கர்ம வீரர் காமராஜ்

பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
804 views
29 days ago
ஸ்ரீ (969)திமுக - அமெரிக்க கூட்டு சதி காமராசரின் ஆட்சி கவிழ்ப்புக்கு காரணம் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. இது அனுமானம் அல்ல. ஆழ்நிலை ஆதாரம் (circumstantial evidence)இதை உறுதி செய்கிறது. "நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், இந்திய சுதந்திர போராளிகளுக்கு ஒத்துழையாமை செய்து, பிரிட்டிஷ் சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி அந்த சர்க்காருக்கு அனுகூலமான நிலையை உண்டாக்க உதவி செய்ததும், பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப் படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன் பட்டு விட்டது." 1944 ல் சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் அண்ணாதுரை அவர்கள் பேசிய இந்த பேச்சு, நீதி கட்சியில் இருந்த காலம் முதல் கிருத்துவ கைக் கூலியாக திராவிடர் இருந்த சம்பவத்தை உறுதி செய்வதாக உள்ளது. இதை அப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த TN சேசன் அவர்கள் பின்னாளில் அவர் எழுதிய நூலில் குறிப்பிட்டு உள்ளார். காமராசர் வீழ்ந்து விடவில்லை.. இந்திய நாட்டில் அமெரிக்க கைக் கூலிகள், உள் நாட்டு கூலிப் படைகளை வைத்தே சதி திட்டம் தீட்டி, சாதித்து காட்டினார்கள். காமராசர் வீழ்த்தப்பட்டார். கூட்டு சதியின் பின்னணி : 1967 க்கு முந்தைய காமராசர் ஆட்சி காலத்தில், தொழில் துறை மந்திரியாக இருந்த வெங்கட்ராமனை சோசலிச நாடான ருசியா அனுப்பி, அங்கு உள்ள தொழில் சாலைகளை பார்வை இட்டு, அதன் அடிப்படையில் மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள் (INDUSTRIAL ESTATE) அமைக்கப் பட்டது. இலவச கல்வி, தொழில் கல்வி இவற்றுக்கு முதல் இடம் கொடுக்கப் பட்டது. 1967. அமெரிக்க, ருசியா இடையேயான பனிப்போர் காலம். தமிழகத்தில் தேர்தல் நேரம். காமராசர் சோசலிஸ்ட் ருசியா மீது நட்பு பாராட்டி இருப்பதை விரும்பாத அமெரிக்கா, அவரை அரசியல் அதிகாரத்தில் இருந்து ஒழித்துக் கட்ட இது தான் சரியான நேரம் என்று கணித்து, அதற்கான ஒரு வியூகம் வகுத்து செயல்படுகிறது. ஏற்கெனவே, காமராஜர் பற்றிய உளவு தகவல்களை, அவரது பிறந்த ஊரான விருதுநகரில் தங்கி இருந்த உளவாளி அமெரிக்காவிற்கு கொடுத்து கொண்டே இருக்கிறான். இப்போது தேர்தல் நேரத்தில், விருதுநகரில் இருக்கும் உளவாளிக்கு, காமராஜரை என்ன விலை கொடுத்தாவது தோற்கடிக்க வேண்டும் என்றும் கட்டளை வருகிறது. அவன் தனித்து நின்று இந்த வேலையை செய்ய முடியாது. அதற்கு உள்நாட்டு தொடர்பு ஒன்று தேவை. அதற்கு அவன் கண்டு எடுத்த உள்நாட்டு ஏஜெண்டு திமுக. இன்றைக்கு மோடி அரசை வீழ்த்த, உள் நாட்டு ஏஜண்டாக ராகுல் காந்தியை தேர்ந்து எடுத்து, அமெரிக்க பண‌ முதலைகள் செய்யும் சதி திட்டங்கள் போன்ற ஒரு சதி திட்டம் அது. உள் நாட்டு ஏஜன்ட்கள் அண்ணா துரையையும் (திமுக founder), கருணாநிதியும், தாய் நாடான பிரிட்டனில் இருந்து இந்தியா வந்து, தமிழ்நாட்டில் மதம் பரப்பும் செயல்படுகளில் மும்முரமாக இருந்த CSI தென்னிந்திய திருச்சபையையும் (வெளிநாட்டு ஏஜெண்டு) கொண்டிருந்த நட்பை மேலும் பலப் படுத்துகிறான் அமெரிக்க உளவாளி. இந்த உள் நாட்டு, வெளி நாட்டு ஏஜெண்டுகள் தேர்தல் களத்தில் இறங்குகிறார்கள். தென் இந்திய கிருத்துவ திரு சபைக்கு காமராசர் மீது ஏன் வெறுப்பு வந்தது? முதலில் காமராசர் ஒரு இந்து என்று நம்பினார்கள். இரண்டாவதாக, அவர்கள் பாரம்பரிய திண்ணை பள்ளிகளை அழித்து விட்டு, ஆங்கில கல்வியை புகுத்தி (macauley கல்வி), சர்ச்கள் நடத்தும் கல்விக் கூடங்கள் மூலம், பால் பவுடர் கொடுத்து செய்து வந்த மத மாற்றத்தை, ஊர்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கட்டி இலவச கல்வி கொடுத்து, மதிய உணவு கொடுத்து கெடுத்திட்ட காமராஜரை தோற்கடிக்க வேண்டும் என்று கருதினார்கள். தேர்தல் செலவினம் செய்யும் அளவுக்கு திமுக அன்று பண பலம் பெற்று இருக்கவில்லை. அதன் தலைவர்கள் அன்றாட சாப்பாட்டுக்கு நாடக கம்பெனிகளைத்தான் நம்பி இருந்தனர். தேர்தலுக்கு செலவாகும் கோடிகணக்கான பணம் செலவழிக்க அந்த அன்னிய சதி கும்பல் உடன்பட்டு இருந்ததாக பேசப்‌ பட்டது. மேலும், இன்றைக்கு நடப்பது போல், அன்றைக்கும், கிறிஸ்துவ ஓட்டுக்களை திருசபைகள் மூலம் திமுக விற்கு திசை திருப்பவும் சம்மதிக்கிறது தென் இந்திய திருச்சபை. இன்று வரை அந்த கூட்டு தொடர்கிறது. தி.மு.க ஆட்சி நாங்கள் போட்ட பிச்சை என்று கிருத்துவ பாதிரி ஜார்ஜ் பொன்னையா பேசும் அளவுக்கு, இது உங்கள் ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கிருத்துவ மேடையில் பேசும் அளவுக்கு, அது வளர்ந்து உள்ளது. அதன் அடிப்படையில் பல பொய் மூட்டைகள் திமுக வால் காமராசருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப் படுகிறது. யார் அந்த அமெரிக்க உளவாளி? நாடார்கள் வரலாறு புத்தகம் எழுதிய Prof. Emeritus Robert Hardgrave தான் அந்த அமெரிக்க உளவாளி. நாடார்கள் வரலாறு எழுதுகிறேன் என்ற பெயரில் இந்தியாவின் கல்விக் கண் திறந்த இமயத்தையே சாய்த்த கொடுங்கோலன் அமரிக்க உளவாளி ராபர்ட் ஹார்டு கிரீவ் தான். அப்போது திமுக திரை படங்கள் மூலம்தான் அரசியல் கருத்துக்களை பரப்பியது. இந்த படங்களுக்கு பண உதவி செய்தது யார் தெரியுமா? அமெரிக்க உளவாளி ராபர்ட் ஹர்டு கிரீவ்தான் என்று கருதும் அளவுக்கு சூழ்நிலை ஆதாரம் இருந்தது. சினிமா பட வேலை என்ற பெயரில் அடிக்கடி அமெரிக்க உளவாளி ராபர்ட் ஹார்டு கிரீவ் சந்தித்த முக்கிய திமுக நபர்கள் கருணாநிதியும், அண்ணாதுரையும்தான். அமெரிக்கா திராவிட கூட்டு சதி கும்பல். காமராசர் வீட்டுக்கு தீ கூட வைத்தார்கள். பசு வதை சட்ட போராட்டம் டெல்லியில் நடந்த போது, அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி இ‌ந்த கும்பல் காமராசர் வீட்டுக்கு தீ வைத்தார்கள். அந்த பழியை இன்று திமுக வின் octopus பிடியில் சிக்கி உள்ள print மற்றும் டிவி ஊடகங்கள் செய்வது போல் ஊடக உதவியுடன் RSS மீது போடும் முயற்சியும் அன்று நடந்தது. இது குறித்து காமராஜர் பேசியதாக நவசக்தி துணுக்கில் வெளி வந்த இந்த வரிகளை தெளிவாக கவனியுங்கள்👇 "குறிப்பாக அவர்களுக்கு, பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமாராஜ் தான் சோஷியலிஸ சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன்தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைக்கிறார்கள். (காமராசரின் அப்போதயருசிய பயணம் கவனத்தில் கொள்ளவும்). என் வீட்டுக்கு தீ வைக்கின்றார்கள். ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன் " பின்னணி என்ன? சோசியலிச நாடான ருசிய நாட்டுடன் காமராசர் நட்பு பாராட்டி இருந்ததை பிடிக்காத அந்த அமெரிக்கா - பிரிட்டன் - திராவிடன் கூட்டணி தான் இந்த சதி வேலையில் ஈடுபட்டது என்பது வெட்ட வெளிச்சம். சோசலிஸ நாடான ரஷியாவுடன் காமராசர் நட்பு கொண்டு, அந்த நாட்டுக்கு சென்று வந்தபின்னர்தான் இந்த சதி நடந்தது என்பது கூடுதல் ஆதாரம். அதுமட்டும் அல்ல, காமராசருக்கு அமெரிக்க நாட்டுக்கு வருமாறு அந்த நாடு விடுத்த அழைப்பை அவர் நிராகரித்து விட்டார் என்பது கூடுதல் தகவல். அதனால் அந்த நாடு காமராசர் மீது நல் எண்ணம் கொண்டு இருக்கவில்லை. சம்பவத்துக்கு பின் காமராசர் பேசியதில், 'குறிப்பாக அவர்களுக்கு' என்ற வார்த்தைக்கு பக்கத்தில் 'ஆர்எஸ்எஸ், பார்ப்பனர்' என்று எழுதி, திரிபு வேலை செய்தார்கள். RSS என்று இடை சொருகல் செய்து, அமெரிக்க agent - திராவிடர் கூட்டு சதியை இந்துக்கள் மீது போடும் முயற்சி செய்யப்பட்டது. இன்று வரை பேசப்பட்டும் வருகிறது. இப்போதுகூட தேர்தல் களத்தில் ஸ்டாலின் அவர்கள் இதை பேசுவதை கேட்க முடிகிறது. ஆர்எஸ்எஸ் என்றால், தேசிய தொண்டர் படை என்று பொருள் படும். இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று நிறுவப் பட்டது. இந்த தேசத்தை தாயாக தெய்வமாக நினைத்து வழிபடும் தேசபக்தர்களைக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமே ஆர்எஸ்எஸ். தேசியம், தெய்வீகம் இரண்டும் இரு கண்கள் என்ற கொள்கை கொண்டது ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் காமராசர் வீட்டுக்கு தீ வைக்கும் அளவுக்கு தீவிரவாத இயக்கம் அல்ல. ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டு ஒழுகும் நன் நடத்தை கொண்ட படை (disciplined army) தான் ஆர்எஸ்எஸ். இஸ்லாமியரும் இந்த இயக்கத்தில் உள்ளனர். எல்லா சாதி மக்களும் இதில் சேர்ந்து பணியாற்ற தடை இல்லை. எல்லா சாதி மக்களும் ஒன்றே குலம் என்ற பார்வையில் இங்கு பார்க்கப் படுகிறார்கள். காமராசர் கொண்டு இருந்த தேசியம் தான் ஆர்எஸ்எஸ் கொள்கையும் கூட. அத்துடன் தெய்வீகம் கொள்கைக்கு காமராசர் எதிரானவர் அல்ல. RSS கோட்‌பாடுகளுக்கு எதிராக காமராசர் இல்லாத போது அவரை கொல்ல RSS ஏன் நினைக்க வேண்டும்? மதத்தால் நீ...இஸ்லாமியனாக இரு, கிருஸ்தவனாக இரு, ஹிந்துவாக இரு, ஆனால் மனதால் இந்தியனாக இரு. இந்தமண்ணின் பாரம்பரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை மதிக்கும் இந்தியனாக இரு... இதைதான் இந்துத்வா என்கிறது ஆர்எஸ்எஸ்..! அன்று காமராசர் அன்னிய சதி கு‌றி‌த்து அறிந்திருக்கவில்லை. இந்திய நாட்டில் அமெரிக்க கை கூலிகள், உள் நாட்டு கூலிப் படைகளை வைத்தே சாதித்து காட்டினார்கள். காமராசர் வீழ்த்தப்பட்டார். இன்றைக்கும் அதே மாதிரி சூழ்ச்சி நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது அமெரிக்க பிரஜைகளான ஹிண்டன்பர்க் விவகாரம் எ‌ன்றாலு‌ம் ச‌ரி, ஜா‌ர்‌ஜ் சோரஸ் விவகாரம் என்றாலும் சரி, கானடா உதவியுடன் டெல்லியில் நடத்தும் விவசாய போராட்டங்கள் ஆனாலும் சரி, உள்நாட்டு வெளி நாட்டு கூட்டு சதி எதுவாக இருந்தாலும் முறியடிக்கும் திறமை மிக்க அரசியல் சாணக்கிய‌ர்க‌ள் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியில் உள்ளனர். அதனால் அவர்களின் பருப்பு இனியும் வேகாது. #கர்ம வீரர் காமராஜ்
