Follow
Ayisha💞
@ayishaislam
22,817
Posts
77,420
Followers
Ayisha💞
1.7K views
21 hours ago
💞 இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் கூறும் அழகிய ஆறுதல் வார்த்தைகள்..! 💞தனிமையில் இருக்கும் போது! நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் 57 : 4 💞சோதிக்கப் படுவதாக உணரும் போது! அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை அல்குர்ஆன் 2 : 286 💞பொறுமையை இழக்கும் போது! (பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள் அல்குர்ஆன் 39 : 10 💞கைவிடப்பட்டதாக உணரும் போது! உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. அல்குர்ஆன் 93:3 💞துன்பத்தில் இருக்கும் போது! நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. அல்குர்ஆன் 94 : 6 💞எனக்கென எதுவும் இல்லை என்று என்னும் போது! உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான் அப்பொழுது நீர் திருப்தியடைவீர் 93 : 5 💞கவலையில் இருக்கும் போது! கவலைப்படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் அல்குர்ஆன் 9 : 40 #🕋யா அல்லாஹ்
Ayisha💞
4.7K views
2 days ago
💞 அல்லாஹ் மாபெரும் கருணையாளன்! நாம் எதிர்பார்க்காத ஒன்றை! நாம் எதிர்பார்க்காத முறையில்! நாம் எதிர்பார்க்காத நேரத்தில்! நாம் எதிர்பார்க்காத விதத்தில்! செயல்படுத்தும் ஆற்றலுள்ளவன்! அல்லாஹ் ஒருவன் மட்டுமே ☝️ நாம் அவனிடமே அடைக்கலம் ஆகுவோம் அவன் அளவற்ற அருளாளன்! நிகரற்ற அன்புடையோன்! #🕋யா அல்லாஹ்
Ayisha💞
5.7K views
4 days ago
💞யா அல்லாஹ்! எந்த பிள்ளைகளின் நற்செயலால் பெற்றோர்கள் சுவனம் செல்வார்களோ அப்படிப்பட்ட பிள்ளைகளாக எங்கள் பிள்ளைகளையும் ஆக்கி அருள்வாயாக யா ரஹ்மானே! #🕋யா அல்லாஹ்
Ayisha💞
12.9K views
5 days ago
💞அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சிய நலன்கள்! யா அல்லாஹ்! கோரிக்கைகளில் சிறந்ததை!, துஆக்களில் சிறந்ததை! உயர்ந்த வெற்றியை! நேர்த்தியான அமலை! மேலான நற் கூலியை! நல்வாழ்வை, நல்மரணத்தை உன்னிடம் வேண்டுகிறேன்! என்னை உறுதியோடு நிற்கச் செய்வாயாக! எனது நன்மையின் தட்டையைக் கனமாக்குவாயாக! எனது ஈமானை வலுவாக்குவாயாக! எனது பதவியை உயர்த்துவாயாக! எனது தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக! என் பிழையைப் பொறுத்தருள்வாயாக! உன்னிடம் சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்! யா அல்லாஹ்! நான் உன்னிடம் நல்லதொடக்கத்தையும், அதனுடைய நல்ல முடிவுகளையும், அவற்றை ஒன்று திரட்டி தருபவைகளையும் அவற்றில் ஆரம்பமானதையும், அவற்றின் இறுதியையும், புறத்துள்ளவற்றையும், அகத்தில் உள்ளவற்றையும் கேட்கிறேன்! உன்னிடம் சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்! யா அல்லாஹ்! உறுப்புகளால் புரியும் காரியங்களின் நலன்களையும்! இதயத்தால் எண்ணும் செயல்களின் நலன்களையும்! நான் செய்யும் மற்ற அமல்களின் நலன்களையும்! என் செயல்களின் நலன்களையும்! அகத்திலுள்ளவற்றின் நலன்களையும்! புறத்திலுள்ளவற்றின் நலன்களையும்! சுவனத்தின் உயர்பதவிகளையும் கேட்கிறேன்! யா அல்லாஹ்! உன்னிடம் என் பெயரை உயர்த்தும் படியும், என் பாவச்சுமைகளை என் முதுகிலிருந்து இறக்கிவிடுவதையும், என் விவகாரங்களை சீர்படுத்துவதையும், என் இதயத்தைத் தூய்மையாக்குவதையும், என் கற்பொழுக்கத்தை பாதுகாப்பதையும், என் கப்ரை ஒளியாக்குவதையும் உன்னிடம் வேண்டுகிறேன்! மேலும், சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்! யா அல்லாஹ்! நான் உன்னிடம் என் செவி, என் பார்வை, என் உயிர், என் உடல், என் குணம், என் குடும்பம், என் செல்வம், என் வாழ்வு, என் மரணம், என் செயல் இவையனைத்திலும் நீ பரக்கத் செய்ய வேண்டும் என்று கேட்கிறேன்! மேலும், சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்.(ஹாகிம்) அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹபிஹி அஜ்மயீன். வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஆமீன். #🕋யா அல்லாஹ்
Ayisha💞
1K views
8 days ago
💞நபிமொழி! நபி ஸல் அவர்கள் கேட்ட துஆ! اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் ஸவாலி நிஃமதி(க்)க வதஹவ்வுலி ஆபி[F]ய(த்)தி(க்)க வபு[F]ஜாஅதி நிக்ம(த்)தி(க்)க வஜமீஇ ஸகதி(க்)க இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்! ஆதாரம்: முஸ்லிம்-5289 (4922) #🕋யா அல்லாஹ்