Follow
Ayisha💞
@ayishaislam
22,812
Posts
78,364
Followers
Ayisha💞
892 views
1 days ago
💞 அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! ‏ யா அல்லாஹ்! தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்கை மழையாகப் பொழிவாயாக! நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையாக பொழிவாயாக! பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையாகப் பொழிவாயாக! அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையென பொழிவாயாக! யா அல்லாஹ்! நீ விலகியவைகளிலிருந்து நீ ஆகுமாக்கியதைக் கொண்டு எங்களுக்கு போதுமாக்குவயாக! உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்திலிருந்தும் எங்களை தேவையற்றவர்களாக ஆக்குவாயாக! யா அல்லாஹ்! நாங்கள் கவலை துயரம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் காவல் தேடுகிறோம்! இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் ! கடனின் பெருக்கத்திலிருந்தும் மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறோம்! 💞யா அல்லாஹ்! துன்பம் ஏற்படுத்தாத இன்பத்தை உன்னிடம் கேட்கின்றோம்! பற்றாக்குறை ஏற்படுத்தாத தன்னிறைவை உன்னிடம் கேட்கிறோம்! அச்சம் ஏற்படுத்தாத பாதுகாப்பை உன்னிடம் கேட்கிறோம்! கஷ்டம் ஏற்படுத்தாத மனமகிழ்ச்சியை உன்னிடம் கேட்கிறோம்! வறுமையை ஏற்படுத்தாத செல்வத்தை உன்னிடம் கேட்கிறோம்! யா ரஹ்மானே! 💞எங்கள் இறைவா! பசி உள்ள இடத்தில் அன்பையும்! தவறு உள்ள இடத்தில் மன்னிப்பையும்! பிளவு உள்ள இடத்தில் ஒற்றுமையையும்! பிழை உள்ள இடத்தின் திருத்தத்தையும்! ஐயம் உள்ள இடத்தில் பற்றுதலையும்! விரக்தி உள்ள இடத்தில் சாந்தியையும்! இருள் உள்ள இடத்தில் ஒளியையும்! வறுமை உள்ள இடத்தில் செல்வத்தையும்! தீமைகள் உள்ள இடத்தில் நன்மைகளையும்! நோய் உள்ள இடத்தில் ஆரோக்கியத்தையும்! நீ எங்கள்அனைவருக்கும் பரிபூரணமாக வழங்கி அருள் புரிவாயக! யா ரஹ்மான்! 💞யா அல்லாஹ்! வானங்கள், பூமியுடைய கருவூலங்கள் உன்னிடமே இருப்பதாக சொன்ன என் ரப்பே! அல்லாஹ்வே! உன்னுடைய கல்விஞானத்தின் கருவூலத்தை உன்னுடைய நேர்வழிக்கான கருவூலத்தை! உன்னுடைய அருட்கொடைகளின் கருவூலத்தை ! உன்னுடைய நல்வாய்ப்புகளின் கருவூலத்தை! உன்னுடைய ஆரோக்கியத்திற்கான கருவூலத்தை! எங்களுக்குத் திறந்து விடுவாயாக! யா ரஹ்மானே! நீ மாபெரும் கொடையான்! ஆமீன் #🕋யா அல்லாஹ்
Ayisha💞
1.5K views
2 days ago
💞அல்குர்ஆன் கூறும் வெற்றியாளர்களின் சில பண்புகள்! 1- மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள். 2- தொழுகையை கடைப்பிடிப்பார்கள். 3- அல்லாஹ் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள். 4- அல்லாஹ்வின் தூதருக்கு அருளப்பட்ட வேதத்தையும் அவருக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களையும் நம்புவார்கள். 5- இறுதி நாளை உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 2: 3,4,5). 6- மக்களை நன்மையின் பக்கம் அழைப்பார்கள். 7- நன்மையை ஏவுவார்கள். 8- தீயதை விட்டு மக்களைத் தடுப்பார்கள். (அல்குர்ஆன் 3: 104). 9- நன்மையின் எடை கனத்தவர்கள். (அல்குர்ஆன் 23: 102). 10- இறுதித் தூதரை உண்மையாகவே நம்பியவர்கள். 11- அவரை கண்ணியப்படுத்தியவர்கள். 12- அவருக்கு உதவி செய்தவர்கள். 13- அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தை பின் பற்றியவர்கள். (அல்குர்ஆன் 7: 157). 14- தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து அல்லாஹ்வின் வழியில் போர் புரிபவர்கள். (அல்குர்ஆன் 9: 88) 15- அல்லாஹ்வினதும், அவனது தூரினதும் தீர்ப்புக்கு செவியேற்றுக் கட்டுப்பட்டவர்கள். (அல்குர்ஆன் 24: 51) 16- அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்கள். (அல்குர்ஆன் 24: 52) 17- இறை திருப்திக்காக உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்துதவுபவர்கள் (அல்குர்ஆன் 30: 38) 18- தொழுகையை கடைப்பிடிப்பார்கள். 19- அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள். 20- இறுதி நாளை உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 31: 4,5). 21- அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட இவர்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே. (அல்குர்ஆன் 58: 22). 22- உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டவர்கள். )அல்குர்ஆன் 59: 09). (அல்குர்ஆன் 64: 16). 23- இறை நம்பிக்கை கொண்டவர்கள். 24-ஹிஜ்ரத் செய்தவர்கள். 25- தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தவர்கள். (அல்குர்ஆன் 9: 20) 26- பொறுமையாளர்கள். (அல்குர்ஆன் 23:111 27- தொழுகையை உள்ளச்சத்தோடு தொழுவார்கள். 28- வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 29- ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள். 30- தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். 31- தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். 32- தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (அல்குர்ஆன் 23:1-9 33- தங்கள் ஆத்மாவைப் பரிசுத்தமாக்கிக் கொண்டவர்கள். (அல்குர்ஆன் 90: 9 #🕋யா அல்லாஹ்
Ayisha💞
487 views
3 days ago
💞யா அல்லாஹ்! நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களில் ஒருவராக எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ யாருக்கு ஆரோக்கியமளித்தாயோ அவர்களில் ஒருவராக எனக்கும் ஆரோக்கியத்தை அளிப்பாயாக! நீ யாருக்கு பொறுப்பேற்றுக்கொண்டாயோ அவர்களில் ஒருவராக எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ கொடுத்தவற்றில் பரக்கத்-அபிவிருத்தி செய்வாயாக! நீ விதித்த விதியின் தீங்கிலிருந்து எங்களைக் காப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிக்கிறாய். உனக்கு மாற்றமாக தீர்ப்பளிக்கப்படுவதில்லை! நீ யாரை நேசித்தாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள்! இறைவா! உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம் இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு வெற்றியையும், உயர்வையும் தந்தருள்வாயாக! யா ரஹ்மானே! #🕋யா அல்லாஹ்
Ayisha💞
3K views
4 days ago
💞 அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! எங்கள் இறைவா! எங்களுடைய இந்த காலை நேரத்தை பரக்கத்தானதாகவும், நன்மைக்கு நெருக்கமானதாகவும், தீமையை விட்டும் தூரமானதாகவும் ஆக்கியருள்வாயாக! யா அல்லாஹ் நஷ்டமும் கவலையும் துர்பாக்கியம் உடையதாக ஆக்கிவிடாதே! யா அல்லாஹ் எங்களுடைய இந்த நாளின் ஆரம்பத்தை சீரானதாகவும், இதன் நடுப்பகுதியை ஈடேற்றம்முடையதாகவும், இலாபகரமானதாகவும் ஆக்கியருள்வாயாக! யா அல்லாஹ்! உன்னிலிருந்துமுள்ள திருப்பொருத்தின் காலையாக இந்த காலை நேரத்தை ஆக்கியருள்வாயாக! உன் விதிப்பில் உண்டான தீங்கை விட்டு எங்களை நீ காத்தருள்வாயாகா! குற்றங்களின் காரணமாக எங்களை நீ வேதனைப்படுத்திவிடாதே, கொடையானே! அருளாளனே! எங்கள் இறைவா! எங்களின் இந்த காலை நேரத்தை நல்லோர்களின் காலை நேரமாகவும், எங்களின் மாலை நேரத்தை உன்னை திக்ரு செய்பவர்களின் மாலை நேரமாகவும், எங்களின் உள்ளங்களை உன்னை பயப்படுவோரின் உள்ளங்களாகவும், எங்களின் சரீரங்களை உனக்கு வழிபடுவோரின் சரீரங்களாகவும், எங்களின் அமல்களை முத்தகீன்களுடையா அமல்களாகவும், எங்களுடைய நாவுகளை திக்ரு செய்பவர்களின் நாவுகளாகவும், ஆக்கியருள்வாயாக! மேலும் மறதியாளர்களின் தூக்கத்தை விட்டு எங்களை விழிப்படையச் செய்வாயாக! நல்லோர்களின் துஆவில் எங்களை இணைத்தருள்வாயாகா! அகிலத்தார்களை இரட்சித்துக் காப்பாற்றுபவனே! சொர்க்கத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! எங்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர், தோழர்கள் அனைவரின் மீதும் எங்களின் மீதும் அல்லாஹ் ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்திடுவானாகா! அகில உலகங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானவையாகும். ஆமீன்! ஆமீன்! ஆமீன் #📗குர்ஆன் பொன்மொழிகள்
