முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது குடும்பத்தாருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் நேரத்தைக் கழிப்பார்கள்.
தொழுகை நேரம் வந்துவிட்டால், உடனடியாகப் பணிகளை நிறுத்திவிட்டு தொழுகைக்காக எழுந்து செல்வார்கள்.
குடும்ப உறுப்பினர்களுக்குப் பணிவிடை செய்வதும், நேரத்திற்குத் தொழுவதும் ஒரு முஸ்லிமின் முக்கியப் பொறுப்பாகும்.
இது ஒரு சிறந்த குடும்ப வாழ்க்கைக்கான முன்மாதிரியாகும். #ய அல்லாஹ் 🤍#இஸ்லாம் மார்க்கம்#🕋ஜும்மா முபாரக்🤲#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்#இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍
“நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, அதை நினைவில் நிறுத்தி அதைப் பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் செழிப்பான வாழ்வை வழங்குவானாக!.
ஏனெனில் (என்னிடமிருந்து) மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர், தம்மை விட அதிக விளக்கமுடைவர்களிடம் அதைச் சேர்த்து வைக்கக்கூடும். மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர் மார்க்க சட்ட அறிஞர் அல்லர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பாளர்: ஸைத் பின் ஸாபித் (ரலி) திர்மிதி 2656 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍#🕋ஜும்மா முபாரக்🤲#ய அல்லாஹ் 🤍#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்#இஸ்லாம் மார்க்கம்
அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவரின் தலைமுடி கொட்டிவிட்டது. எனவே, அவரின் உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஒட்டு முடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான்.
தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)
(புகாரி: 5934) #🕋ஜும்மா முபாரக்🤲#இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍#ய அல்லாஹ் 🤍#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்#இஸ்லாம் மார்க்கம்