#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏அம்மன் துணை🔱 #📸பக்தி படம் #🙏கோவில் முத்தாரம்மனுக்கு எலுமிச்சை பழ மாலையும், செவ்வரளி மாலையும் மிகவும் உகந்தவையாகும்.
செவ்வாய் தோஷம் நீங்க, செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும்.
ராகு தோஷம் அகல, செவ்வாய்க் கிழமையில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும். எலுமிச்சை பழத்தின் மேற்புறத்தில் துவாரம் செய்து, சாற்றை எடுத்து விட்டு, அதன் உள்ளே சிறிது நெய் ஊற்றி, திரி வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள்.
“அம்மன் அருள் கிடைத்தால், அச்சமெல்லாம் அகலும்;
அவள் திருவடி நினைத்தால், வாழ்வெல்லாம் வளரும்.”
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