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
723 views
3 months ago
ஸ்ரீ (969)#காமராசரைப் பார்க்க.... "சோ" அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது #காமராசர் சோ-வைப் பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் நான் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக் கிறேன், #ஒருநாளாவது உன்னைச் சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா என்று கேட்டுள்ளார். #அதற்கு சோ பரவாயில்லைங்க ஐயா நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி உள்ளார். ஆனால் காமராசர் விடவில்லை. இல்லை இல்லை சொல்லு ஒருநாளாவது சொன்னேனா சொல்லு என்று அதட்டலாகக் கேட்க, இல்லைங்க...சொல்லலை என்று கூறியுள்ளார். அதற்கு #காமராசர் சொன்னாராம்... ஏன் சொல்லலை தெரியுமா? நான் சாப்பிடுற இந்தச்சோறே தமிழக மக்கள் எனக்குப்போடும் பிச்சைச்சோறப்பா... இதில் நான் என்னத்த உனக்கு கொடுக்க...என்றுதான் சொல்லாமலிருந்தேன். நீ தப்பா #நினைச்சுக்காதே என்றாராம். இதைக்கேட்ட சோ அவர்கள் தன்னையறியாமல் அழுதுவிட்டாராம். எப்படிப் பட்ட #தலைவர் என்று எண்ணிப்பாருங்கள். எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படி ஒரு மாமனிதர் கிடைப்பாரா? படித்ததில் பிடித்தது. #கர்ம வீரர் காமராஜ்
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
868 views
5 months ago
ஸ்ரீ (969)🏹🚩"காமராஜர் ஆட்சியில்தான் ஊழலும் தொடங்கியது, க*ள்ளநோட்டுகளும் புழக்கத்தில் வந்தது" என்று அழுத்தம் திருத்தமாக தனது youtube சேனலில் பதிவு செய்துள்ளார், பத்திரிக்கையாளர் முக்தார்.. காமராஜரை ஒருஊழல்வாதி என்று இவர் பதிவு செய்ய ஒருமுக்கிய காரணம் உண்டு.. அது என்ன என்று இந்த பதிவின் கடைசியில் பார்ப்போம்.... காமராஜர் பற்றி இதுவரை யாரும் படிக்காத, பார்க்காத ஒருபக்கத்தை இங்கே பதிவிட விரும்புகிறேன்.. "காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் இ*றந்தவுடன் கண்ணதாசன் ஒருபதிவு செய்கிறார்.. "தனது தாயின் ம*ரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார், பல்லாக்கு கட்டுபவர்கள் இலவசமாக கட்டிக்கொடுக்கிறார்கள்.. வந்தவர்களுக்கு ஒருவேளை சோறு போட இடமும் இல்லை, பணமும் இல்லை. 10 வருஷம் ராஜாங்கம் நடத்தினான் மகன் பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி".. இது கண்ணதாசன் காமராஜரின் தாய் சிவகாமியம்மாள் மறைந்த போது எழுதிய வாக்கியம்.. குமுதம் எழுத்தாளர் மணா மணா அவர்கள் 1995 ஆம் ஆண்டு காமராஜர் பற்றி குமுதம் வார இதழில் எழுத விருதுநகரில் உள்ள காமராஜர் வீட்டிற்கு போய் உள்ளார். அப்போது காமராஜரின் வீடு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.. காமராஜர் வீட்டின் அருகில் இன்னொரு வாடகை வீட்டில் காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாக சொன்னதும், அங்குபோய் உள்ளார் குமுதம் பத்திரிக்கையாளர். இதோ குமுதம் பத்திரிக்கையாளர் மணா மணா அவர்கள் தன் குறிப்பில் பதிவு செய்தவை.. "அது மிக எளிய வீடு.. காமராஜர் மறைந்த பிறகு காமராஜருக்கு "பாரத ரத்னா" விருது கொடுக்கப்பட்ட போது அதைப் பெற்றுக் கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர்கள்தான்.. 63 வயதான காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையின் பிடியில் போயிருந்தார்.. கணவர் இ*றந்து விட அவருடைய மகன்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் ரூ500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. அது மிகக்குறைந்த வருமானம்தான், அதனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க வைத்திருந்தது.. அந்தத்தாய் கமலாதேவி இந்த பத்திரிக்கையாளரிடம் கண்ணீர் மல்க சொன்னது.. "நாங்க ஏழு பேர் இருக்கோம், சாப்பிடவே கஷ்டமா இருக்குதுப்பா.. கஷ்டம் தாங்காமல் கலெக்டர் காலில் கூட விழுந்து அழுது கூட கேட்டுப்பார்த்து விட்டோம் எந்த வேலையும் கிடைக்கவில்லை தம்பி.. என்றபோது அருகில் அமர்ந்திருந்த காமராஜரின் தங்கையான நாகம்மாளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.. தன்மகள் அருகில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, பெருக்கும் வேலை, பாத்திரம் கழுவும் வேலை, துணி துவைக்கும் வேலை செய்து வருகிறார்.. என்று மெல்லிய குரலில் தனது மகளின் நிலை குறித்து சொல்கிறார் காமராஜரின் தங்கை நாகம்மாள்.. பின், கமலாதேவி கையெடுத்து கும்பிட்டபடி குமுதம் பத்திரிக்கையாளரிடம் ஒருவேண்டுகோள் வைக்கிறார்.. "ஐயா, அருகிலுள்ள எங்கமாமா வீடு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.. அந்த வீட்டில், வீட்டை சுத்தம் செய்கிற வேலையாவது வாங்கி கொடுங்கள்,உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்.. அந்த வேலை செய்தாளாவது,கையில் ஐம்பதோ நூறோ கூலியாக கிடைக்கும் இல்லையா?.. ஆனால் எனது தாய் இதை அவமானம் என்கிறார்.. எனது மாமா காமராஜர் இருந்த நேர்மைக்கு கெட்ட பெயர் உண்டாகும் என்றும் கூறுகிறார்.. ஆனால் எங்கள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறபோது எங்கள் மாமா வீட்டை சுத்தம் செய்வதால் என்ன அவமானம் இருக்கப் போகிறது எங்களுக்கு" என்று அழுதபடி ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள், சேலை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டே சொன்னார்.. பத்து ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட ஒரு முதல்வரின் மருமகள் ஒரு பத்திரிக்கையாளரை கையெடுத்து கும்பிட்டு உதவி கேட்ட போது.. அந்த சூழ்நிலையில் உடல் எல்லாம் முள் குத்துவது போல உணர்ந்தேன் என்று பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் மணா மணா. பின் 1995 ஆம் ஆண்டு மே மாதத்தில் குமுதத்தில்.. "வீட்டு வேலை செய்யும் காமராஜரின் மருமகள்" என்ற தலைப்பில் பத்திரிகையாளரின் கட்டுரை வெளியானது.. குமுதத்தில் இந்தக்கட்டுரை வெளிவந்த மறுவாரத்தில் ஒருஆச்சரியம் நிகழ்ந்தது.. அப்போது முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா அவர்கள் காமராஜரின் குடும்பத்திற்கு ஒரு சொந்த வீடும்,அரசு வேலையும், அந்த குடும்பத்தின் பெயரில் வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட் பண்ணுவதாகவும் அறிவித்தார்.. இந்த மகிழ்ச்சியான தகவலை விருதுநகரில் உள்ள கமலாதேவியின் வீட்டிற்கு நேரில் சென்று சொல்ல,சென்றார் பத்திரிக்கையாளர் மணா மணா, இந்த பத்திரிக்கையாளரை கண்டவுடன் அந்த குடும்பத்தினர் அனைவரும் கையெடுத்து கும்பிட்ட படி கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள்.. அப்போது தனது பிறவிப் பயனை அடைந்ததாக அந்த பத்திரிகையாளர் பதிவுசெய்துள்ளார்.. ஒரு பத்திரிக்கையாளரின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.. 1967-ல் நடந்த தேர்தலில் காமராஜர் தோற்கவில்லை, மக்கள் தோற்று விட்டோம்.. என்பதுதான் நிதர்சனமான உண்மை.. காமராஜர் ஆட்சி, ஊழல் செய்தார் என்றால் தன் குடும்பம் அல்லவா செல்வாக்காக வாழ்ந்திருக்க வேண்டும்.. காமராஜர் ஆட்சியில் அவர் கண் முன் தெரிந்து எந்த தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நாம் சொல்லலாம்.. சரி, முக்தார் ஏன் அவ்வாறு பதிவு செய்கிறார் என்று பார்ப்போம்.. சிலமாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் முக்தார் பற்றிய ஒரு வீடியோ வைரலானது.. ஒரு மிகப்பெரிய பாரில் இன்றைய பல போலிபத்திரிக்கையாளர்கள் ஒன்றாக இருந்தார்கள்,மது அருந்தியப்படியான வீடியோ அது.. பலர் பார்த்திருப்பீர்கள்.. அதில் முத்தாரும் ஒருவர்.. அதில் அவர் பேசியிருந்தது "யாரின் பெயரை கெடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறி என்னிடம் பணம் கொடுத்தால், அதை நான் சிறப்பாக செய்வேன்' என்று சிரித்தபடி கூறினார்" நாங்கள் சொல்வதை எல்லாம் மக்கள் வேதவாக்கு போல் நம்புகிறார்கள் என்று மற்றொரு பத்திரிகையாளர் கூறினார்".. இப்போது நம்நாட்டில்,இந்த சமுதாயத்தில் சத்தம் இல்லாமல் வரலாற்றை மாற்றும் வேலை நடந்து வருகிறது.. அதற்காக பல்லாயிரம் கோடிகளும் செலவு செய்யப்பட்டும் வருகிறது.. என்று சமுதாயத்தை நேசிக்கும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன்பதிவிட்டு வருகிறார்கள்.. உதாரணமாக நம்மிடம் அரசியல்வாதிகள் சொல்வது காமராஜரின் ஆட்சியை நான் அமைப்பேன் என்று.... அந்த பிம்பம் உடைய வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.. இதற்காகவே பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பலர் பேர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள்.. ஆனால் அவர்கள் எல்லாம் ஒன்றை மட்டும் மறந்து விட்டார்கள்.. "பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை.. உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை" என்பதை.. என்னுடைய கருத்தாக அனைத்து உறவுகளுக்கும் இங்கு நான் இறுதியாக சொல்வது.. நேதாஜி அவர்கள் சொன்னதைத்தான்.. "ஒரு கட்சியின் பின்னால் நின்று கொண்டு அந்தக் கட்சி சொல்வதற்கெல்லாம் சரி என்று தலையாட்டுவது என் செருப்பிற்கு சமம்" என்பதை மனதில் வைத்துக் கொண்டு இணையத்தில் வரும் இதுபோன்ற தவறானசெய்திகளை ஆராய்ந்து பார்த்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.. (pic Help-AI) நன்றி.. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.. சத்தியவர்மன்.VN. (Aththanoortex) #கர்ம வீரர் காமராஜ்