ஃபாலோவ்
O Panneerselvam
@officeofops
2,809
போஸ்ட்
27,541
பின்தொடர்பவர்கள்
O Panneerselvam
2.4K காட்சிகள்
பகுத்தறிவு கருத்துகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பி, பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவரும், சாதியில்லா தமிழ்நாட்டை உருவாக்க பாடுபட்டவருமான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். #அதிமுக
O Panneerselvam
915 காட்சிகள்
திருவோணம் திருநாளை உவகையுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். #அதிமுக
O Panneerselvam
886 காட்சிகள்
சுதந்திரப் போராட்ட வீரரும், தீண்டாமை ஒழிப்புக்கு குரல் கொடுத்தவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 67-வது நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்நாளில் அவரின் அர்பணிப்பையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம். #அதிமுக
O Panneerselvam
922 காட்சிகள்
ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெறவேண்டும் என்பதற்காக கல்லூரிகளை நிறுவி அவர்களுக்கு உயர் கல்வியை தந்து, இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவரும், தேவர் தந்த தேவர் என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்படும் மூக்கையா தேவர் அவர்களின் 45-வது நினைவு நாளில் அவர்தம் அர்ப்பணிப்பையும், புகழையும் போற்றுவோம். #அதிமுக
O Panneerselvam
750 காட்சிகள்
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், என பன்முகத் தன்மை கொண்டுவரும், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரருமான வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 153-வது பிறந்த நாள். அவருடைய எழுத்துகள் மூலம் மக்களிடத்தில் சுதந்திர பற்றை வளர்த்தவரும், தமிழ் மொழிக்காக பல கட்டுரைகளையும், செய்யுள்களையும் தந்தவரும். ஆங்கிலேயர் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி கடல்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்தியவருமான வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், தியாகத்தையும், நாட்டு பற்றையும் போற்றி வணங்குவோம். #அதிமுக
O Panneerselvam
998 காட்சிகள்
#🙏கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்👣 தனக்காக இல்லாமல், பிறருக்காக சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்து அனைத்து உயிர்கள் மீதும் கருணை மழை பெய்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளை “கோகுலாஷ்டமி” என்றும், “கிருஷ்ண ஜெயந்தி” என்றும் கொண்டாடும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
See other profiles for amazing content