். (முன்பு, காசோலை பெறபட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு செல்லும் )
காசோலை பெற்றவர் அதனை வங்கியில் போடுகிறார்.வங்கியில் காசோலை கொடுத்தவர் அக்கவுண்டில் பணம் இல்லை என்று அந்த காசோலை திருப்பித் தரப்பட்டு, வங்கியில் இருந்து அதற்கான மெமோ காசோலை பெற்றவரிடம் வழங்கப்படுகிறது.
சட்ட அறிவிப்பு வழங்க வேண்டும்.
காசோலை வழங்கியவர் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும்பட்சத்தில், அந்த மெமொ பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு ஒரு சட்டப்படியான அறிவிப்பை காசோலையை பெற்றவர் வழங்க வேண்டும். இந்த அறிவிப்பு வழங்குவது மிக கட்டாயமானதாகும்.
என்ன செய்ய வேண்டும் : 1
காசோலையை கொடுத்தவருக்கு முறைப்படி சட்ட அறிவிப்பை காசோலையை பெற்றவர் அனுப்புகிறார். அறிவிப்பு வழங்கிய பின்னர் காசோலை கொடுத்தவர் அறிவிப்பை பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பணத்தை திருப்பி அளிக்கவேண்டும்.
15 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் காசோலை கொடுத்தவர் பணம் தரவில்லை. காசோலை வழங்கியவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பான 15 நாட்கள் முடிந்ததும், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கை காசோலை பெற்றவர் தாக்கல் செய்யலாம். இந்த கால அளவில் ஏதாவது தவறு ஏற்பட்டால்,காசோலை மோசடி வழக்கு தொடர முடியாது.
என்ன செய்யக்கூடாது..
காசோலையை 16.05.2015 அன்று வங்கியில் பணம் வசூலிக்க காசோலை பெற்றவர் தாக்கல் செய்கின்றார். காசோலை கொடுத்தவர் கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர் காசோலையை பெற்றவரிடம் தெரியப்படுத்துகின்றார்.காசோலை கொடுத்தவரை, காசோலை பெற்றவர் தொடர்பு கொண்டால், சற்று பொறுத்துகொள்ளுங்கள், இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுவேன் என்கின்றார்.அவர் பேச்சை கேட்டு காசோலை பெற்றவர் சட்டப்படியான நோட்டிஸ் 30 நாட்களுக்குள் அனுப்பாமல் இருக்கிறார். ஒரு மாதம் கழிகின்றது.
பணம் தரவில்லை. பணத்தை கேட்டால், காசோலை கொடுத்தவர் பணம் கொடுக்கமறுக்கின்றார்.
30 நாட்களுக்குள் சட்டப்படியான அறிவிப்பு அனுப்பவில்லை என்பதால் இப்போது திரும்பி வந்த காசோலையை வைத்து வழக்கிட முடியாது.
என்ன செய்யவேண்டும் : 2
காசோலையை தாக்கல் செய்வதற்கான கால அளவு குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம் வரை இருப்பதால், திரும்பவும் ஒரு முறை அந்த காசோலையை பெற்றவர் வங்கியில் தாக்கல் செய்ய வேண்டும். அது திரும்பி வந்த பிறகு, உடனடியாக காசோலையை கொடுத்தவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்ப வேண்டும்.
அனுப்புகின்ற அந்த சட்ட அறிவிப்பில் முதலாவதாக பணம் வசூலிக்க காசோலை வங்கியில் போட்ட விபரத்தையும், காசோலை திரும்பி வந்த விபரத்தையும், காசோலையை கொடுத்தவர் பணத்தை ஒரு மாதத்துக்குள் தருவதாகக் கூறியதால் சட்டப்படியான அறிவிப்பு வழங்காமல் இருந்ததையும் தெளிவாக அதில் குறிப்பிடவேண்டும்
பணத்தை வசூலிக்க குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம் எத்தனை முறை வேண்டுமானாலும் வங்கியில் அந்தக் காசோலையை தாக்கல் செய்யலாம். காசோலை திரும்பி வந்ததும் சட்ட அறிவிப்பு வழங்கலாம். ஆனால், கடைசி 15 நாட்கள் இருக்கும் போது தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்தால், காசோலையை வழங்கியவர் சொல்லும் கதைகளை (பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்) கேட்காமல் சட்ட அறிவிப்பு வழங்குவது நல்லது.