Ayisha💞
615 views
4 days ago
💞அழகிய நினைவூட்டல்! இன்று அமல்கள் உண்டு விசாரணை இல்லை! நாளை மறுமையில் விசாரணை உண்டு அமல்கள் இல்லை! நல் அமல்களை செய்து நன்மைகளைக் கொண்டு நம்முடைய மண்ணறையை அலங்கரிப்போம்! அறிவாளிகள் அல்குர்ஆனைக் கொண்டு தன் மண்ணரையை அழகாக்கி கொள்வார்கள் அப்படிப்பட்ட அறிவாளிகளாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக! யா அல்லாஹ்! மண்ணறையில் மணமகளாய் மணமகனாய் எங்களை உறங்க செய்வாயாக யா ரஹ்மானே! #🕌இஸ்லாம்
Ayisha💞
3.3K views
4 days ago
💞யா அல்லாஹ்! நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களில் ஒருவராக எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ யாருக்கு ஆரோக்கியமளித்தாயோ அவர்களில் ஒருவராக எனக்கும் ஆரோக்கியத்தை அளிப்பாயாக! நீ யாருக்கு பொறுப்பேற்றுக்கொண்டாயோ அவர்களில் ஒருவராக எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ கொடுத்தவற்றில் பரக்கத்-அபிவிருத்தி செய்வாயாக! நீ விதித்த விதியின் தீங்கிலிருந்து எங்களைக் காப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிக்கிறாய். உனக்கு மாற்றமாக தீர்ப்பளிக்கப்படுவதில்லை! நீ யாரை நேசித்தாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள்! இறைவா! உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம் இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு வெற்றியையும், உயர்வையும் தந்தருள்வாயாக! யா ரஹ்மானே! #🕋யா அல்லாஹ்
Ayisha💞
1.1K views
7 days ago
💞 நபிமொழி! அத்தஹியாத்து ஸலவாத்துக்கு பின் ஓதவேண்டிய துஆ! அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மின் அதாபி ஜஹன்னம், வ மின் அதாபில் கப்ர், வ மின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வ மின் ஷர்ரி ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால்! யா அல்லாஹ்! நரக வேதனை, மண்ணறை வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்! (ஆதார நூல்: ஸஹீஹ் முஸ்லிம்) #🕌இஸ்லாம்
Ayisha💞
1.3K views
7 days ago
💞மனிதர்களின் நேசத்தை விட இறைவனின் நேசம் மேலானது தான் விரும்பக் கூடிய குழந்தையை ஒரு தந்தை எப்பொழுதும் கைவிடுவதில்லை! தான் விரும்பக்கூடிய குழந்தையை ஒரு தாய் எப்பொழுதும் கைவிடுவதில்லை! தான் விரும்பக் கூடிய மாணவனை ஒரு ஆசிரியர் எப்பொழுதும் கைவிடுவதில்லை! மனிதர்களின் நேசத்தை விட இறைவனின் நேசம் மேலானது! இறைவனின் நேசத்தை பெற்றவர்கள் பாக்கியவான்கள்! அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால்! அல்லாஹ் ஒரு அடிமையை விரும்பினால்! அல்லாஹ் அவன் படைத்த படைப்புகளில் ஒரு மனிதனை அல்லாஹ் நேசித்தால்! எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் அல்லாஹ் அந்த அடியானை கை விடமாட்டான்! எல்லையில்லாத அன்பு, அழியாத அன்பு, நிலையான அன்பு, அல்லாஹ்வின் பேரன்பு மட்டுமே! #🕋யா அல்லாஹ்
Ayisha💞
1.4K views
9 days ago
💞 நபிமொழி! ஒரு அடியான் ஸஜ்தாவில் இருக்கும் போது அவனுடைய இறைவனுக்கு மிக அருகில் இருப்பான். எனவே ஸஜ்தாச் செய்யும் போது பிரார்த்தனைகளை அதிகப்படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். [முஸ்லிம் #🕋யா அல்லாஹ்