ரத சப்தமி..
25.1.2026 ஞாயிறு
சூரிய ஜெயந்தி
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி .
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது .
தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்கிறது . அதாவது தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது.
ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும்.
சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்கிறது சாஸ்திரம் .
ரத சப்தமி வழிபாடு எப்படி செய்வது..?
சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.
நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும்.
வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம்.
சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது உகந்த நாள்.
இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
ஜோதிட ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.
ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.உத்யோக காரகன் வருமான காரகன் சூரியனே...எனவே உத்யோக உயர்வு ,அரசுபணி ,வருமான உயர்வுக்கு இந்த வழிபாட்டை செய்யலாம்
ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலம் தேர்க்கோலம் போடுவது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.
நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.
சூரியனின் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்டதால், திருமலை-திருப்ப
தியில் ‘ரத சப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருவேங்கடமுடையான் 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும்.
திருமலையில் இந்த காட்சிகளை காண கண்கோடி வேண்டும் .
ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு.
ரதசப்தமி தினத்தில் சூரியனை வழிபடும்போது , சூரியனை நோக்கி,
"ஓம் நமோ ஆதித்யாய... ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!'
என்று சொல்லி வணங்க வேண்டும்..!
ஓம் சூர்யதேவாய நம..!
ரத🔔சப்தமி #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
𝗦𝗰𝗼𝘁𝗹𝗮𝗻𝗱 𝗲𝗻𝘁𝗲𝗿 𝘁𝗵𝗲 𝗜𝗖𝗖 𝗧𝟮𝟬 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗖𝘂𝗽 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄𝗶𝗻𝗴 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵’𝘀 𝗲𝘅𝗶𝘁. 🚪🏆
If Pakistan decide to withdraw from the tournament, Uganda will take their place in Group A. 👀
#🏏 கிரிக்கெட்
*🔯🕉ஶ்ரீராமஜயம்🔯🕉*
*பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ தை ~ 11* ~
*{25/01/2026} ~ ** *ஞாயிற்றுக்கிழமை.*
*1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். ( விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம் .*
… *. 3. ருது.* ~ *ஹேமந்த ருதௌ*
*4.மாஸம் ~ தை ( மகர மாஸம்)*.
*5.பக்ஷம் - சுக்ல பக்ஷம்*.
*6. திதி ~ ஸப்தமி இரவு 09.19 PM வரை . பிறகு அஷ்டமி .*
*ஸ்ராத்த திதி ~ ஸப்தமி .*
*7. நாள் ~ ஞாயிற்றுக்கிழமை {பானு வாஸரம்}*.
*8.நக்ஷத்திரம் ~ ரேவதி பகல் 12.11 PM வரை. பிறகு அஸ்வினி .*
*அமிர்தாதி யோகம் ~ அமிர்த , சித்த யோகம் .*
*நாம யோகம்*~ *ஸித்தம் நாம யோகம் (11.46 AM ). பிறகு ஸாத்ய நாம யோகம்.*
*கரணம் ~ கரஜை , வணிஜை.*
*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & 03.30 PM ~ 04.30 PM*
*ராகு காலம் ~ மாலை 04.30 PM ~ 06.00 PM*
*எமகண்டம் ~12.00 PM ~ 01.30 PM*
*குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.*
*சூரிய உதயம் ~ காலை 06.36 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.07 PM.*
*சந்திராஷ்டமம் ~ உத்திரம் , ஹஸ்தம் .*
*சூலம் ~ மேற்கு*.
*பரிகாரம் ~ வெல்லம்.*
*இன்று ~ ரத ஸப்தமி.*
.*
*🔯🕉️ SRI RAMAJAYAM🔯🕉️*
*PANCHAANGAM ~ VISWAVASU ~ THAI ~ 11 ~ (25/01/2026) SUNDAY.*
*1.YEAR ~ VISWAVASU VARUDAM. { VISWAVASU NAMA SAMVATHSARAM}*
*2.AYANAM ~ UTHTHARAAYANAM .*
*3.RUTHU ~ HEMANTHA RUTHU*
*4. MONTH ~ THAI ( MAGARA MAASAM.)*
*5. PAKSHAM ~ SUKLA PAKSHAM . .*
*6.THITHI ~ SABTHAMI UPTO 09.19 PM. AFTERWARDS ASHTAMI .* *SRAATHTHA THITHI ~ SABTHAMI .*
*7.DAY ~ SUNDAY.*
*8.NAKSHATRAM ~ REVATHI UPTO 12.11 PM. AFTERWARDS ASWINI .*
*AMIRDHATHI YOGAM ~ AMIRDHA , SIDHDHA YOGAM*.
