*#பாவங்கள்எண்ணப்படாமல்போதல் #பரமஅழைப்பு #கிறிஸ்துவின்மீதானவிசுவாசம் #இலவசகிருபையாகநீதி #நீசம்பாதிக்கவில்லை #ஒருவித்தியாசமானநீதி #நிஜநீதிமான்அல்ல #நீதிமான்எனகருதப்படுபவர் #ஆபிரகாம்*
ஒருவர் நீதிமான் ஆக கருதப்படுதல் என்பது தேவனின் கிருபை என்று வலியுறுத்துகிறார் அப்போஸ்தலர் பவுல்:
'ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
அந்தப்படி, *கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தை* காண்பிக்கும் பொருட்டு,
'எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். *எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்,'* என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
நம்முடைய கர்த்தராகிய *இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.*
அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
இவ்விதமாக, *நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,* நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
அவர்மூலமாய் நாம் இந்தக் *கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று* நிலைகொள்கிறோம்.'
ரோமர் 4:5-8, 24-25; 5:1-2.
அடுத்த கேள்வி: கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தபின்பும் மாம்சத்தில் நாம் பாவம் செய்துகொண்டுதான் இருப்போமா?
#🙏ஆன்மீகம் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன்