ஃபாலோவ்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
@mei_kristhavam
390
போஸ்ட்
189
பின்தொடர்பவர்கள்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
511 காட்சிகள்
3 மணி நேரத்துக்கு முன்
*#நாட்டாமை* பவுல் எழுதுகிறார்: "பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன் சரியாக நடந்து கொள்ளாததால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே பேதுரு புறஜாதியாருடனே சாப்பிட்டான். அவர்கள் வந்தபோதோ, *[பாவ போராட்டம் செய்து நியாயப்பிரமாணம் கடைப்பிடித்து நல்லவர்கள் ஆக முயலும்] விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து விலகிப் பிரிந்தான். மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்.* அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது என்னவென்றால்: 'யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர்முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்? புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் [பாவப் போராட்ட] கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். *நியாயப்பிரமாணத்தின் [பாவத்தை எதிர்த்து போராடி நல்லவனாகும்] கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.* தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேன். கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். *நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது [பாவத்தை எதிர்த்து போராடி நல்லவனாகும்] நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே."* கலாத்தியர் 2:11-21. #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
451 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
இயேசு, "பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் #தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். அது பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கும்," என்றார். மத்தேயு24:15. ஆம், தானியேல் 11ஆம் அதிகாரத்தில் சரித்திரம் மிக விவரமாக முன்னறிவிக்கப்பட்டது. மாவீரன் #அலெக்சாண்டர் உட்பட, இஸ்ரவேல் நாட்டிற்கு வடக்கிலும் தெற்கிலும் உருவாகின #பேரரசர்கள் எப்படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தானியேல் 11:31இல் தொடங்கி அதிகாரம் முடியும்வரை, இயேசு சொன்ன பாழாக்கும் அருவருப்பை நிறுவும் 2தெசலோனிக்கேயர் 2:3-4இல் பவுல் குறிப்பிடும் கேட்டின் மகனாகிய அந்திக்கிறிஸ்து (அரசியல் அதிகாரம் கொண்டு ஆட்சி செய்த #போப்பாண்டத்துவம்) பற்றியும், அதன் கொடுங்கொலாட்சியை முடித்து வைத்த மாவீரன் #நெப்போலியன் பற்றியும் தீர்க்கதரிசன வார்த்தைகள் சொல்லப்பட்டு உள்ளன. ஆம், வேதாகமம் மனித சரித்திரத்தை துல்லியமான முறையில் முன்னறிவிப்பு செய்துள்ளது. தேவனுக்கு மகிமை உண்டாவதாக! #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
593 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
*#startrek #captain #கேப்டன்* 'நரகம்' ஒரிஜினல் பைபிளில் இல்லை. கல்லறை என்கிற 'ஷியோல்' வார்த்தையும், 'கெஹன்னா' என்ற எருசலேமின் குப்பையெரிக்கும் பேட்டைப்பெயரும் 'நரகம்' என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மக்களை பயமுறுத்தி ஆள்வதற்கு இடைக்கால போப்பாண்டவர்கள் செய்த வஞ்சனை. *#உண்மை* செத்தோர் யாவரும் ஷியோல் (கல்லறை) செல்வர். இராஜ்யம் வரும்போது உயிர்த்தெழுவர். உயிர்த்தெழுந்தோர்க்கு இயேசுவும் அவரைப் பின்பற்றியோரும் நீதி கற்றுக்கொடுப்பர். அப்போதும் கீழ்ப்படியாதார் கெஹன்னாவில் அழிவர். #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
566 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
*#தேசங்களின்சந்ததிகள் #யாவேதேவனிடம்திரும்பும் #பரலோகத்தின்இராஜ்யம் #மறுசீரமைப்பின்யுகம் #முழுஅரசாதிக்கத்தின்யுகம் #பூமியின்எல்லைகள் #உம்இராஜ்யம்வருவதாக* கிறிஸ்துவின் *இராஜ்யத்தில் எவ்விதமான சீரமைக்கப்பட்ட வாழ்க்கையை மனுக்குலம் திரும்பப்பெரும்?* அப்போஸ்தலர் பேதுரு கூறுவதுபோல், *கிறிஸ்துவின் இராஜ்யமானது ஒரு மறுசீரமைப்பின் காலமாகும்.* அக்காலம் குறித்து *தீர்க்கதரிசிகள் (ஏசாயா, எரேமியா, மீகா, தானியேல் போன்றோர்)* விளக்கமாய் எடுத்துரைத்திருக்கிறார்கள் (அப்போஸ்தலர் 3:19-20). *ஆம், அது ஒரு மகா மறுசீரமைப்பின் யுகமாக விளங்கும்!* *முழுமையான அரசாதிக்கம்:* பூமியின் *அனைத்து தேசங்கள் மேலும்* கிறிஸ்து முழுமையான கட்டுப்பாடும், இறையாண்மை ஆதிக்கமும் செலுத்துவார் - *ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்வரைக்கும்* அவர் [கிறிஸ்து] அரசாளுவார். ஆம், *சகல இராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள், சகல தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.* சங்கீதம் 72: 8-11. *பூமியின் எல்லைகளெல்லாம்* நினைவுகூர்ந்து யாவே தேவனிடம் [கர்த்தரிடம்] திரும்பும்; தேசங்களுடையுய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். இராஜ்யம் கர்த்தருடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர். சங்கீதம் 22:27-28. ஆம், பூமியின் எல்லா தேசங்களும் கிறிஸ்துவின் இராஜ்யத்தின் முழுமையான ஆட்சிக்கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். அடுத்த கேள்வி: மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு என்றால் என்ன? ஆயிரம் வருட அரசாட்சியின் முடிவில் என்னதான் நடக்கும்? #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
8.6K காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
*#கண்ட்ரோல்தரும்ஆவி #ஒழுங்கின்மையின்தேவன்அல்ல #கலகத்தின்தேவன்அல்ல #கட்டுக்கடங்காமை #இன்றுநடக்கும்அற்புதங்கள் #கடவுள்செய்வதுஅல்ல #மேட்ரிக்ஸ்* *#பரிசுத்தஆவியின்அதிசயவரங்கள் #முன்னறிவித்ததுபோலவேவரம்நின்றுபோனது #வரம்நின்றுபோனதுகிபி150 #பரிசுத்தஆவியின்அபிஷேகம் #பரமஅழைப்பு* தேவனின் *இராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கிற வேலையை அச்சமின்றி செய்ய திருச்சபைக்கு பரிசுத்த ஆவி தெம்பு அளிக்கிறது* (அப்போஸ்தலர் 2:8-11; 4:31). முதலாம் நூற்றாண்டில் திருச்சபையார் கிறிஸ்துவின் இராஜ்ய நற்செய்தியை உலகமெங்கும் பரப்பும் பொருட்டு, அந்த செய்தியை நிரூபிக்க (குணமளித்தல், வேற்று மக்கள் பாஷை பேசுதல் போன்ற) சக்திவாய்ந்த அடையாளங்கள் செய்ய, *அந்த காலத்தில் திருச்சபைக்கு ஆவியின் விசேஷித்த அதிசய வரங்களை தேவன் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மூலம் கொடுத்தார்* (1 கொரிந்தியர் 12:8-10). வேதாகமம் (1 கொரி 13:8) முன்னறிவித்தது போலவே, அப்போஸ்தலர்கள் எல்லாரும் இறந்தபின், *2-ஆம் நூற்றாண்டிற்குள் அதிசய வரங்கள் யாவும் நின்றுபோயின.* விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய இம்மூன்று வரங்களே இன்றளவும் நிலைக்கும் ஆவியின் வரங்கள் என்று பவுல் எழுதுகிறார் (1கொரி 13:13). அதிசய வரங்கள் யாவும் 2-ஆம் நூற்றாண்டோடு நின்றுபோயின என்றால், *இன்றைய பெந்தெகொஸ்தே சபைகளில் செய்யப்படும் அற்புதங்கள் எல்லாம் தேவனால் நடப்பது அல்ல என்பதும் சாத்தானே அவற்றின் பின் இருக்க முடியும் என்பதும் புரிகிறது." ‘அது *ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே' (2கொரிந்தியர் 11:14).* இப்படிப்பட்ட அற்புதங்களை தன் பெயரில் செய்வார்கள் என இயேசு முன்னறிவித்தார் (மத்தேயு 7:22-23). அப்படி நடக்கையில் சாத்தானின் முடிவு நெருங்கிவிட்டது என்பதை புரிந்து கொள்ளலாம் என்றார் (மாற்கு 3:23-26). *சாத்தான் 2000 வருடங்களாக தன்னுடைய எல்லாவித தந்திரங்களையும் நடப்பித்து முடித்துவிட்டான்.* தற்போது இயேசுவின் பெயரில் அற்புதங்கள் செய்து மக்களை தவறாக திசைதிருப்ப ஒரு *கடைசி சூழ்ச்சியில் இறங்கியுள்ளான்.* இந்த அற்புதங்கள் உண்மையில் சாத்தானிடமிருந்துதான் வருகின்றன என்பதை தெளிவாக காட்டும் வேறு விசயங்கள் உள்ளனவா? அப்போஸ்தலர் பவுல் *சபைகளில் அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாவிட்டால் அந்நியபாஷை பேசக்கூடாது என்கிறார்.* ஏனெனில் அவிசுவாசிகள் யாரேனும் உள்ள நுழைந்து சபையார் *அர்த்தமற்ற சொற்களை உளறிக்கொண்டிருப்பதை கண்டால் அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்துவிடுவார்கள் என்கிறார் (1கொரிந்தியர் 14:6-28).* தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம். *தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்." 1கொரிந்தியர் 14:29-33.* சபைகளில் நிதானமும், ஒழுங்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிறார். ஏனென்றால் நம் "தேவன் கலகத்திற்கு தேவனாயிரார்." "தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே," என்கிறார் பவுல். *ஆம், மெய்யான தேவன் அளிக்கும் வரங்களினால் யாரும் சுய கட்டுப்பாட்டை இழப்பதில்லை!* அவர் சபையில் அனைவரும் ஒவ்வொருவராக தங்கள் முறை வரும்போது பேசவேண்டும் என்றும், எல்லாரும் ஒரே நேரத்தில் கத்திக்கொண்டு இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். சரி, *இன்றைய பெந்தெகொஸ்தே சபைகளில் ஒன்றிற்கு நாம் சென்றோமானால், என்ன காண்கிறோம்? - மக்கள் அந்நிய பாஷை பேசுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அர்த்தமற்ற சொற்களை உளறுவதையும், ஒரே நேரத்தில் பலர் இரைச்சல் போடுவதையும், சுய கட்டுப்பாடு இல்லாத ஆட்டங்களையும், இவ்வகையான பல கூத்துக்களையும் பார்க்கிறோம். என்னவொரு ஒழுங்கற்ற கலகமான காட்சி! கலகத்தின் தேவன் யார் என சற்று சிந்தியுங்கள்? ஆம் உண்மையில் அது சாத்தான் தான். இவை எல்லாம் அவனுடைய வல்லமையின் பயன்களே!* நிச்சயம் பரிசுத்த ஆவியின் வல்லமையின் பயன்கள் அல்ல. அடுத்த கேள்வி: 'அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.' மத்தேயு 3:11. அக்கினியினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் என்றால் என்ன? #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
829 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
*#பரியாசக்காரர்* இயேசு தான் எல்லா மனிதரையும் சாவிலிருந்து மீட்டு உயிரோடு எழுப்புவேன் என்று அறிவித்த பொழுது *பெரும்பாலான மக்கள் அதனை நம்ப மறுத்தனர். இன்றும் கூட அதே நிலைமை தான்.* மனிதர் எல்லாரும் உயிரோடு எழுந்தால் நிறைய பிரச்சனைகளும், கடினமான சூழ்நிலைகளும் வரும் என்று காண்பிக்க அம்மக்கள் பலவித கேள்விகளை எழுப்பினர். இன்றும் கூட எழுப்புகிறார்கள். ஆனால், வேதாகமம் சொல்வது போல, தேவன் மனிதனின் மனதில் நித்தியத்தை வைத்துள்ளார் (பிரசங்கி3:11). நாம் *எல்லாரும் மனதில் ஏதோ ஒரு மூலையிலாவது நித்தியமாக வாழும் ஆசை கொண்டுதான் இருக்கிறோம். அதைவிட நமது அன்பிற்குரியவர்களுக்கு அது நடக்க வேண்டும் என்று நாம் நிச்சயம் ஏங்குகிறோம்.* அது எப்படி சாத்தியப்படும், அதனால் எழும் எல்லா சூழ்நிலைகளும் எப்படி சரிப்படுத்தப்படும் என்று நமது சிறு மூளைகளுக்கு எட்டாவிட்டாலும் (மத்தேயு22:23-33, அப்போஸ்தலர்17:32), நாம் அதற்காக ஏங்கத்தான் செய்கிறோம். அப்போஸ்தலர் பவுல் நமக்கு சொல்கிறார், "மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? அப்படியென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. #மீட்பு ஓர் மனுஷனால் (ஆதாமினால்) மரணம் உண்டானபடியால், ஓர் மனுஷனால் (கிறிஸ்துவினால்) மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. #வருங்காலம் எல்லாரும் ஆதாமினால் மரிக்கிறதுபோல, எல்லாரும் கிறிஸ்துவினால் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." 1கொரிந்தியர்15:12-22. #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
542 காட்சிகள்
7 நாட்களுக்கு முன்
#spidey #குழப்பமில்லைநண்பா "ஒரே மனுஷனாலே (ஆதாம்) பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாயிருக்கிறார். எல்லாரையும் மீட்கும்பொருளாக கிறிஸ்து இயேசு தம்மை ஒப்புக்கொடுத்தார். ஓர் மனுஷனால் மரணம் உண்டானபடியால், ஓர் மனுஷனால் (கிறிஸ்து) மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." 1கொரிந்தியர்15:21-22, ரோமர்5:12, 1தீமோ2:4-6. #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
8.1K காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
*#சின்னசின்னஆசை* 'நரகம்' ஒரிஜினல் பைபிளில் இல்லை. கல்லறை என்கிற எபிரேய 'ஷியோல்' வார்த்தையும், 'கெஹன்னா' என்ற கிரேக்க வார்த்தையும் 'நரகம்' என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'கெஹன்னா' நரகம் என்றால் நாம் விமான டிக்கெட் எடுத்து அங்கே செல்ல முடியும்! ஆம், அது ஒரு நிஜ இடம். எருசலேம் மாநகரின் குப்பையெரிக்கும் பேட்டையின் பெயர்தான் கெஹன்னா. இயேசு, 'கெஹன்னாவில் எரியும் தீ' என்று சொல்வது ஒரு சென்னை நகரவாசி 'சைதாப்பேட்டையில் எரியும் தீ' என்று சொல்வதுபோல்தான்! இயேசுநாதர் நரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. இது மக்களை பயமுறுத்தி ஆள்வதற்கு இடைக்கால போப்பாண்டவர்கள் செய்த வஞ்சனை. *#மெய்கிறிஸ்தவம்பழகு* செத்தோர் யாவரும் "ஷியோல்" (கல்லறை) செல்வர். இயேசு ஆதாமிற்கு பதிலாக தன்னுயிரை கிரயமாக கொடுத்ததால், அவரது இராஜ்யம் வரும்போது ஆதாமின் வம்சம் (மனிதர் அனைவரும்!) உயிர்த்தெழுவர். ஆம், இழந்துபோன அன்பிற்குரியவர்களை அனைவரும் மீண்டும் சந்திப்பர்! *#இராஜ்யம்* இயேசுவும் அவரைப் பின்பற்றியோரும் செங்கோல் ஆட்சி செய்து, உயிர்த்தெழுந்த மனுக்குலத்திற்கு நீதி கற்றுக்கொடுப்பர். அப்போதும் கீழ்ப்படியாதார் (அக்கினி கடல் உவமை குறிக்கும்) "கெஹன்னா"வில் இரண்டாம் மரணம் அடைவர். #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
524 காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
*#வடிவேலு* இயேசு, "சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்," என்றார். ஆம், "வானங்களைச் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தர், பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகப் படைத்து உருவேற்படுத்தினார். பூமி என்றைக்கும் நிலைத்திருக்கிறது." ஏசாயா45:18, பிரசங்கி1:4. *#வரவிருக்கும்இராஜ்யம்* இயேசு பரலோகத்திலிருந்து பூமி திரும்பும்போது தீர்க்கதரிசிகள் உரைத்தபடி தேவன் எல்லாவற்றையும் மறுசீரமைப்பு செய்வார். இயேசு ஆதாமிற்கு பதில் தன்னுயிர் கிரயமாக கொடுத்ததால், ஆதாமினால் மரணம் அடையும் மனுக்குலம் அனைத்தும் இயேசு பூமி திரும்புகையில் பூமியில் உயிர்த்தெழும்! [1தீமோ2:4-6, 1கொரி15:21-22] ஆம், பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய மரித்தோர் விழித்து எழுந்திருப்பார்கள். நியாயத்தீர்ப்பின் காலமாகிய ஆயிர வருட இராஜ்யத்தில் [உயிர்த்தெழுந்த] பூமியின் குடிகள் நீதி கற்றுக்கொள்வர். இயேசு தன்னைப் பின்பற்றியோர் தம்முடன் அரியணை வீற்றிருக்க, உயிர்த்தெழுந்த மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார் [தானியேல்12:2, அப்போஸ்தலர்3:21, ஏசாயா26:9, வெளி2:26-27]. நீதி கற்றுக்கொண்டபின் அவர்கள் சோதிக்கப்படுவார்கள் [வெளி20:3]. அதில் தேறுபவர்கள் பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் [மத்தேயு25:34]. #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