Follow
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
@preo
13,267
Posts
446,402
Followers
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
733 views
5 hours ago
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ ذَكَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ ثُمَّ نَمْ ‏ ‏‏.‏ அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள், தமக்கு இரவில் ஜனாபா நிலை ஏற்படுவதாக (அதாவது, உடலுறவுக்குப் பிறகு குளிப்பதற்கு முன் தூங்கலாமா என்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உளூச் செய்யுங்கள்; உமது மர்ம உறுப்பைக் கழுவிக்கொள்ளுங்கள்; பிறகு தூங்குங்கள்" என்று கூறினார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 290 #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
1.3K views
5 hours ago
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهْوَ جُنُبٌ، غَسَلَ فَرْجَهُ، وَتَوَضَّأَ لِلصَّلاَةِ‏.‏ ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஜுனூபாக இருக்கும் நிலையில் உறங்க நாடும்போதெல்லாம், தங்களுடைய மறைவிடங்களைக் கழுவிவிட்டு, தொழுகைக்காகச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 288 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ اسْتَفْتَى عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيَنَامُ أَحَدُنَا وَهْوَ جُنُبٌ قَالَ ‏ ‏ نَعَمْ، إِذَا تَوَضَّأَ ‏ ‏‏.‏ அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "எங்களில் ஒருவர் ஜுனுபாக இருக்கும்போது தூங்கலாமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "ஆம், அவர் உளூச் செய்தால் (தூங்கலாம்)" என்று பதிலளித்தார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 289 #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
1.7K views
5 hours ago
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ امْرَأَةُ أَبِي طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ ‏ ‏‏.‏ இறைநம்பிக்கையாளர்களின் அன்னையாகிய உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அபூ தல்ஹா (ரழி) அவர்களின் மனைவியான உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை (உங்களுக்குச் சொல்வதில்) வெட்கப்படமாட்டான். ஒரு பெண்ணுக்குக் கனவில் ஸ்கலிதம் (இரவில் ஏற்படும் பாலியல் திரவ வெளியேற்றம்) ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், அவள் (அந்தத்) திரவத்தைக் கண்டால் (குளிக்க வேண்டும்)” என்று பதிலளித்தார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 282 #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
460 views
6 hours ago
وَعَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏'‏ بَيْنَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا فَخَرَّ عَلَيْهِ جَرَادٌ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ أَيُّوبُ يَحْتَثِي فِي ثَوْبِهِ، فَنَادَاهُ رَبُّهُ يَا أَيُّوبُ، أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى قَالَ بَلَى وَعِزَّتِكَ وَلَكِنْ لاَ غِنَى بِي عَنْ بَرَكَتِكَ ‏'‏‏.‏ وَرَوَاهُ إِبْرَاهِيمُ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ صَفْوَانَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏'‏ بَيْنَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا ‏'‏‏.‏ அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நபி அய்யூப் (அலை) அவர்கள் நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, தங்க வெட்டுக்கிளிகள் அவர் மீது விழுந்தன. அய்யூப் (அலை) அவர்கள் அவற்றைத் தமது ஆடையில் அள்ளிச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அப்போது அவருடைய இறைவன் அவரை அழைத்து, 'ஓ அய்யூப்! நீர் பார்க்கும் இவற்றின் தேவை உமக்கு இல்லாதவாறு நான் உமக்குச் செல்வத்தை வழங்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு அய்யூப் (அலை) அவர்கள், 'ஆம்! உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! (நீ வழங்கினாய்). ஆனால், உனது அருள் வளம் (பரக்கத்) இல்லாமல் என்னால் இருக்க முடியாது' என்று பதிலளித்தார்கள்." ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 279 #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
14.4K views
6 hours ago
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ كَانَتْ بَنُو إِسْرَائِيلَ يَغْتَسِلُونَ عُرَاةً، يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، وَكَانَ مُوسَى يَغْتَسِلُ وَحْدَهُ، فَقَالُوا وَاللَّهِ مَا يَمْنَعُ مُوسَى أَنْ يَغْتَسِلَ مَعَنَا إِلاَّ أَنَّهُ آدَرُ، فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ، فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ، فَفَرَّ الْحَجَرُ بِثَوْبِهِ، فَخَرَجَ مُوسَى فِي إِثْرِهِ يَقُولُ ثَوْبِي يَا حَجَرُ‏.‏ حَتَّى نَظَرَتْ بَنُو إِسْرَائِيلَ إِلَى مُوسَى، فَقَالُوا وَاللَّهِ مَا بِمُوسَى مِنْ بَأْسٍ‏.‏ وَأَخَذَ ثَوْبَهُ، فَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا ‏ ‏‏.‏ فَقَالَ أَبُو هُرَيْرَةَ وَاللَّهِ إِنَّهُ لَنَدَبٌ بِالْحَجَرِ سِتَّةٌ أَوْ سَبْعَةٌ ضَرْبًا بِالْحَجَرِ‏.‏ அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பனீ இஸ்ராயீல் மக்கள் நிர்வாணமாகக் குளிப்பவர்களாக இருந்தார்கள்; அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்ப்பார். ஆனால் மூஸா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். ஆகவே அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! மூஸா (அலை) அவர்களுக்கு விதை வீக்கம் (விரை வீக்கம்) இருப்பதைத் தவிர, எங்களுடன் குளிப்பதிலிருந்து அவர்களைத் தடுப்பது எதுவுமில்லை' என்று கூறினார்கள். ஒருமுறை அவர் குளிப்பதற்காகச் சென்றபோது, தமது ஆடையை ஒரு கல்லின் மீது வைத்தார்கள். அந்தக் கல் அவருடைய ஆடையுடன் ஓடியது. மூஸா (அலை) அவர்கள் அதன் பின்னே சென்று, 'என் ஆடையே, கல்லே!' என்று கூறிக் கொண்டே சென்றார்கள். இறுதியில் பனீ இஸ்ராயீல் மக்கள் மூஸாவைப் பார்த்தனர். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! மூஸா (அலை) அவர்களிடம் எந்தக் குறையும் இல்லை' என்று கூறினர். அவர் தமது ஆடையை எடுத்துக்கொண்டு, அந்தக் கல்லை அடிக்கத் தொடங்கினார்கள்." அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அக்கல்லில் அந்த அடியினால் ஆறு அல்லது ஏழு தழும்புகள் உள்ளன." ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 278 #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
2.3K views
6 hours ago
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ، وَعُدِّلَتِ الصُّفُوفُ قِيَامًا، فَخَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا قَامَ فِي مُصَلاَّهُ ذَكَرَ أَنَّهُ جُنُبٌ فَقَالَ لَنَا ‏:‏ ‏ ‏ مَكَانَكُمْ ‏ ‏‏.‏ ثُمَّ رَجَعَ فَاغْتَسَلَ، ثُمَّ خَرَجَ إِلَيْنَا وَرَأْسُهُ يَقْطُرُ، فَكَبَّرَ فَصَلَّيْنَا مَعَهُ‏.‏ تَابَعَهُ عَبْدُ الأَعْلَى عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ‏.‏ وَرَوَاهُ الأَوْزَاعِيُّ عَنِ الزُّهْرِيِّ‏.‏ அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு, வரிசைகள் நின்ற நிலையில் சீர்செய்யப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் தமது முஸல்லாவில் (தொழும் இடத்தில்) நின்றபோது, தாங்கள் ஜுனுப் (பெரிய தூய்மையற்ற) நிலையில் இருப்பதை நினைவு கூர்ந்தார்கள். உடனே எங்களிடம், "உங்கள் இடங்களிலேயே இருங்கள்" என்று கூறினார்கள். பிறகு திரும்பிச் சென்று குளித்துவிட்டு, தம் தலையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட எங்களிடம் வந்தார்கள். பிறகு தக்பீர் கூறினார்கள்; நாங்களும் அவர்களுடன் தொழுதோம். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 275 #🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋
👑⚓🌟🌟🌟🌟🌟🌠
414 views
11 hours ago
#இது_அல்லாஹ்வின்_பெயர்களை_கொண்ட_நீண்ட_துவா. #பொறுமையுடன்_படிக்கவும் 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم 🤲🏻யா அல்லாஹ் ! யா ரஹ்மான் ! யா ரஹீம் ! எங்கள் பாவங்களை மன்னித்து விடு, ரஹ்மானே ! எங்கள் நோன்பை ஏற்றுக் கொள், ரஹ்மானே ! எங்கள் இபாதத்தை ஏற்றுக் கொள், ரஹ்மானே !எங்கள் ஜக்காத்தை ஏற்றுக் கொள்,ரஹ்மானே ! 🤲🏻யாஅல்லாஹ் ! ஏழை எளிய மக்களுக்கு ஜக்காத்தையும், சதகாவையும்,தர்மத்தையும் வாரி வழங்கும் பாக்கியத்தை குடு, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! நாங்கள் ஹராமான செயல்கள் செய்யாமலும் அதை நினைக்காமலும் எங்களை பாதுகாப்பாய், ரஹ்மானே ! 🤲🏻யாஅல்லாஹ் ! நாங்கள் வட்டி வாங்காமலும், கொடுக்காமலும் வாழ கிருபை செய், ரஹ்மானே! 🤲🏻யா அல்லாஹ் ! உன்னைத்தவிர யாரிடமும் கையேந்தும் இழிநிலையை எங்களுக்கு தந்துவிடாதே, ரஹ்மானே !😭 🤲🏻யாஅல்லாஹ் எங்களையும், எங்களது பிள்ளைகளையும் குப்ர், ஷிர்க், பித்அத்திலிருந்து காப்பாற்று. மஸீஹித் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாத்திடு. , ரஹ்மானே!😭 யா அல்லாஹ் ! உலக வாழ்க்கையில் ஏற்படும் சோதனையை தாங்கும் அளவுக்கு பொறுமையை குடு, ரஹ்மானே !😭 🤲🏻யா அல்லாஹ் ! உன் அருள் நீங்குவதை விட்டும்,😭 உனது தண்டனை திடீரென வருவதை விட்டும்,😭 எதிர்பாராத ஆபத்துகளிலிருந்தும்,😭 துஷ்ட மரணத்திலிருந்தும்,😭 பெரிய கொடிய நோய்களிலிருந்தும்,😭 கஷ்டமான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறோம், ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! குர்ஆனை எங்கள் உள்ளத்திற்கு வசந்தமாகவும், இதயத்திற்கு பிரகாசமாகும், எங்கள் கவலைகளை அகற்ற கூடியதாகவும் ஆக்கிவிடு, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்களுக்கு பாவத்தின் மீது வெறுப்பையும், இபாதத்தின் மீது ஆசையையும், உன்னுடைய பயத்தையும், மறுமை பற்றிய சிந்தனையையும் குடு, ரஹ்மானே ! யா அல்லாஹ் ! நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விட மறுமை வாழ்வை தேர்ந்தெடுக்க உதவி செய், ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! நாங்கள் பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்தும், பிறரால் அநீதி இழைக்கப்படுவதிலிருந்தும் எங்களை பாதுகாத்திடு, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! கடனால் யாரெல்லாம் அவதி படுகிறார்களோ அவர்களுக்கு கடன் அடையவும், யாரெல்லாம் குழந்தை இல்லாமல் வாடுகிறார்களோ அவர்களுக்கு சாலிஹான குழந்தையையும், கல்யாணமாகாத குமர்களுக்கு விரைவில் திருமணம் ஆகவும், வேலை இல்லாத வாலிபர்களுக்கு நல்ல வேலையையும் வழங்கி கிருபை செய், ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்கள் வாழ்வில் ஒரு முறையாவது புனித ஹஜ் செய்யவும், கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரவ்லாஷரீப் சென்று மீண்டும் மீண்டும் புனித ஜியாரத் செய்கின்ற பாக்கியத்தை குடு, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்களுக்கு அழகான மௌவ்த்தை தருவாயாக, ரஹ்மானே !😭 எங்களுக்கு சக்ராத் வேதனையை இலேசாக்கு, ரஹ்மானே ! 😭எங்கள் இருதி நேரத்தில் ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்ற கலிமாவைக் நாவில் மொழிய செய் ரஹ்மானே ! சைத்தானின் தீங்கை விட்டும் எங்களை பாதுகாத்திடு, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்களை கடைசி காலம் வரை படுக்கையில் போட்டுவிடாமல், எங்கள் சுய தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்ள கிருபை செய்வாயாக, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்களுக்கு கபூரின் வேதனையை இலேசாக்கு, ரஹ்மானே !😢 🤲🏻யா அல்லாஹ் ! எங்கள் கபூர் நெருக்கடி இல்லாமல் பாதுகாப்பாயாக, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! கபூரில் கேட்கப்படும் கேள்விகளை எங்களுக்கு இலேசாக்கி குடு, ரஹ்மானே !😭 பதில்,எளிதில் சொல்லும் நாவை குடு,ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்கள் கபூரை சொர்க்கத்தின் சோலைவனமாக்கு, ரஹ்மானே !🌹 🤲🏻யா அல்லாஹ் ! கபூரில் பாம்பு,பல்லி, நெருப்பால் நிரப்பி விடாதே, ரஹ்மானே !😭 🤲🏻யா அல்லாஹ் ! கேள்வி கணக்கு கேட்கப்படும் மஹ்ஷர் மைதானத்தில் உனது அர்ஷின் கீழ் நிழலை வழங்கு, ரஹ்மானே ! 🤲🏻யாஅல்லாஹ்! எங்களது பட்டோலையை வலது கையில் வழங்க கிருபை செய், ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! மீஸான் தராசில் எங்களது நன்மை அதிகமாயிருக்க கிருபை செய், ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்கள் பாவங்களை உன் கருணை கொண்டு மன்னித்து, மறைத்து விடு, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்கள் பாவங்கள் அனைத்தையும் மறைத்து மன்னித்து விடு யா அல்லாஹ் வெளிப்படுத்தி காட்டி விடாதே, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்கள் அனைவரையும் நபிகள் நாயகம் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத் பெற்ற மக்களாக ஆக்கிவை,ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமான கையால் ஹவ்ளுல் கவ்ஸர் தடாக தண்ணீரை பருகும் பாக்கியத்தை எங்களுக்குத்தா, யா அல்லாஹ் ! 🤲🏻யா அல்லாஹ் ! நரககத்தை கடந்து செல்லும் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்க கிருபை செய், ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்களுக்கு மறுமையில் வெற்றியை தருவாயாக, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்கள் அனைவருக்கும் உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்கிடுவாயாக, ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்களது ஹலாலான துவாக்களை கபூல் செய்,ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்களுக்கு நீ கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது, ரஹ்மானே ! இதை உறுதியான ஈமானோடு கேட்கின்றோம், ரஹ்மானே ! 🤲🏻யா அல்லாஹ் ! எங்களுக்கு தேவையானதை தந்து எங்கள் துவாக்களை கபூல் செய், ரஹ்மானே ! பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்தை கொண்டு, ‘லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்மது ரஸூலுல்லாஹ்’என்ற கலிமாவின் பொருட்டால் இந்த துவாவை உன் கருணை கொண்டு ஏற்றுக் கொள்வாயாக, ரஹ்மானே ! சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஸ்ஸத்தி ஙம்மா யஸீபூன் வஸலாமுன் அலல் முர்ஸலீன் வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.. 👇👇👇👇👇👇👇👇👇👇❤❤❤❤❤❤❤❤ யாரெல்லாம் இந்த துவாவை மற்றவர்களுக்கு முன்னோக்கி அனுப்பி வைக்கிறார்களோ அவர்களுக்கும் அனைத்து நண்மைகளும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்! யாரப்புல் ஆலமீன்..! #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋
See other profiles for amazing content