Follow
SHEIK 🌺KSN🌺
@sheikksn
15,965
Posts
16,983
Followers
SHEIK 🌺KSN🌺
638 views
8 hours ago
“வீரம்” என்பது வெறும் போரில் மட்டும் காட்டப்படும் துணிச்சல் அல்ல. அது உண்மையை நிலைநாட்டும் மன வலிமை, அல்லாஹ்வின் பயத்துடன் வாழும் உறுதி, மற்றும் தவறை எதிர்க்கும் தைரியம் ஆகும்.. அல்லாஹ்வைத் தவிர யாரையும் அஞ்சாமல் உண்மையை பேசுதல் நியாயத்திற்காக நின்று அநியாயத்தை எதிர்த்தல் கோபம் வந்தபோது தன்னைக் கட்டுப்படுத்தும் உள் வீரியம் கஷ்டங்களில் சப்ர் (பொறுமை) காத்தல். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
583 views
9 hours ago
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவை புனித நகரமாக அறிவித்தார்கள். "மதீனா 'ஐர்' மலை முதல் 'தவ்ர்' மலை வரையிலான பகுதி புனிதமானது"* என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். புனித எல்லை ஐர் மலையும் தவ்ர் மலையும் மதீனாவின் தெற்கு மற்றும் வடக்கு எல்லைகளாக உள்ளன. இந்த இரு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதி முழுவதும் 'ஹரம்' என்று அழைக்கப்படும் புனித எல்லை. தடை செய்யப்பட்டவை இந்த எல்லைக்குள் மரங்களை வெட்டுவது, வேட்டையாடுவது, ஆயுதம் ஏந்திச் சண்டையிடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. மக்காவைப் போலவே மதீனாவும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்ட புனித நகரம். இங்கு செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலி உண்டு. சுருக்கமாக சொன்னால், மக்காவிற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எப்படி ஹரமாக ஆக்கினார்களோ, அதேபோல மதீனாவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹரமாக ஆக்கினார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
561 views
9 hours ago
அல்லாஹ்விடம் நாம் கேட்கும் பிரார்த்தனை வெறும் கோரிக்கை மட்டுமல்ல, அதுவே ஒரு சிறந்த இபாதத் (வணக்கம்) ,.. என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
541 views
15 hours ago
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்தார்கள், என்னுடைய திருமண வாழ்க்கையும் ஷவ்வால் மாதத்திலேயே தொடங்கியது." இஸ்லாத்திற்கு முன்பு அரபுகளிடம் ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்வது கெட்ட சகுனம் என்ற மூடநம்பிக்கை இருந்தது. அதை மறுப்பதற்காக ஆயிஷா ரலி அவர்கள் இதை கூறினார்கள். ஷவ்வாலில் திருமணம் செய்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 1423 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
899 views
1 days ago
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு சிறு செய்தி கிடைத்தாலும் சரி, அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (புகாரி: 3461) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.4K views
1 days ago
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் திருப்தி கொள்ளுங்கள், அப்போது நீங்கள் மக்களில் பெரும் செல்வந்தர்களாகத் திகழ்வீர்கள். (சுனன் அல்-திர்மிதி 2305) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.1K views
1 days ago
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ, அவர் நரக நெருப்பில் என்றென்றும் விழுந்து கொண்டே இருப்பார். எவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ, அவர் நரக நெருப்பில் அந்த விஷத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு என்றென்றும் அருந்திக் கொண்டே இருப்பார். எவர் ஓர் இரும்பு ஆயுதத்தால் (கத்தி போன்றவை) தற்கொலை செய்து கொள்கிறாரோ, அவர் நரக நெருப்பில் அந்த ஆயுதத்தைத் தன் கையில் ஏந்தி, தனது வயிற்றில் குத்திக் கொண்டே இருப்பார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: ஸஹீஹுல் புகாரி (5778) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1K views
1 days ago
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறிய ஐந்து முக்கிய உபதேசங்களில் ஒன்றாகும். "அதிக சிரிப்பு இதயத்தை மரணிக்கச் செய்யும்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️