ஃபாலோவ்
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
@preo
13,042
போஸ்ட்
446,114
பின்தொடர்பவர்கள்
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
512 காட்சிகள்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ مِنَ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا، فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ قَبِلَتِ الْمَاءَ، فَأَنْبَتَتِ الْكَلأَ وَالْعُشْبَ الْكَثِيرَ، وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتِ الْمَاءَ، فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ، فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا، وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى، إِنَّمَا هِيَ قِيعَانٌ لاَ تُمْسِكُ مَاءً، وَلاَ تُنْبِتُ كَلأً، فَذَلِكَ مَثَلُ مَنْ فَقِهَ فِي دِينِ اللَّهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ، فَعَلِمَ وَعَلَّمَ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا، وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ ‏ ‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ إِسْحَاقُ وَكَانَ مِنْهَا طَائِفَةٌ قَيَّلَتِ الْمَاءَ‏.‏ قَاعٌ يَعْلُوهُ الْمَاءُ، وَالصَّفْصَفُ الْمُسْتَوِي مِنَ الأَرْضِ‏.‏ அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் என்னை எத்தகைய நேர்வழியுடனும் கல்வியுடனும் அனுப்பியுள்ளானோ, அதற்கான உதாரணம் பூமியில் பெய்த பெருமழையைப் போன்றதாகும். (அதில்) ஒரு பகுதி நல்ல நிலமாக இருந்தது; அது நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்களையும் செடிகொடிகளையும் முளைப்பித்தது. அதில் மற்றொரு பகுதி (நீரைத்) தேக்கி வைத்துக்கொள்ளும் திடர்ப் பகுதியாக இருந்தது; அல்லாஹ் அதனால் மக்களுக்குப் பயனளித்தான். அவர்கள் (அந்நீரைத்) தாங்களும் குடித்து, (கால்நடைகளுக்கும்) புகட்டி, விவசாயமும் செய்தார்கள். (அம்மழையின்) ஒரு பகுதி வேறொரு வகை நிலத்திலும் விழுந்தது; அது (தண்ணீர் தங்காத) வெறும் பாழுந்தரை. அது நீரைத் தேக்கி வைக்கவும் இல்லை; புற்களை முளைப்பிக்கவும் இல்லை. இதுதான், அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று, அல்லாஹ் என் மூலம் அனுப்பியவற்றால் பயனடைந்து, தானும் கற்றுக்கொண்டு (பிறருக்கும்) கற்றுக்கொடுத்தவரின் உதாரணமும்; இதைப் பொருட்படுத்தாமலும், நான் அனுப்பப்பட்டுள்ள அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பவனின் உதாரணமும் ஆகும்." ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 79 #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
13.5K காட்சிகள்
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، فَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكَرْ ذَلِكَ عَلَىَّ‏.‏ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நான் ஒரு பெண் கழுதையின் மீது சவாரி செய்துகொண்டு வந்தேன். அப்போது நான் பருவ வயதை நெருங்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் (தடுப்புச்) சுவர் அல்லாத ஒன்றை நோக்கித் தொழுதுகொண்டிருந்தார்கள். நான் (தொழுகையிலிருந்த) வரிசையின் ஒரு பகுதிக்கு முன்பாகக் கடந்து சென்று, அப்பெண் கழுதையை மேய்வதற்காக விட்டுவிட்டு, வரிசையில் சேர்ந்துகொண்டேன். (என்னுடைய) இச்செயலை யாரும் ஆட்சேபிக்கவில்லை." ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 76 #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗
See other profiles for amazing content