அல்லது காசோலை வழங்கியவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு காசோலையை அவரிடம் பெற்ற பிறகே, அவர் நமக்கு பணத்தை கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.
காசோலை அளித்தவர் இறந்து விட்டால்?
வாடிக்கையாளருக்கும், வங்கிக்கும் உள்ள உறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.
வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அதன் பின்னர் வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை கழிக்க முடியாது.
வாடிக்கையாளர் இறந்துவிட்டார் என்று வங்கி காசோலையை திருப்பி அனுப்பினாலும் அதன் அடிப்படையில் காசோலை மோசடி வழக்கிடமுடியாது ஏனெனில் சட்டப்படியான அறிவிப்பை காசோலை வழங்கியவருக்கு மட்டுமே அனுப்பவேண்டும். மேலும் இறந்தவர் மீது குற்றவியல்வழக்கு தொடர முடியாது. ஆனால் காசோலை கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் மீது சிவில் வழக்கு போடலாம். இறந்தவர் ஏதாவது சொத்தை விட்டு சென்றால் அந்த சொத்தின் மீது நீதிமன்றத்தின் வாயிலாக உரிமை கோரலாம்.
இறந்தவருக்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் இறந்தவர் கடனை அடைக்க அவரின் வாரிசுதாரர்கள் கடமைபட்டவர்கள் அல்ல. வாரிசுதாரர்களின் கடமையானது இறந்தவரின் சொத்தில் அடையும் உரிமை அளவே ஆகும்.
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர். #🤔 Unknown Facts
*🕉🔯ஶ்ரீராமஜயம்.🕉*
*பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ தை ~ 28*~
*{11/02/2026}*
*புதன்கிழமை*.
*1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். { விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம் .*
*3.ருது ~ ஹேமந்த ருதௌ.*
*4.மாதம் ~ தை ( மகர மாஸம் )*
*5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்*
*6. திதி ~ நவமி காலை 11.16 AM வரை. பிறகு தசமி* .
*ஸ்ரார்த்த திதி ~ தசமி .*
. *7.நாள் ~ புதன்கிழமை { ஸௌம்ய நாம வாஸரம் ).*
*8. நக்ஷத்திரம் ~ அனுஷம் பகல் 12.09 PM வரை. பிறகு கேட்டை .*
*அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம் .*
*நாம யோகம் ~ வ்யாகத நாம யோகம்.*
*கரணம் ~ கரஜை , வணிஜை .*
*நல்ல நேரம் ~ காலை 09.30 AM ~ 10.30 AM & 04.30 ~ 05.30 PM .*
*ராகு காலம் ~ பகல் 12.00 ~ 01.30 PM .*
*எமகண்டம் ~ காலை 07.30 ~ 09.00 AM.*
*குளிகை ~ பகல் 10.30 AM ~ 12.00 PM.*
*சூரிய உதயம். ~ காலை 06.33 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.13 PM.*
*சந்திராஷ்ட்டமம் ~ அஸ்வினி , பரணி.*
*சூலம் ~ வடக்கு.*
*பரிகாரம் ~ பால்*
*இன்று ~ .*
*🔯🕉SRI RAMA JAYAM🔯🕉*
*PANCHAANGAM ~ ~ VISWAVASU ~ THAI - 28 ~* *(11/02/2026) ~ WEDNESDAY*
*1.YEAR ~ VISWAVASU {VISWAVASU NAMA VATHSARAM).*
*2.AYANAM ~ UTHTHARAAYANAM*.
*3. RUTHU ~ HEMANTHA RUTHU.*
*4. MAASAM ~ THAI ( MAGARA MAASAM)*. *5. PAKSHAM ~ KRISHNA PAKSHAM.*.
*6.THITHI ~ NAVAMI UPTO 11.16 AM. AFTERWARDS THASAMI . *SRAATTHTHA THITHI ~ THASAMI .* *7.DAY ~ WEDNESDAY (SOWMYA VAASARAM).*
*8. NAKSHATHRAM ~ ANUSHAM UPTO 12.09 PM. AFTERWARDS KETTAI.*
. *AMIRDHATHI YOGAM ~ SIDHDHA YOGAM .* *.
*NAAMA YOGAM ~ VYAGATHA NAAMA YOGAM. .*
*KARANAM ~ GARAJAI , VANIJAI .* *.
*RAGU KAALAM ~ 12.00 PM ~ 01.30 PM.*
*YEMAGANDAM* ~ *07.30 ~ 09.00 AM*’
*KULIGAI ~ 10.30 AM ~ 12.00 PM.*
*GOOD TIME ~ 09.30 AM ~10.30 AM . & 04.30 ~ 05.30 PM.*
*SUN RISE ~ 06.33 AM.*
*SUN SET ~ 06.13 PM.*.
*CHANDRAASHTAMAM ~ ASWINI , BHARANI.*
*SOOLAM ~ NORTH .*
*PARIGARAM* ~ .*MILK*
*TODAY ~ .*
. #👌இந்த நாள் நல்ல நாள்🤝
கடலில் இருந்து அல்ல, இமயமலையில் இருந்து சுனாமி வரும்..! ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கும்..! IIT ஆய்வில் எச்சரிக்கை..!
இமயமலையின் பனி மூடிய சிகரங்களுக்கு மத்தியில் ஒரு சுனாமி போன்ற பேரழிவு உருவாகி வருகிறது. இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பரப்பளவு வேகமாக அதிகரித்து வருவதாக ஐஐடி ரூர்க்கியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் தெவித்துள்ளனர்..
‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ரவீந்திர குமார் மற்றும் சௌரப் விஜய் ஆகியோரின் இந்த ஆராய்ச்சியின்படி, உயர் மலை ஆசிய (HMA) பிராந்தியத்தில் உள்ள இந்த ஏரிகளின் பரப்பளவு 2016 மற்றும் 2024-க்கு இடையில் 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது, 31,000-க்கும் மேற்பட்ட இத்தகைய ஏரிகள் உள்ளன, இவை 9.3 மில்லியன் மக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளன.
‘இமயமலை சுனாமி’ அல்லது GLOF என்றால் என்ன?
மலைகளில் உள்ள பனிப்பாறைகள் உருகும்போது, அவற்றின் நீர் காலியான இடங்களில் சேகரமாகி ஏரிகளை உருவாக்குகின்றன. இந்த ஏரிகளைச் சுற்றி கான்கிரீட் அணைகள் இல்லை; மாறாக, அவை தளர்வான பாறைகள், பனி மற்றும் குப்பைகளால் (மொரைன்) ஆன இயற்கை அணைகளால் சூழப்பட்டுள்ளன.புவி வெப்பமயமாதல் காரணமாக நீரின் அழுத்தம் அதிகரிக்கும்போது அல்லது ஒரு பனிப்பாறை இந்த ஏரிகளைத் தாக்கும்போது, இந்த அணைகள் பலூன்களைப் போல வெடிக்கின்றன. இது “பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம்” (Glacier Lake Outburst Flood – GLOF) அல்லது இமயமலை சுனாமி என்று அழைக்கப்படுகிறது.
2013-ஆம் ஆண்டின் கேதார்நாத் பேரழிவு மற்றும் 2023-ஆம் ஆண்டில் சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவை இந்த அபாயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். இந்த ஏரிகள் மிகவும் உயரத்தில் இருப்பதால், அவற்றின் நீர் கீழே விழும்போது immense வேகத்தைப் பெறுகிறது.அது வெறும் நீரை மட்டும் கொண்டு செல்வதில்லை, மாறாக, பாறைகள், மண் மற்றும் மரங்களைச் சுமந்து செல்லும் ஒரு “நகரும் மலையாக” மாறி, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் அழித்துவிடுகிறது.
இந்த 31,000 நேர வெடிகுண்டுகளை விஞ்ஞானிகள் எவ்வாறு அடையாளம் கண்டனர்?
ஆயிரக்கணக்கான அடி உயரம் மற்றும் மிகவும் கடினமான நிலப்பரப்பு காரணமாக, இந்த ஏரிகளைக் கண்காணிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. இருப்பினும், ஐஐடி ரூர்க்கியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் நாசா மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) லேண்ட்சாட் 8-இன் உயர் தெளிவுத்திறன் தரவுகளுடன், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) சென்டினல் 1 மற்றும் 2 மற்றும் கோப்பர்நிக்கஸ் டிஜிட்டல் எலிவேஷன் மாடல் ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால், அதன் ரேடார் மற்றும் ஆப்டிகல் சென்சார்கள் மேகங்களுக்கு ஊடாகப் பார்க்க முடியும். இதன் உதவியுடன், விஞ்ஞானிகள் 20,000 முதல் 100,000 சதுர மீட்டர் வரையிலான சிறிய ஏரிகளைக் கூட துல்லியமாக அடையாளம் கண்டுள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் இப்போது “மூன்றாவது துருவம்” என்று அழைக்கப்படும் முழுப் பகுதியையும் தொடர்ந்து கண்காணிப்பதை சாத்தியமாக்கியுள்ளது.
எந்தப் பகுதிகள் வேகமாக ஏரிகளாக விரிவடைந்து வருகின்றன?
அந்த ஆய்வின்படி, ஏரிகளின் விரிவாக்க விகிதம் பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது: கிலியன் ஷான்: இந்தப் பகுதியில் ஏரிகளின் பரப்பளவு 22.5 சதவீதம் அதிகரித்து, அதிகபட்ச உயர்வைச் சந்தித்துள்ளது.
கிழக்கு இமயமலை: அதிக எண்ணிக்கையிலான ஏரிகளைக் கொண்டிருப்பதால், இந்தப் பகுதி மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது.
இந்தியாவில் நிலைமை: இந்தியாவில் சுமார் 3 மில்லியன் மக்கள் இந்த நிலையற்ற ஏரிகளுக்குக் கீழே நேரடியாக வாழ்கின்றனர்.
உயர்ந்து வரும் வெப்பநிலை மற்றும் மாறிவரும் பருவமழையின் காரணமாக பனிப்பாறைகள் சுருங்கி வருகின்றன. முன்பு பனி இருந்த இடங்களில், இப்போது ஆழமான, நிலையற்ற நீர்நிலைகள் உருவாகியுள்ளன. 9.3 மில்லியன் மக்கள் மீது கவிழும் மரண நிழல்.
பனிப்பாறை வெள்ள அபாயத்தில் உள்ள உலக மக்கள் தொகையில், 62 சதவீதம் பேர் உயர் மலை ஆசியப் பகுதியில் மட்டுமே வாழ்கின்றனர். இமயமலையின் இந்தப் பகுதியில் உள்ள பல குடும்பங்கள் ஏரிகளிலிருந்து வெறும் 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் வாழ்கின்றனர். அதாவது, ஒரு ஏரி உடைந்தால், மக்களை எச்சரித்து வெளியேற்ற மிகக் குறைந்த நேரமே இருக்கும். இந்த ஏரிகள் மண் மற்றும் பனியால் ஆன சுவர்களைக் கொண்ட, வெடிக்கக் காத்திருக்கும் நேரக் குண்டுகளைப் போன்றவை. புவி வெப்பமடைதல் இதே வேகத்தில் தொடர்ந்தால், எதிர்காலத்தில் கேதார்நாத் போன்ற பேரழிவுகளின் அபாயம் மேலும் அதிகரிக்கக்கூடும். #🤔 Unknown Facts













