*#நாளை_பானு_சப்தமி. #வாழ்வின்_உயரிய_இடத்திற்கு_செல்ல #நாளைய_தினம்_சூரிய_பகவானை_இப்படி_வழிபாடு_செய்யுங்கள். வேலை சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சினைகளும் விலகி செல்லும்.*
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
பானு என்றால் சூரிய பகவான். சப்தமி என்பது சூரிய பகவானுக்கு உரிய திதி. நாளைய தினம் பிப்ரவரி மாதம் 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி திதி, சூரிய பகவானுக்கு உரிய கிழமை ஞாயிறு. சூரிய பகவானுக்கு உகந்த திதி சப்தமிதிதி. சூரியனுக்கு உகந்த திதி, கிழமை இரன்டும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் சூரிய பகவானை வழிபாடு செய்வது நமக்கு மிக மிக அற்புதமான பலனை தரும்.
🌞
உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அதை சரி செய்து கொள்ள, நாளைய தினம் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம். சில பேருக்கு வேலையே கிடைக்காது. நல்ல வேலை கிடைப்பதிலேயே பிரச்சினை இருக்கும். சில பேருக்கு ப்ரோமோஷன் கிடைப்பதில் vபிரச்சனை இருக்கும். சில பேருக்கு வேலை செய்யும் இடத்தில் எதிரி தொல்லை இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களும் நாளைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்யலாம். வாழ்க்கையில் சீக்கிரம் செல்வந்தர்களாக மாற வேண்டும். ஒரு பெரிய பிரபல்யமாக மாற வேண்டும் என்று முயற்சி செய்பவர்களும் நாளைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்யலாம். நாளை காலை 9:00 மணிக்கு மேல் சூரிய பகவான் வழிபாடு செய்வது சிறப்பு.
🌞
சூரிய பகவானுக்கு உரிய கடவுள் என்றால் அது சிவபெருமான். நாளை சிவன் கோவிலுக்கு சென்று சிவன் கோவிலில் அமர்ந்து sசிவபுராணம் படிப்பது மிக மிக சிறப்பு. சிவன் கோவிலில் இருக்கும் நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு விளக்கு ஏற்றி, வெற்றிலை பாக்கு பூ பழம் வாங்கி கொடுத்து உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். வீட்டிலேயே நீங்கள் வழிபாடு செய்வதாக இருந்தால், கோதுமை மாவில் ஏதாவது பிரசாதம் செய்து வைத்து சூரிய பகவானை மனதார நினைத்து வழிபாட்டை மேற்கொள்வதும் சிறப்பான பலனை கொடுக்கும். இதையெல்லாம் விட நாளை காலை சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
🌞
சூரியனுக்கு உரிய பாடல் ஆதித்ய ஹிருதயம். நாளைய தினம் கட்டாயம் ஒருமுறை ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். உங்களால் முடியும் என்றால் ஒரு முறை ஆதித்ய ஹிருதயம் படியுங்கள். மேலே சொன்ன இந்த சுலபமான வழிபாட்டு முறைகளை mகடைப்பிடித்தாலே போதும். உங்களுக்கு அந்த ஈசனின் அருளும், சூரிய பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
🌞
இதோடு மட்டுமல்லாமல் *நாளை சூரிய பகவானினை வழிபாடு செய்தால், நம்முடைய முன்னோர்களின் சாபமும் விலகும். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்* என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளைய தினம் சூரியனுக்கு உரிய வெள்ளெருக்கு இலையை வைத்து ஒரு பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வீட்டு பக்கத்தில் வெள்ளெருக்கு செடி இருந்தால் அதிலிருந்து ஒரு இலையை மட்டும் பறித்து வரவேண்டும். அந்த இலையில் இருந்து வரும் பால் விஷத்தன்மை கொண்டது.
🌞
ஆகவே ஜாக்கிரதையாக இந்த பரிகாரத்தை செய்யவும். எடுத்து வந்த வெள்ளருக்கை சுத்தமாக கழுவி விட்டு ஒரு தாம்பூல தட்டில் வைத்து அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி சூரிய பகவானை வணங்குங்கள். தெரிந்தோ தெரியாமலோ, முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் விட்டிருந்தால், அல்லது அவர்கள் உயிருடன் வாழ்ந்த சமயத்தில் அவர்களுக்கு ஏதேனும் கெடுதல் செய்திருந்தாலும், அதற்கெல்லாம் மனம் வருந்தி மன்னிப்பையும் கேட்டுக் கொள்ளுங்கள். முன்னோர்களின் சாபம் விலகும். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இந்த வெள்ளருக்கு இலை தீபத்தை ஏற்றலாம். தவறு கிடையாது. நாளை காலை 9:00 மணிக்கு மேலாக, இரவு 9:00 மணிக்கு முன்பாக உங்களுக்கு எந்த நேரம் முடியுமோ அந்த நேரத்தில் இருந்து 1 மணி நேரம் ஒதுக்கி, இந்த வெள்ளருக்கு தீபத்தை ஏற்றி வைத்து, பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.
#📸பக்தி படம் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #✨கடவுள் #🤩Sunday Special💥 #🌻🌻காலை வணக்கம்🌻🌻