*NAAMA YOGAM ~ SIDHDHAM NAAMA YOGAM (11.46 AM). AFTERWARDS SAADHYA NAAMA YOGAM*
*KARANAM ~ GARAJAI, VANIJAI.*
*SUN RISE ~ 06.36 AM* *SUN SET ~ 06.07 PM*
*RAGU KAALAM ~ 04.30 ~ 6.00 PM*
*YEMAGANDAM ~ 12.00 ~ 01.30 PM*
*KULIGAI* ~ *03.00 PM ~ 04.30 PM.*
*GOOD TIME ~ 07.30 AM ~ 08.30 AM & 03.30 PM ~ 04.30 PM .*
*CHANDRAASHTAMAM ~ UTHTHIRAM , HASTHAM.*
*SOOLAM ~ WEST* .
*PARIGAARAM ~ JAGGERY*
*TODAY ~* #🙏ஆன்மீகம்
🚨 𝑩𝑹𝑬𝑨𝑲𝑰𝑵𝑮 🚨
Scotland are all set to replace Bangladesh in the T20 World Cup 2026 and join Group C! 🏴🏏
#T20WorldCup #Scotland #🏏 கிரிக்கெட்
*🔯🕉ஶ்ரீராமஜயம்🔯🕉*
*பஞ்சாங்கம் ~ விஸ்வாவஸு ~ தை ~ 10 ~*
*(24/01/2026)*
*1.வருடம் ~ விஸ்வாவஸு வருடம். ( விஸ்வாவஸு நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம் .*
*3.ருது ~ ஹேமந்த ருதௌ.*
*4.மாதம் ~ தை ( மகர மாஸம்)*.
*5.பக்ஷம்*~ *சுக்ல பக்ஷம்.*
*6.திதி ~ ஷஷ்டி.*
*ஸ்ராத்த திதி ~ ஷஷ்டி.*
*7.நாள் ~ சனிக்கிழமை {ஸ்திரவாஸரம் }*
*8.நக்ஷத்திரம் ~ உத்திரட்டாதி பிற்பகல் 01.19 PM வரை. பிறகு ரேவதி*.
*அமிர்தாதி யோகம் ~ சித்த யோகம் பிற்பகல் 01.19 PM வரை . பிறகு சரி இல்லை.*
*நாம யோகம் ~ ஷிவ நாம யோகம் (02.02 PM). பிறகு ஸித்தம் நாம யோகம்.*
*கரணம் ~ கௌலவம் , தைதுலம் .*
*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & 04.30 PM ~ 05.30 PM*
*ராகு காலம் ~ காலை 09.00 ~ 10.30 AM.*
*எமகண்டம் ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.*
*குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM.*
*சூரிய உதயம் ~ காலை 06.36 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.06 PM .*
*சந்திராஷ்டமம் ~ பூரம் , உத்திரம் .*
*. சூலம் ~ கிழக்கு.*
*பரிகாரம் ~ தயிர் .*
*இன்று ~ ஷஷ்டி விரதம் .*🙏🙏
*🔯🕉️SRI RAMAJAYAM🔯️*
*PANCHAANGAM ~ - VISWAVASU ~ THAI ~ 10 ~*
*24/01/2026 - SATURDAY*
*1.YEAR ~ VISWAVASU VARUDAM { NAMA SAMVATHSARAM}*
*2.AYANAM ~ UTHTHARAAYANAM .*
*3.RUTHU ~ HEMANTHA RUTHU.*
*4.MONTH ~ THAI { MAGARA MAASAM}*
*5. PAKSHAM ~ SUKLA PAKSHAM. 6. THITHI ~ SHASHTI. SRAATHTHA THITHI ~ SHASHTI .*
*7.DAY ~ SATURDAY*. *8.NAKSHATHRAM ~ UTHTHIRATTAADHI UPTO 01.19 PM. AFTERWARDS REVATHI .*
*AMIRDHATHI YOGAM ~ SIDHDHA YOGAM UPTO 01.19 PM. AFTERWARDS NOT GOOD .*
*NAMA YOGAM ~ SHIVA NAAMA YOGAM (02.02 PM). AFTERWARDS SIDHDHAM NAAMA YOGAM.*
*KARANAM ~ KAULAVAM , TAIDULAM .*
.*
*RAGU KALAM ~ 09.00 ~ 10.30 AM.*
*YEMAGANDAM ~ 01.30 ~ 03.00 PM.*
*KULIGAI ~ 06.00 ~ 07.30 AM*.
*GOOD TIME ~ 07.30 ~ 08.30 AM & 04.30 PM ~ 05.30 PM*
*SUN RISE ~ 06.36 AM*.
*SUN SET ~ 06.06 PM*
*CHANDRAASHTAMAM ~ POORAM , UTHTHIRAM .*
*SOOLAM ~ EAST*
*PARIGARAM ~ CURD.*
*TODAY ~ SHASHTI UPAVAS* 🙏🙏🙏 #🙏ஆன்மீகம்
Any body can defeat india
Because of these two jokers
Coach is useless
Captain is 🤡 joker #🏏 கிரிக்கெட்
*_மனதை ஒருமுகப்படுத்தும் மாபெரும் ரகசியம்…_*
சிலர் தங்களுடைய மனதை கட்டுப்படுத்த முடியவில்லை..என்று அல்லல்படுவதை காணலாம்..
மனதை கட்டுபடுத்தும் சக்தி என்பது உண்மையில் நம்மிடம்தான் உள்ளது.. வெளியில் எங்கும் இல்லை..
எண்ணத்தின் மதிப்பை உணராதவரை மனம் உங்கள் கட்டுப்பாட்டில் வருவது கடினம்..உங்கள் மதிப்பை உணராத மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை..அதாவது உங்கள் மனம் உங்களையே மதிக்கவில்லை.. அதனால்தான் உங்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை.
யாரவது மதிப்பிற்குரியவர் வந்தால் அவருக்கு நாம் மரியாதை செலுத்துவோம் அல்லவா.. ஆனால்,உங்களின் மனமே உங்களை மதிக்காத பொழுது மற்றவர்களிடம் எப்படி உங்களுக்கு மதிப்பு கிடைக்கும்..
உதாரணமாக உங்கள் கைகளுக்கு சொம்பில் தண்ணீர் எடுக்க உத்தரவு இடுகின்றீர்கள்..அந்த கை அதற்க்கு கீழ் படிந்து எடுப்பதால் அந்த நீரை அருந்தி மகிழ்கின்றீர்கள், ஏனென்றால் நீரின் மதிப்பு தெரிந்திருக்கின்றது அதனால் கை உதவுகின்றது..
அதை போல நல்ல எண்ணங்களின் மதிப்பை உணராதவரை
மனம் நாலாபுறமும் அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.இந்த அலைபாயும் மனதில் வீண் எண்ணங்களும்..
தீய எண்ணங்களும் கட்டுக் கடங்காமல் வரும்.. இதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்மையில் நம்மிடம்தான் இருக்கின்றது..ஒரு பச்சைமிளகாயை வாயின் அருகில் கொண்டு செல்லும்பொழுது மனம் உடனே ப்ரேக் போடுகின்றது..ஏனென்றால் காரம்..மனம் கட்டுப்படவில்லை என்பவர்களுக்கு இது மட்டும் எப்படி கட்டுப்பாட்டில் வருகின்றது..
ஆச்சரியம்.. உதாரணமாக ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்..பொருட்கள் எல்லாம் வாங்கிவிட்ட பிறகு பணத்தை கொடுக்க முற்பட்ட பொழுது பணத்தை காணவில்லை என்றால்..அவர் வீட்டிலிருந்து வந்த வழியே திரும்ப சென்று தேடிக்கொண்டு இருப்பார்..பலர் இடையில் அவரிடம் பேசினாலும் அவருடைய மனம் பணத்திலிருந்து கொஞ்சமும் அசையாது..
அப்பொழுது மனதில் பணத்தின் படம் மட்டுமே தென்பட்டு கொண்டிருக்கும்..ஏனென்றால் பணத்தின் மதிப்பை அவர் உணர்ந்து இருக்கின்றார்.. அதனால் அவருடைய மனம் அதிலிருந்து விடுபட மறுக்கின்றது.. இப்பொழுது மனம் எப்படி கட்டுப்பாட்டில் வந்தது ஆச்சரியமாக உள்ளது அல்லவா?!
சரி அது போகட்டும்.. புதிதாக ஒரு நெக்லஸ் உங்கள் மனைவிக்கு வாங்கி வந்துள்ளீர்கள்.. அதை வீட்டின் வாசலில் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது உங்கள் நண்பர் அவசரமாக செல்லவேண்டும் உடனே வாருங்கள் உங்களிடம் முக்கிய விஷயம் ஒன்று சொல்ல வேண்டும் என்று அழைக்கின்றார்.. வேறு வழியில்லாமல் அந்த நெக்லசை உங்கள் வீட்டு வாசற்படியில் வைத்துவிட்டு உங்கள் நண்பரை பார்க்கசெல்கின்றீர்கள்..
அப்பொழுது உங்கள் நண்பரிடம் நீங்கள் பேசிக்கொண்டு இருந்தாலும் உங்கள் மனம் நகை மீது தானே இருக்கும்..மனதை இப்படி,அப்படி அசைய சொல்லுங்கள் பார்க்கலாம் கண்டிப்பாக அசையாது.. ஏனென்றால் தங்கத்தின் மதிப்பை மனம் அறிந்திருக்கின்றது..அதனால் அது அசைவதில்லை..மதிப்புள்ள ஒரு பொருளை மனம் அறிந்தால் மனம் அதற்க்கு கட்டுப் படுகின்றது எனவே நல்ல எண்ணங்களின் மதிப்பையும்..சுபமான எண்ணங்களின் மதிப்பையும் மனம் அறிந்திருக்கவேண்டும்.. அப்படி இலாத மனம் கடிவாளம் இல்லாத குதிரைபோல ஆகிவிடும்..
கடவுளை நீங்கள் நினைக்க வேண்டுமானாலும் கடவுளின் மதிப்பை அறியாதவரை உங்கள் மனம் அவரிடத்தில் ஈடுபடாது..உங்களின் மதிப்பை அறியாதவரை உங்கள் மனம் உங்களுக்கு கட்டுப்படாது..ஒரு பணியாரக் கல்லை புதிதாக வாங்குபவரே அதை பணியாரம் சுடுவதற்கு பழக்கவேண்டும் என்று சொன்னால்..உங்கள் மனதை எப்படி பழக்கவேண்டும் என்று யோசித்துபாருங்கள்..
மதிப்பை உணர்ந்தவரே மகான் ஆகின்றார்..எனவே உங்கள் ஆத்மாவின் மதிப்பை உணருங்கள்..உங்கள் ஆத்மாவின் தந்தை சிவபரமாத்மாவின் மதிப்பை உணருங்கள்..
இந்த நேரத்தின் மதிப்பை உணருங்கள்..உங்களையும்..
உங்கள் எதிர் காலத்தையும் மதிப்புள்ளதாக இப்பொழுதே மாற்றிக்கொள்ளுங்கள்..
வாழ்த்துக்கள்.✍🏼🌹 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
📢 முதுமையில் தனித்து விடப்படாமல், எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க இப்போதே இதைப் புரிந்து கொள்ளுங்கள்:
🫥⚖️ 01. நிலத் தகராறுகளில் தலையிடாதீர்கள்: பக்கத்து வீட்டுக்காரனுக்கு பாடம் புகட்டுகிறேன் என்று நீதிமன்ற வாசல்களில் தவவம் கிடக்காதீர்கள். வழக்கு முடிவதற்குள் நீங்கள் மண்ணுக்குள் போயிருக்கலாம். நீங்கள் போராடி வென்ற நிலத்தில் நீங்கள் அல்ல, வழக்கறிஞர்களே குடியேறுவார்கள்.
🫥🚗 02. பழைய வாகனங்கள் என்னும் சுமை: ஐந்து லட்சம் லாபம் என்று கருதி "செகண்ட் ஹேண்ட்" வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். சாலையில் ஓடுவதை விட அது கராஜில் இருக்கும் நேரம் அதிகமானால், நெஞ்சுவலி வாகனத்திற்கு அல்ல, உங்களுக்குத்தான் வரும்.
🫥🏠 03. சொத்துக்களை எழுதி வைக்க அவசரப்படாதீர்கள்: பிள்ளைகள் இப்போது "தெய்வங்கள்" போலத் தெரிந்தாலும், கடைசி சதம் வரை சொத்துக்களை எழுதித் தந்த பிறகு, அந்த வீட்டிலேயே நீங்கள் ஒரு "தேவையற்ற பொருளாக" மாறக்கூடும். பிள்ளைகள் கெட்டவர்கள் அல்ல, ஆனால் உலகம் கொடூரமானது. எதையும் கையில் வைத்துக்கொண்டே உயிர் விடுங்கள்.
🫥💰 04. கடைசி சேமிப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: 30 வருடங்கள் உழைத்துச் சேர்த்த ஓய்வூதியத் தொகையை (Pension) பிள்ளைகளின் தொழிலுக்காக கொடுத்துவிடாதீர்கள். இறுதியில் மருந்து வாங்குவதற்கும் அந்த பிள்ளைகளிடமே கையேந்த வேண்டிய நிலை வரலாம்.
🫥☝️ 05. பிள்ளைகளின் வீடுகளில் ஒட்டிக்கொண்டிருக்காதீர்கள்: "நமது பிள்ளைகள்தானே" என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள். அளவுக்கு மிஞ்சி நெருங்கினால் உங்கள் அன்பு அவர்களுக்கு "தொல்லையாக" மாறும். உங்களுக்கென ஒரு சிறு இடத்தைத் தேடிக்கொண்டு சுதந்திரமாக இருங்கள்.
🥰⛰️ 06. யாத்திரை செல்ல பிள்ளைகள் வரும் வரை காத்திருக்காதீர்கள்: "பிள்ளைகளுக்கு லீவு கிடைக்கும்போது என்னை அழைத்துச் செல்வார்கள்" என்று காத்திருக்காதீர்கள். அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது உங்களால் நடக்க முடியாமல் போகலாம். தெம்பு இருக்கும் காலத்திலேயே தனியாகவாவது பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள்.
😋🍲 07. சாப்பிட நினைப்பதை இன்றே சாப்பிடுங்கள்: உங்கள் துணைக்கு (மனைவி/கணவன்) பிடித்தமானதை இன்றே வாங்கிக் கொடுங்கள். இறந்த பிறகு சவப்பெட்டியின் அருகே சோற்றுத் தட்டை வைத்து "அவருக்கு இது ரொம்பப் பிடிக்கும்" என்று அழுவது ஒரு கேலிக்கூத்து!
🥰🛋️ 08. ஓய்வை உருவாக்கிக் கொள்ளுங்கள்: இறக்கும் வரை வேலைகளைக் குவித்து வைத்துக் கொள்ளாதீர்கள். காலை முதல் இரவு வரை ஓடிக்கொண்டே இருந்தால் இறுதியில் நீங்கள் வென்றது எதுவுமே இருக்காது. உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுங்கள்.
☝️✨️😴 09. தூக்கத்தைப் போன்ற மருந்து வேறில்லை: தேவையற்ற தூக்கமின்மையைக் குறைத்து, நிம்மதியாகத் தூங்குங்கள். நீங்கள் நோய்வாய்ப்படும்போது உங்கள் வலியை யாரும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், அதை நீங்கள் தனியாகவே அனுபவிக்க வேண்டும்.
🫥🌘 10. "தனியாக" வந்ததை மறக்காதீர்கள்: யாராவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பைக் குறைக்கப் பழகுங்கள். உங்கள் நிழல் கூட உங்களைக் கைவிடும் ஒரு நாள் வரும். இறப்பதும் தனியாகத்தான், அதனால் தனியாக மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
மகிழ்ச்சி என்பது யாரோ தருவதல்ல, அது நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று! ✨ #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏













