Follow
சுப்புராம் முத்துராஜ்
@obcvnrwest
16,557
Posts
14,917
Followers
சுப்புராம் முத்துராஜ்
436 views
6 days ago
१.८ लाख व्ह्यू · ७.५ ह प्रतिक्रिया | 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐍𝐀 𝐢𝐧 𝐒𝐨𝐮𝐭𝐡𝐞𝐫𝐧 𝐓𝐡𝐚𝐢𝐥𝐚𝐧𝐝? 🤔 தென் தாய்லாந்து மக்களிடம் தமிழர் DNA? 🤔 தாய்லாந்தைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் திரு. தனபதி வருன்ஸ்ரீ தனது ஆய்வின் மூலம், தென் தாய்லாந்து மக்களுக்கும் பண்டைய தமிழ் வணிகர்களுக்கும் இடையிலான தொடர்பை DNA ஆய்வுகள், தொல்லியல் ஆதாரங்கள் மற்றும் கல்வெட்டுகள் மூலம் விளக்குகிறார். பெரும்பத்தன் உரைக்கல், தக்குவா பா கல்வெட்டு, பெட்சபுரி தங்க மோதிரம், தமிழ் வணிகர்கள், கடல் வணிகம், DNA ஆய்வுகள் என பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன. வரலாற்றை விரும்பும் அனைவரும் இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்! In this video, Thai historian and independent archaeology researcher Mr. Thanabodee Waroonsri explains his research on the connections between ancient Tamil merchants and the people of southern Thailand through DNA studies, archaeological discoveries, and ancient inscriptions. The discussion covers the Perumpaththan touchstone, the Takuapa Tamil inscription, the Phetchaburi gold ring, ancient maritime trade, and the possible long-term presence of Tamil merchant communities in southern Thailand. Watch the full video and explore this fascinating chapter of shared history. #TamilHistory #AncientTamil #TamilTraders #TamilDNA #DNAResearch #Archaeology #TamilInscriptions #Thailand #SouthernThailand #AncientTrade #IndianOceanTrade #Phetchaburi #Takuapa #தமிழர்வரலாறு #தமிழ்வணிகர்கள் #தமிழ்கல்வெட்டு #தொல்லியல் #தாய்லாந்து #அளர்வைரதன் #CHAAR | CHAAR
𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐍𝐀 𝐢𝐧 𝐒𝐨𝐮𝐭𝐡𝐞𝐫𝐧 𝐓𝐡𝐚𝐢𝐥𝐚𝐧𝐝? 🤔 தென் தாய்லாந்து மக்களிடம் தமிழர் DNA? 🤔 தாய்லாந்தைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் திரு. தனபதி வருன்ஸ்ரீ...
சுப்புராம் முத்துராஜ்
368 views
9 days ago
*40- வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்கவும்* *குறிப்பாக 45 வயதிற்கு மேலே உள்ள நமது குரூப்பில் உள்ள அங்கிள்ஸ் அனைவரும் கட்டாயம் இந்த குறிப்புகளை தயவுசெய்து படித்து பின்பற்றவும்* ****************** நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க இவை அனைத்தையும் கவனியுங்கள்: :::::::::::::::::::::::::::::::::: உங்கள் தேநீரில் *பால்* குறைவாக குடிக்கவும். அதற்கு பதிலாக, *எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு* சேர்க்கவும். ~~~~~~~~~~~~~~~ பகல் நேரத்தில், *அதிக தண்ணீர்* குடிக்கவும்; இரவு நேரத்தில், *குறைவாக* குடிக்கவும். ~~~~~~~~~~~~~~~ பகலில் *2 கப் காபிக்கு* மேல் குடிக்க வேண்டாம் அல்லது முற்றிலும் *நிறுத்தவும்* என அறிவுறுத்தப்படுகிறது. ~~~~~~~~~~~~~~~ *எண்ணெய் உணவுகளை குறைவாக உண்ணுங்கள்* . ~~~~~~~~~~~~~~~ சிறந்த தூக்க நேரங்கள் *இரவு 10 மணி முதல் காலை 6* மணி வரை. ~~~~~~~~~~~~~~~ மாலையில், *மாலை 5 அல்லது 6 மணிக்குப் பிறகு ஏதாவது சிறிது சாப்பிடுங்கள்.* ~~~~~~~~~~~~~ *குளிர்ந்த நீரில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்* . படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் *மருந்துகளை* எடுத்துக் கொள்ளுங்கள். மருந்துகளை உட்கொண்டு உடனடியாக *படுத்துக்கொள்ளாதீர்கள்* . ~~~~~~~~~~~~~~~ நீங்கள் மேலும் *குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதை நிறுத்துங்கள்* ஆனால் *அறை வெப்பநிலையில் தண்ணீரை மட்டுமே* குடிக்கவும் ~~~~~~~~~~~~~~~ ஒரு நாளைக்கு *குறைந்தது 8 மணிநேரம் தூங்க* முயற்சி செய்யுங்கள். ~~~~~~~~~~~~~~~ முடிந்தால் மதியம் முதல் *மாலை 3 மணி வரை அரை மணி* நேரம் தூங்குவது, *மன அழுத்தத்தைக் குறைக்கும். இளமையாகவும்* , எளிதில் வயதாகாமல் இருக்கும். ~~~~~~~~~~~~~~~ உங்கள் மொபைல் ஃபோன் *பேட்டரியில் குறைவான சார்ஜில்* அழைப்புகளை செய்ய வேண்டாம், ஏனென்றால் ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் அலைகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை விட *பல மடங்கு* அதிகமாக இருக்கும். ~~~~~~~~~~~~~~~ *செல் போன் பேச பதிலளிக்க* உங்கள் இடது காதைப் பயன்படுத்தவும், வலது காது உங்கள் *மூளையை நேரடியாகப் பாதிக்கும்* . அழைப்புகளுக்குப் பதிலளிக்க *ஒயருடன் கூடிய இயர்போன்களைப்* பயன்படுத்துவது இன்னும் சிறந்தது, *புளூ டூத் இயர்ஃபோன்களை கட்டாயம் தவிர்க்க.* ~~~~~~~~~~~~~~~ உங்களால் முடிந்தவரை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய இரண்டு விஷயங்கள்: (1) உங்கள் *இரத்த அழுத்தம்* (2) உங்கள் *இரத்த சர்க்கரை.* (3)தேவை ஏற்படின் *யூரியா கிரியாட்டினின்* அளவு ~~~~~~~~~~~~~~~ *உங்கள் உணவுகளில் குறைந்தபட்சமாக* குறைக்க வேண்டிய ஆறு விஷயங்கள்: (1) *உப்பு* (2) *சர்க்கரை* (3) பாதுகாக்கப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள் (4) *குறிப்பாக வறுத்த சிவப்பு இறைச்சி* (5) பால் பொருட்கள் (6) மாவுச்சத்துள்ள பொருட்கள் ~~~~~~~~~~~~~~~ உங்கள் உணவில் அதிகரிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்: (1) *கீரைகள்/* காய்கறிகள் (2) *பீன்ஸ்* (3) *பழங்கள்* (4)கொட்டைகள் ~~~~~~~~~~~~~~~ நீங்கள் மறக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்: (1) *உங்கள் வயது* (2) *உங்கள் கடந்த காலம்* (3) *உங்கள் கவலைகள்/குறைகள்* (4) *மது புகை மாது சூது (5)அடுத்தவர்களை பார்த்து இலக்கு நிர்ணயிப்பது ~~~~~~*~~~~~~~~~ நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அல்லது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் உங்களிடம் இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்: (1) *உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்* (2) *அக்கறையுள்ள குடும்பம்* (3) *நேர்மறை எண்ணங்கள்* ~~~~~~~~~~~~~~~ ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள்: (1) *பாடுதல்* (2) *நடனம்* (3) *உண்ணாவிரதம்* (4) *புன்னகை/சிரித்தல்* (5) *மலையேற்றம்/உடற்பயிற்சி* (6) *உங்கள் எடையைக் குறைக்கவும்.* ~~~~~~~~~~~~~~~ நீங்கள் *காத்திருக்க கூடாத* ஐந்து விஷயங்கள்: (1) *நீங்கள் சாப்பிட பசி எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்* (2) *நீங்கள் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்* (3) *நீங்கள் தூங்குவதற்கு தூக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்* (4) *நீங்கள் ஓய்வெடுக்க சோர்வாக உணரும் வரை காத்திருக்க வேண்டாம்* (5) *மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்ல உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை* காத்திருக்காதீர்கள், இல்லையெனில் *வாழ்க்கையில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்* . ~~~~~~~~~~~~~~~ இந்த சுகாதார உதவிக்குறிப்புகளைப் படித்த பிறகு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று: (1) இதை உங்கள் *அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு தயவுசெய்து கட்டாயம் பகிருங்கள்,* நீங்கள் அவ்வாறு செய்யும்போது, உங்களுடைய *சமுதாயம் ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய வாழ்க்கை அமையும்.* ================= உங்களின் இயல்பான *பணிகளை,வியாபாரத்தை* மேற்கொள்ளும் போது, நீங்கள் எவ்வளவு உடல் தகுதியுடன் இருக்கிறீர்கள் என்பதை அறிய, எப்பொழுதும் உங்கள் உடலைச் சரிபார்த்துக்கொள்ள மறக்காதீர்கள், மருத்துவ தகுதிகள்: உயர் இரத்த அழுத்தம் ---------- *120/80 -- இயல்பானது* *130/85 --இயல்பான (கட்டுப்பாடு)* *140/90 -- உயர்* *150/95 -- மிக அதிகம்* ---------------------------- *பல்ஸ்* ---------- நிமிடத்திற்கு 72 (தரநிலை) 60 --- 80 p.m. (சாதாரண) *40 -- 180 p.m.(அசாதாரண)* ---------------------------- *உடல் வெப்ப நிலை* ------------------- 98.4 F (சாதாரண) *99.0 F மேலே (* காய்ச்சல்) உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்.... *மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படாமல் இருக்க இரவில் இரத்தம் உறைவதைத் தவிர்க்க நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது* ஒரு கிளாஸ் *வெதுவெதுப்பான* நீரைக் குடிக்கவும். தயவு செய்து உங்கள் *குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டுரையை பகிரவும்.* *நன்றி.* 🩷🩷🩷🔥🔥🔥🔥 #சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #👉வாழ்க்கை பாடங்கள்
சுப்புராம் முத்துராஜ்
599 views
10 days ago
பைத்தியக்காரன், பெண் பித்தன் என அழைக்கப்பட்டார்; சூனியம் வைத்து விட்டதாக அம்மா சொன்னார்;மனைவி, அம்மா பிரிந்து சென்றனர்;ஊரை விட்டு துரத்தப்பட்டார்.. மனம் தளராமல் கண்டு பிடித்தார் மலிவுவிலை நாப்கின்களை! பெண்களுக்கான குறைந்த விலை சானிடரி நாப்கின் அடிமட்ட ஏழைப் பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியவர் கோவை முருகானந்தம்! டைம்ஸ் இதழில் உலகின் தலைசிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் இவர். 4 கோடி ரூபாயில் தயாரிக்கப்படும் நாப்கின் எந்திரத்தை வெறும் 45 ஆயிரம் ரூபாயில் தயாரித்து, முதல் எந்திரத்தை பீகார் மலைவாழ் மக்கள் வசிக்கும் மதுபனி கிராமத்திற்கு எடுத்துச் சென்றார். ‌இரண்டாவது எந்திரத்தைத் தயாரித்து உத்தரகாண்ட் ருத்ரப்ரியா கிராமத்திற்கு எடுத்துச் சென்றார். அம்மக்களின் பயன்பாட்டில் இது தன் வெற்றிகரமான கண்டுபிடிப்பாக இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறார். அப்புறம் என்ன? ஏராளமான விருதுகள் இவரைத் தேடி வருகின்றன. நமது இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கிறது‌. இவர் வாழ்க்கை 'பேட்மேன்' என இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. நடிகர் அட்சயகுமார் நடிக்க, இயக்கி, வெற்றிவாகை சூடுகிறார் இயக்குனர் ஆர்.பால்கி. 2018-இல் அமெரிக்க வாழ் ஈரான் பெண் ராக்யா செப்தாக்சி எடுத்த 'பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்' என்ற இவர் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கார் விருதைப் பெற்றது. இவ்வளவுக்கும் காரணமான முருகானந்தம் படித்ததோ 8-ஆம் வகுப்பு; ஆனால் இவர் பற்றிய பாடத்தை 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று படித்து வருகின்றனர்! ஆனால், அதற்கு இவர் கொடுத்த விலை.. அப்பப்பா! யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவு மிகக் கொடுமையானது. அவருடைய வார்த்தைகளிலேயே அதைக் கேட்போம்... "என் ஊர் பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக் கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துட்டார். குடும்பமே இடிஞ்சு போயிடுச்சு. வீட்டின் வறுமையைப் போக்க கிரில் பட்டறை வேலைக்குப் போனேன். அங்க புதுசு, புதுசா நிறைய முயற்சி பண்ணினேன். அம்மா வாசல்ல போடுற கோலத்தை வீட்டு ஜன்னல் ஆக்கினேன். இதனால, என் முதலாளிக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ஆனா, எனக்கு ஒரு தொழில்லயே ரொம்ப நாள் ஒட்டாது. நான் கிளம்புறேன்னு சொன்னப்ப முதலாளி, 'நீயே இந்தக் கடையை வாங்கிக்கோ’னு சொல்லி பணத்துக்கு வழிகாட்டினார். கடையை எடுத்து நல்லாவே நடத்தினேன். எனக்குக் கல்யாணமும் ஆச்சு. ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க. என்னனு கேட்டப்ப, 'இது பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொல்லிட்டு விறுவிறுனு ஓடப் பார்த்தாங்க. நான் அவங்ககிட்ட இருந்து அதைப் பிடுங்கிப் பார்த்தா அழுக்கான துணி. 'ஏன் ஒரு நாப்கின் வாங்கக் கூடாதா?’னு மனைவியைத் திட்டினேன். அவங்களோ, 'அதுக்கு எல்லாம் செலவு பண்ணா குழந்தைக்குப் பால் வாங்க எங்க போவேன்’னு கேட்டாங்க. அதோட மட்டும் இல்லாம பெரும்பாலான கிராமப் பெண்கள் வசதி இல்லாததால இதுமாதிரி அழுக்குத் துணிகளைத்தான் பயன்படுத்துறாங்கனு அவங்க சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போயிட்டேன். அப்பதான் நாப்கினை நாமே தயாரிக்கலாமேனு எண்ணம் எழுந்துச்சு. கடையில ஒரு நாப்கினை வாங்கி, அதைப் பிரிச்சுப் பார்த்தேன். அதுல பஞ்சு மாதிரி ஒரு பொருள் இருந்துச்சு. உடனே பஞ்சை நல்லா அடைச்சு நாப்கின் தயாரிச்சேன். இதை யார்கிட்டே போய் சோதனை பண்ண முடியும். என் மனைவிகிட்ட போய் தயக்கமா நின்னேன். இப்படியே என்னோட சோதனைகள் தொடர்ந்தது. ஆனா, ஏகப்பட்ட ஏமாற்றம். ஒருகட்டத்துல என் மனைவிக்கு என் மேல ரொம்பக் கோபம்வந்து இந்த விஷயத்தை நிறுத்துங்கனு சொல்லி கண்டபடி திட்டிட்டாங்க.பிரிஞ்சும் போயிட்டாங்க. வேற வழி இல்லாம நான் பக்கத்துல இருந்த மருத்துவக் கல்லூரி பெண்களிடம் என் ஆராய்ச்சியைச் சொல்லி உதவி கேட்டேன். பல பெண்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று திட்டினாங்க.வேறு சிலர் கல்லூரி வாசலில் நிற்பதை, கல்லூரி மாணவிகளைச் சுற்றி வந்ததைப் பார்த்து விட்டு பெண் பித்தன் என்றார்கள். கடைசியில் சிலர் ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தாங்க. சில வாரங்களில் அவங்களாலும் தொடர்ந்து ஒத்துழைக்க முடியலை. வேற வழி இல்லாம என்னையே சோதனைக்கு உள்ளாக்க முடிவு பண்ணினேன். என் நண்பரின் கறிக் கடையில் இருந்து ஆண்டின் சூடான ரத்தத்தை வாங்கிட்டு வந்து இடுப்பில் ஃபுட்பால் பிளாடரில் நிரப்பிக்கிட்டேன். நடுவில சின்னக் குழாய் மூலமா நாப்கினை நோக்கி இணைச்சுக்கிட்டேன். பிளாடரை அழுத்தினா ரத்தம் நாப்கினில் விழும். இந்த நாப்கினுக்காகப் பலவிதமான பஞ்சுகளை வெச்சுப் பரிசோதிச்சேன். இந்தச் சோதனையில் என் வேட்டி எல்லாம் ரத்தம் கொட்டியது. ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத நாற்றம் வந்தது. இதைப் பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு ஊர்ல தகவல் பரவிடுச்சு. என் மனைவி கோவிச்சுக்கிட்டு என்னைவிட்டு நிரந்தரமாப் பிரிஞ்சுப்போயிட்டாங்க! சோதனைக்காக என் பட்டறையில் இருந்த கடைசி ஸ்கிராப் வரைக்கும் வித்துட்டேன். ஆனாலும், எனக்கு நம்பிக்கை மட்டும் போகலை. சில பெண்கள் உபயோகப்படுத்தின நாப்கின்களைச் சேகரிச்சு, அதை வீட்டுல காயவெச்சு சோதனை செஞ்சேன். என் அம்மா இதைப் பார்த்து எனக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கனு தனியா பிரிஞ்சு போயிட்டாங்க. ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து என்னை ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க. கண்ணீரோட நான் என் கிராமத்தை விட்டு கிளம்பினப்ப, என் கூடவந்த ஒரே ஜீவன் நான் வளர்த்த நாய் மட்டும்தான். அதோட கோவைக்கு கிளம்பி வந்து விட்டேன். அறை பிடிச்சுத் தங்கி வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு ஓயாம உழைச்சேன். அப்புறம்தான் வெளிநாட்டு கம்பெனிக்காரன் பயன்படுத்தறது ஃபைன் மரப் பஞ்சுனு தெரிஞ்சுது. அதைக்கொண்டு நாப்கின் தயாரிக்கிற இயந்திரம் எட்டுக் கோடி ரூபாய் ஆகும்னு சொன்னாங்க. நான் ஃபைன் மரப் பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி பண்ணினேன். சுமார் ஆறு மாசம் ரெண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி, கஷ்டப்பட்டு ஒரு இயந்திரத்தைத் தயாரிச்சுட்டேன். இதுக்கு 45 ஆயிரம் செலவாச்சு. இயந்திரத்தைத் தயாரிச்சு முடிச்சப்ப என் கையில் ஒரு பைசா இல்லை. சேமிப்பு, இருந்த சொச்ச சொத்து எல்லாத்தையும் இழந்துட்டேன். ஆனா, அதுல தயாரிச்ச ஒரு நாப்கினை ஒரு கல்லூரி பொண்ணு பயன்படுத்திட்டு, 'அண்ணா, இதை யூஸ் பண்ற மாதிரியே எனக்குத் தெரியலை. ரொம்ப வசதியா இருக்கு’னு சொன்னப்போ கதறி அழுதுட்டேன். அது என் பல ஆண்டுக் கனவு. அதுக்காக நான் என் வாழ்க்கையையே இழந்திருக்கேன். தகவல் பரவி நிறையப் பேர் இந்த இயந்திரத்தைத் தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க. நான் தயாரிச்ச இயந்திரம் மூலமாப் பெண்களே இப்ப சுலபமா நாப்கினைத் தயாரிக்க முடியும். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான்! அவமானங்களை அனுபவித்திருந்தாலும் நம்மாலும் மனித குலத்திற்கு நல்லது செய்ய முடிந்ததே என இன்று பெருமிதம் அடைகிறேன்!" #சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம்முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ்