நிலவெழும் மாலையில்
நித்தம் ஒரு ஆசைகள்
நெடுநாள் தனிமைகள்
இன்றெனும் துணை சேருமோ
சுடும் தேகத்தின்
உஷ்ணங்கள் யாவும் தணிந்திட
ஒரு முத்தம் போதாது
முத்தத்தின் சத்தங்கள்
விடிந்தாலும் முடியாது
தொடர்ந்திட
பூத்த பூவின் தேனது
மொத்தமாய் வழிந்திட
மொய்க்கும் வண்டது
மோகத்தில் மூழ்கி குளித்து
இளைப்பாறும்
தருணத்திலும்
விரல்கள் ஓயாது
எனை மீட்டிட
தீரா தாகமதை
தீர்த்திடும் நாளது
இந்நாளாகாதோ
என்றே
என் ஆசைகள் கூடி
கனவென ஆகிட
நிலவெழும் மாலைகளில்
நித்தம் ஒரு ஆசைகள் #✍️கவிதை📜