Follow
SHEIK 🌺KSN🌺
@sheikksn
15,767
Posts
17,858
Followers
SHEIK 🌺KSN🌺
635 views
23 hours ago
"விடியற்காலையில் சுபுஹ் தொழுகைக்கு முன் தொழப்படும் இரண்டு ரக்அத் சுன்னத் தொழுகை, இந்த உலகத்தையும், அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
618 views
23 hours ago
மனதில் தோன்றும் முட்டாள்தனமான எண்ணங்கள் அல்லது லேசான குழப்பமான சிந்தனைகளை ஒருவர் செயல்படுத்தாத வரையிலும், அதனைப் பற்றிப் பேசாத வரையிலும் அல்லாஹ் அதனை மன்னித்துவிடுகிறான். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) புகாரி 6664- #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
2.4K views
17 days ago
குர்ஆன் மனிதனை மிகச் சரியான, நேர்மையான வழிக்கு இட்டுச் செல்கிறது. ஈமான் கொண்டு (நம்பிக்கை கொண்டு) நல்லறங்கள் செய்பவர்களுக்குப் பெரிய நற்கூலி (சொர்க்கம்) உண்டு என்ற நற்செய்தியை இந்த வசனம் வழங்குகிறது. திருக்குர்ஆனின் 17-வது அத்தியாயமான சூரா அல்-இஸ்ரா (பனீ இஸ்ராயீல்) 9-வது வசனம் (17:9), #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
7.1K views
26 days ago
தாமதம் மறுப்பு இல்லை, அல்லாஹ் அவசரப்படுவதில்லை, நீங்கள் அவசரப்படுவது போல நீங்கள் கேட்டது இப்போது கிடைக்கவில்லை என்றால், அது உங்களுக்கு கெடுதல் என்று அல்லாஹ்வுக்கு தெரியும். ஆகவே அதைவிட சிறந்ததை தரப்போகிறான். பொறுமையாக இருங்கள். துஆவை நிறுத்தாதீர்கள், தாமதமானாலும் ஏமாற்றம் இல்லை. அல்லாஹ் வாக்கு மாறாதவன். உமது இறைவன் விரைவில் உமக்கு வழங்குவான், நீர் திருப்தி அடைவீர்" [அல்-ளுஹா 93:5] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.4K views
26 days ago
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், “அல்லாஹும்ம அஸ்லம்து வஜ்ஹீ இலைக; வ ஃபவ்வள்து அம்ரீ இலைக; வ அல்ஜஃது ளஹ்ரீ இலைக ரஃக்பதன் வ ரஹ்பதன் இலைக; லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க இல்லா இலைக. அல்லாஹும்ம ஆமன்து பி கிதாபிகல்லதீ அன்ஸல்த; வ பி நபிய்யகல்லதீ அர்ஸல்த” என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (பொருள்: அல்லாஹ்வே! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கி அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய இரவின் கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி) (புகாரி: 247) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
931 views
27 days ago
இறை தியானம், கல்வி, இறை வேதம் ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அளவுக்கு மனிதன் மீது கவிதையின் ஆக்கிரமிப்பு இருப்பது #வெறுக்கப்பட்டதாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.1K views
27 days ago
இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் நோன்பு வைப்பதில் கவனம் செலுத்தி வந்தார்கள். நூல் : திர்மிதி 745 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
3K views
27 days ago
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் நிறைய செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை மரணத்தைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6436) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
1.4K views
27 days ago
பிறருடைய உதவிக்கு நன்றி செலுத்துவது இறைநன்றி உணர்வின் அடையாளமாகும். மனிதர்களுக்கு நன்றி செலுத்துவது இறைவனை மகிழ்விக்கும் ஒரு செயல், நன்றியற்ற தன்மை #ஈமானின்_பலவீனம். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
SHEIK 🌺KSN🌺
4.2K views
28 days ago
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்! நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை! நீங்கள் எதிர்பார்க்காத முறையில்! நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில்! நீங்கள் எதிர்பார்க்காத விதத்தில்! செயல்படுத்தும் ஆற்றலுள்ளவன்! அவனிடமே அடைக்கலமாகுங்கள்! அவன் அளவற்ற அருளாளன்! நிகரற்ற அன்புடையோன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️