நினைத்தாலே நெஞ்சம் இனிக்குதே
அத்தியாயம் 1 காலை வேளையில், அந்த வீட்டின் தொலைக்காட்சியில் பக்தி பாடல்கள் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது... ஆடாமல் அசையாமல் மலையான கனநாதனே - கற்பக நாதனே…. உனை பாடாத நாளில்லை எனும் சொல்லை பெற வேண்டுமே - கற்பக நாதனே…. யாரும் தேடாமல் தானாக உருவான என் தெய்வமே - கற்பக நாதனே…. என்னும் பாடல் ஒலிக்க, மனம் உருக இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார் விஜயா. அவரின் வேண்டுதல் யாவும் அவரின் மகளுக்காக மட்டுமே…. சாமி கும்பிட்டு முடித்து வந்தவரின் கண்களில் ஈரம்! மகளின் வாழ்வை நினைத்து… “ம்மா…” என்ற மகளின் சத்தத்தில் தன்...